மேலும் அறிய

தஞ்சை ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் திறப்பு

10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகளை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் திறந்து வைத்தார்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்

தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. சோழர்களின் தலைநகரமாய் விளங்கியது. மேலும் உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் என அழைக்கப்படும் பெருவுடையார் கோயில் அமைந்த மாநகரம்தான் தஞ்சை.  உலகப் புகழ் பெற்ற சரசுவதி மகால் நூலகத்தைத் தன்னகத்தே கொண்டது. இந்நூலகத்தில் காணக்கிடைக்காத மிக அரிய ஓலைச் சுவடிகள் நூற்றுக் கணக்கில் திரட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. உலகில் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் தஞ்சாவூரில் உள்ளது. தஞ்சாவூர் ஓவியங்களும், கலைத்தட்டுக்களும் உலகப் புகழ் பெற்றவை. மேலும், தஞ்சாவூர்த் தலையாட்டிப் பொம்மையும் மிகவும் புகழ் பெற்றது.


தஞ்சை ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் திறப்பு

தென்னகப்பண்பாட்டு மையம்

கலை மற்றும் பண்பாட்டினை வளர்ப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தென்னகப் பண்பாட்டு மையம் தஞ்சாவூரில் தான் அமைந்துள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த தஞ்சாவூருக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் ரயிலில் வருகின்றனர். இதனால் தஞ்சாவூர் ரயில் நிலையம் எப்போதும் பயணிகளால் நிறைந்து காணப்படும். 

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் என பலவாறாக அழைக்கப்படும் இந்தக் கோயில் உலகமே வியக்கும் அளவுக்கு கம்பீரமாய் நிற்கிறது. சோழ நாட்டில் பரந்து விரிந்தோடும் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இது, 10ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் கட்டிய இதை பல்லாயிரக்கணக்கானோர் வந்து, ஆண்டுதோறும் பார்த்து பிரமித்து போகும் அளவுக்கு இதன் சிறப்புகளும் உயர்ந்து நிற்கிறது. இது நாட்டில் உள்ள மிகப் பெரிய கோயில்களில் ஒன்று.


தஞ்சை ரயில் நிலையத்தில் புனரமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் திறப்பு

ரயில் நிலையத்தில் ஓய்வறைகள் புனரமைப்பு

நகரின் மையப் பகுதியில் உள்ளதால் ஆண்டுதோறும் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். பிற மாநிலங்களில் இருந்து ரயிலில் வரும் பயணிகள் தங்குவதற்கு ரயில் நிலையத்தில் ஓய்வறைகள் உள்ளன. பழுதடைந்த நிலையில் இருந்த இவற்றை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புரனமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வறைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கும் வகையில் ஓய்வறைகள் ஏற்கெனவே தெற்கு ரயில்வே நிர்வாகத்தால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

இந்த ஓய்வறைகள் மழைகாலங்களில் ஆங்காங்கே மழைநீர் கசிந்து பழுதானதையடுத்து, அதை புனரமைக்கும் பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்து வந்தது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, இதன் பராமரிப்பு ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்படைத்தது.

10 குளிரூட்டப்பட்ட அறைகள் திறப்பு

அதன்படி 10 குளிரூட்டப்பட்ட அறைகள் புனரமைக்கப்பட்டு, அதனை பயன்பாட்டுக்கு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளார் அன்பழகன் திறந்து வைத்தார். அதேபோல் தஞ்சாவூர் ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பில் புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு அதனையும் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகள் செந்தில்குமார், ரவிக்குமார், வினோத்குமார், பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK
தவெகவில் செங்கோட்டையன்?விஜய் வழங்கும் முக்கிய பதவி!OPERATION கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget