மேலும் அறிய

குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சுவர் இடிந்து விழுந்தது - அரவைப்பணிகள் நிறுத்தம்

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சுவர் இடிந்து ட்ரான்ஸ்பார்மரில் விழுந்தது. இதனால் நேற்று அரவை பணிகள் நிறுத்தப்பட்டன.

தஞ்சை- புதுக்கோட்டை வழித்தடத்தில் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலை தொடங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான 2 கரும்பு ஆலைகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.. இந்த சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 2022 – 23 ம் ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் கடந்த நவம்பர் 23ம் தேதி தொடக்கி வைக்கப்பட்டது. தற்போது அரவை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், கரும்பாலை கழிவுகளை சேமித்து வைக்கக்கூடிய பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகள் அருகில் அமைக்கப்பட்டு இருந்த ட்ரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதில், ட்ரான்ஸ்பார்மர் சேதமடைந்தது.

இதனால் மின்சாரம் தடைப்பட்டு அரவை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டது. அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் தேக்கமடைந்தது. இருப்பினும் சுவர் விழுந்த பகுதியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் இல்லை. தொடர்ந்து சேதமடைந்த ட்ரான்ஸ்பார்மை பணியாளர்கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சுவர் இடிந்து விழுந்தது - அரவைப்பணிகள் நிறுத்தம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "சா்க்கரை ஆலையில், கரும்பாலைக் கழிவு (மொலாசஸ்) உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கரும்பாலைக் கழிவு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு பொது ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகத்தின் ஏல தொகையை வழங்க முடியாத சூழலில், கரும்பாலை கழிவுகளை எடுக்க முன்வரவில்லை. இதனால், கரும்பாலை அதிகளவில் தேக்கமடைந்து, சுவரின் தன்மை மாறி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட காரணமாகி விட்டது" என்றனர்.

இந்த கரும்பு ஆலைக்காக முன்பு ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடியை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்போது அந்த சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. பணம் வழங்குவதில் காலதாமதம் உட்பட பல்வேறு காரணங்களால் கரும்பு பயிரிட்டு வந்த விவசாயிகள் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு மாறி வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆலைக்கரும்புக்கு உற்பத்தி செய்வதை விட்டு மக்காச்சோளம், கடலை என்று மாற்றுப்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.

முன்பு 25 ஏக்கர், 50 ஏக்கர் என்று கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அதனை 15 ஏக்கர், 10 ஏக்கர் என்ற அளவில் மாற்றிக் கொண்டு விட்டனர் என்றும் கரும்பு விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வருட பயிரான கரும்பை சாகுபடி செய்து அரவைக்கு அனுப்பி அங்கிருந்தும் ஆண்டுக்கணக்கில் பணம் வராமல் வட்டிக்கு வட்டி கட்டி அவஸ்தை அடைவதை விட மாற்றுப்பயிர் செய்து மகசூல் செய்த உடனேயே பணம் கிடைத்து விடுவதால் பல விவசாயிகள் கரும்பு சாகுபடியை மாற்றி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget