மேலும் அறிய

அக்யூஸ்ட்டுக்கு ஆதரவா? இன்ஸ்பெக்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

டூ வீலரில் கடைத்தெருவுக்கு வந்த, தீர்க்கரசுவை நான்கு பேர் கொண்ட மர்மக்கும்பல் பல இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

தஞ்சாவூர்: விவசாயியை வெட்டிய கும்பலுக்கு ஆதரவு கொடுக்கும் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் போலீஸ் ஸ்டேஷன் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் ஆம்பலாபட்டு பகுதியை சேர்ந்தவர் தீர்க்கரசு (54).  விவசாயி. இவர் தனது சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை, அடமானம் வைத்துக்கொண்டு, ஏழு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என, பாப்பாநாட்டை சேர்ந்த திருகுமாரிடம் (50) கேட்டுள்ளார் இதற்கு திருகுமார், நிலத்தினை கிரயம் செய்துக்கொடுத்து விட்டு, பணத்தை பெற்றுக்கொள்ளவும். பணம் தந்த பிறகு, நிலத்தை மீண்டும் எழுதி தருவதாக தீர்க்கரசிடம் கூறி, நிலத்தை எழுதி வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்தார். 

சில மாதங்களுக்கு பிறகு, தீர்க்கரசு வட்டியுடன் பணத்தை திருகுமாரிடம் கொடுத்து விட்டு, நிலத்தை மீண்டும் தன் பெயருக்கு பத்திரம் செய்து தர கேட்டார். இங்குதான் தீர்க்கரசுவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால், நிலத்தை தர முடியாது என திருகுமார் கூறிதால், இருவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. 

இந்நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு இந்த பிரச்சினை தொடர்பாக தீர்க்கரசு, திருகுமார் வீட்டில், பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இது தொடர்பான வழக்கில் தீர்க்கரசு கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இரண்டு மாதங்களுக்கு முன்பு  ஜாமீன் பெற்று  சிறையில் இருந்து தீர்க்கரசு ஊருக்கு திரும்பினார். 

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை, டூ வீலரில் கடைத்தெருவுக்கு வந்த, தீர்க்கரசுவை நான்கு பேர் கொண்ட மர்மக்கும்பல் பல இடங்களில் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீர்க்கரசுவை மீட்டு தஞ்சாவூர் மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அன்று இரவே இந்த சம்பவத்திற்கு காரணமான  திருக்குமாரை கைது செய்ய கோரி ஆம்பலாபட்டு கிராம மக்கள் இரண்டு மணிநேரம்ட சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும், திருகுமாரால், தீர்க்கரசு உயிருக்கு ஆபத்து இருப்பதாக, பாப்பாநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபனிடம் கிராம மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் புகார் அளிக்கும் நபர் குறித்து திருகுமாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலின் பேரில் புகார் அளித்தவரை திருகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தீர்க்கரசு வெட்டுப்பட்டதற்கும் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தான் காரணம். அவர் மீது நடவடிக்கை வேண்டும், தீர்க்கரசுவின் நிலத்தை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என கோரி, பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷ்னை முற்றுகையிட்டு ஆம்பலாபட்டு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்த தஞ்சாவூர் ஏ.டி.எஸ்.பி., வீரபாண்டி, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரப்படும். குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தால் போராட்டத்தை கிராமமக்கள் கைவிட்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் இதுவரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
New Renault Duster Testing: யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
Embed widget