மேலும் அறிய

தஞ்சை பாரத் கல்வி குழுமத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்

இத்தகைய பொங்கல் பண்டிகையை பாரத் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை, பாரத் மகளிர் மன்றம் மற்றும் ஐக்யூஏசி ஆகியவை இணைந்து பாரத் பொங்ல் விழாவாக நடத்தின.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பாரத் கல்வி குழுமத்தில் நேற்று பாரத் பொங்கலோ பொங்கல் 2024 நிகழ்ச்சி 14 வது ஆண்டாக நடந்தது. இதில் பாரம்பரிய முறைபடி மாணவிகள் சேலை அணிந்தும், மாணவர்கள் வேட்டி அணிந்து பங்கேற்று பொங்கல் வைத்தனர்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பாரத் கல்வி குழுமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் விழா சிறப்பாக நடந்து வருகிறது அந்த வகையில் இந்த ஆண்டு 14ஆம் ஆண்டாக பாரத் பொங்கலோ பொங்கல் 2024 நிகழ்ச்சி நடந்தது. தமிழ் மாதத்திலே மிக சிறப்பு வாய்ந்த மாதமாக விளங்குகிறது தை மாதம். தமிழர் திருநாளான தை பொங்கலை அறுவடை திருநாளாக கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

போகி பொங்கல், தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல் ஆகும். இந்த நான்கு தினங்களுக்கும் தனி தனி சிறப்பு பெயர் உள்ளது. தமிழர்கள் எத்தனை வகையான விழாக்கள் கொண்டாடினாலும் முதன்மை பெற்றுள்ளது இந்த பொங்கல் பண்டிகை. பொங்கல் அன்று அனைவரும் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தால் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி அறிதலையே பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விவசாயிகளின் செல்ல பண்டிகை என்றால் மிகையில்லை. அவர்கள் அறுவடை செய்த  நெல்லை அரைத்து, அரிசி எடுத்து, பால்,நெய் சேர்த்து, பானையில் இட்டு அடுப்பில் கொதிக்க வைத்து, பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து தாங்களும் உண்டு, இன்பம் அடையும் விழாவே பொங்கல் திருநாளாகும்.


தஞ்சை பாரத் கல்வி குழுமத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா உற்சாக கொண்டாட்டம்

இத்தகைய பொங்கல் பண்டிகையை பாரத் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை, பாரத் மகளிர் மன்றம் மற்றும் ஐக்யூஏசி ஆகியவை இணைந்து பாரத் பொங்ல் விழாவாக நடத்தின. கிராமிய மணம் மாறாத தமிழர் திருநாளை கொண்டாடும் வகையில்  மாணவ மாணவிகள் 35 குடில்கள் அமைத்து இருந்தனர். முன்னதாக  சிறப்பு விருந்தினர்கள், மாணவ, மாணவிகள் முளைப்பாரி, பூரண கும்பத்துடன்பொங்கல் பானைகளை மேள,தாளத்துடன் எடுத்து வந்தனர். அவர்களை கிராமிய நடனத்துடன் மாணவ மாணவிகள் வரவேற்றனர்.

நிகழ்ச்சிக்கு கல்லூரி இயக்குனர் முனைவர் வீராசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பாரத் கல்வி குழும செயலாளர் புனிதா கணேசன், நாடிமுத்து நினைவு அறக்கட்டளை அறங்காவலர் விக்ரம் சூரிய பிரசாத், பக்கிரி சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கல்லூரி செயலாளர் புனிதா கணேசன் முதல் குடிலில் பொங்கல் அடுப்பை பற்றவைத்தார். இதையடுத்து மற்ற குடில்களிலும் மாணவ, மாணவிகள் பாரம்பரிய முறைப்படி கரும்புகள் வைத்து மஞ்சள் கொற்று சுற்றப்பட்ட பானைகளில் பொங்கல் வைத்துதமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை விமர்சையாக கொண்டாடினர். முக்கியமாக இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் வகையில் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மாணவ, மாணவிகளின் கும்மியாட்டம், சிலம்பாட்டம், நாட்டுப்புற நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.  நிறைவாக ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை தலைவர் சுபா நன்றி கூறினார்.

தங்கள் தலைமுறை மட்டுமின்றி இனி வரும் தலைமுறையினரும் பொங்கல் பண்டிகையின் பெருமையை அறிந்து கொள்ளும் வகையில் பாரத் கல்விக்குழும செயலாளர் புனிதாகணேசன் இத்தகைய சமத்துவ பொங்கல் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget