மேலும் அறிய

விடாத மழை... வடியாத தண்ணீர்: 1000 ஏக்கரில் நெற் பயிர்கள் பாதிப்பு எங்கு தெரியுங்களா?

தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இந்த கனமழையால் மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கரில் நெல் சாகுபடி நீரில் மூழ்கி உள்ளது.

தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் மழைத்தண்ணீர் புகுந்தது. இளம் தாளடி சாகுபடி பயிர்களும் நீரில் மூழ்கின. இதேபோல் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மதகரம் பகுதியில் மழை நீரில் நெற் பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கர் அளவிற்கு நெல் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை முதல் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் டெல்டா மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.  

இதே போல் தஞ்சாவூர், திருவையாறு, அம்மாபேட்டை, சாலியமங்கலம், பாபநாசம், வல்லம், செங்கிப்பட்டி, கும்பகோணம், அய்யம்பேட்டை, திருவையாறு, கண்டியூர், பள்ளி அக்ரஹாரம், பூதலூர் அதிராம்பட்டினம் திருக்காட்டுப்பள்ளி, திருவிடைமருதூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கணக்கீடு எடுக்கும் பணியில் வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.


விடாத மழை... வடியாத தண்ணீர்: 1000 ஏக்கரில் நெற் பயிர்கள் பாதிப்பு எங்கு தெரியுங்களா?

தஞ்சாவூர் மாவட்டம் திட்டை சூரக்கோட்டை ஒரத்தநாடு பாபநாசம் மெலட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் பாதிப்படைந்துள்ளது. அதேபோல் சுமார் 100 ஏக்கருக்கு மேல் வாழை சாகுபடியும் பாதிப்படைந்துள்ளது.

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர் மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் 800-க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளும் உள்ளது. சுமார் 5,000 மேற்பட்ட மீனவர் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கனமழை எச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சையில் கனமழையால் பயன்பாட்டில்லாத பெருமாள் கோவிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. தஞ்சாவூர் அரண்மனையை அடுத்துள்ள தாஸ்தமால் சந்தில் பழமைவாய்ந்த பெருமாள் கோவில் இருந்தது. செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் புதர் மண்டி காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தஞ்சையில் தொடர்ந்து இடைவிடாமல் பெய்து வரும் கனமழையால் கோவிலின் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி பணியாளர்கள் இடிபாடு பகுதியை அகற்றி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் பழுதடைந்த மற்ற பகுதிகளையும் பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Embed widget