மேலும் அறிய

தஞ்சாவூர்: வீட்டுமனை பட்டா மாற்ற 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்...!

’’ரசாயனம் தடவிய 9 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஆனந்தன் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்’’

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள ராஜராஜன் நகரை சேரந்தவர் ஆனந்தன் (35). என்ஜினீயரான இவர் தன்னுடைய பெயரிலும், தனது தாயார் பெயரிலும் உள்ள மூன்று மனைகளை வரன்முறைப்படுத்த தஞ்சை பனகல் கட்டிடத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விண்ணப்பம் கொடுத்திருந்தார். இந்த விண்ணப்பத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை ஆணையராகவும், அலுவலக மேலாளராகவும் பணியாற்றும் சாமிநாதன் (55) என்பவர் பரிசீலனை செய்தார். அப்போது சாமிநாதன், மனையில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளது, இதனை சீர் செய்து, மனைகளை வரன்முறைப்படுத்த வேண்டுமானால், ஒரு மனைக்கு 3 ஆயிரம் வீதம், மூன்று மனைக்கு 9 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். என்ஜினியர் ஆனந்தன், லஞ்சம் அதிகமாக கேட்கின்றீர்கள், கொஞ்சம் குறைத்து கேளுங்கள், அதனை தருகிறேன் என்றார். இதற்கு அதிகாரி சாமிநாதன் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் தினந்தோறும் அலைகழித்த நிலையில், வேறு வழியில்லாமல் இருந்தார்.


தஞ்சாவூர்: வீட்டுமனை பட்டா மாற்ற 9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கையும் களவுமாக சிக்கினார்...!

இதனால் மனவேதனையடைந்த ஆனந்தன், தனது மனைக்கு வரன்முறைப்படுத்த, நான் ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று, ஆனந்தனுக்கு லஞ்சம் கொடுக்க மனமில்லாததால், தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகாரளிக்க முடிவு செய்தார். அதன்படி, ஆனந்தன், தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுரையின்படி, போலீசார் ரசாயன தடவிய பணத்தை கொடுத்தனர். இதனை தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் சாமிநாதன் கேட்ட 9 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஆனந்தன் தஞ்சை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு அலுவலகத்தில் இருந்த சாமிநாதனிடம்,  ஆனந்தன்  லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன தடவிய பணத்தை கொடுத்தார். அதனை சாமிநாதன் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த தஞ்சை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் சாமிநாதனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதே தஞ்சாவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதால், கையும் களவுமாக பிடிபட்டார்.

பொது மக்கள் வீட்டுமனைகளை, கடன்களை வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும் வாங்கி விட்டு, அதிகாரிகள் பல்வேறு குளறுபடிகள், பிரச்சனைகள் உள்ளது என அலைகழித்து, அவர்களிடம், கை நிறைய சம்பளம் வாங்கும் அதிகாரிகள்,  லஞ்சம் வாங்குவது மிகவும் வேதனையான செயலாகும். இது போன்ற அதிகாரிகளை, பணி நீக்கம் செய்து, வேறு எந்த அதிகாரியும், இனி வருங்காலத்தில், லஞ்சம் வாங்காதவாறு, உரிய தண்டனை வழங்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
KKR Mentor Bravo: ட்விஸ்ட்! கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக ப்ராவோ நியமனம் - பேரதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
TVK Vijay : “தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
“தமிழ்நாட்டின் 2வது பெரிய சக்தி விஜய்” திருமாவளவன் கருத்தால் பரபரப்பு..!
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
மசாஜ் சென்டர் சோதனை - ஜன்னல் வழியாக தப்ப முயன்ற பெண்கள்: சென்னையில் பரபரப்பு
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Embed widget