மேலும் அறிய

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற ஊராட்சி கவுன்சிலர் - கையெழுத்தை போலியாக போட்டு பணமோசடி செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் வெளிநாடு சென்ற நிலையில் அவர் கையெழுத்தை போலியாக போட்டு தென்னாம்பட்டினம் ஊராட்சி மன்றத்தில் மோசடி நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த தென்னாபட்டினம் ஊராட்சி மன்றத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த சரளா கோபால கிருஷ்ணன் என்பவர் பதவி வகித்து வருகிறார். மொத்தம் ஒன்பது வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக அந்த ஊராட்சியின் 4 வது வார்டு உறுப்பினர் பரணி கண்ணன் என்பர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற ஊராட்சி கவுன்சிலர் - கையெழுத்தை போலியாக போட்டு பணமோசடி செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்
போலி கையெழுத்து

இதுகுறித்து தென்னாம்பட்டினம் ஊராட்சியின் 4 ஆவது வார்டு உறுப்பினர் பரணி கண்ணன்  கூறுகையில், சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த தென்னாம்பட்டினம் ஊராட்சியில் அதிமுக, திமுக, பாமக, சுயேட்சை என மொத்தம் 9 வார்டு உறுப்பினர்கள் தேர்வாகிதாகவும், இதில் 6 ஆவது வார்டு உறுப்பினரான செந்தமிழ் செல்வன் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்யாமல் வெளிநாட்டிக்கு வேலைக்கு சென்று விட்டதாகவும், அதில் இருந்து தற்போது வரை சுமார் 5 மாத காலமாக ஊராட்சி சார்ந்த தீர்மானங்களில் வெளிநாட்டில் உள்ள செந்தமிழ் செல்வன்  கையெழுத்தை  போலியாக போட்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

ஊராட்சி மன்ற தலைவர்
ஊராட்சி மன்ற தலைவர்

 

மேலும், இது குறித்து கேள்வி எழுப்பும் ஒரு சில வார்டு உறுப்பினர்களுக்கு  ஊராட்சி மன்ற தலைவர் கையாடல் செய்யும் பணத்தில் பங்கு வழங்குவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்னை போன்ற ஊராட்சி உறுப்பினர்களை மீரட்டுவதும், தாங்கள் தேர்வாகியுள்ள வார்டுகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை எதையும் செய்து தராமல் அலைக்கழிப்பு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

 

வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற ஊராட்சி கவுன்சிலர் - கையெழுத்தை போலியாக போட்டு பணமோசடி செய்யும் ஊராட்சி மன்ற தலைவர்
செந்தமிழ் செல்வன் 

மக்கள் வரிபணத்தை மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை செய்யாமல்,  செய்ததாக தீர்மானம் இயற்றி அதில் போலி கையெழுத்து இட்டு  மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்றும், பதவியை ராஜினாமா செய்யாமல் வெளிநாட்டிக்கு சென்றவரை ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி  வேண்டிய சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலரும் இது குறித்து புகார் அளித்தும் அவரும் ஊராட்சி மன்ற நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், 

 

4 வந்து வார்டு உறுப்பினர் பரணி கண்ணன்
4 வந்து வார்டு உறுப்பினர் பரணி கண்ணன் 

 

மாவட்ட ஆட்சியர் இதனை கவனத்தில் கொண்டு இது போன்று மக்கள் வரி பணத்தை கொள்ளையடிப்பர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து ஊழல் வாதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற தனது பதவியை ராஜினாமா செய்யாமல் வெளிநாட்டிக்கு வேலைக்கு சென்ற நிலையில் அவர் கையெழுத்தை போட்டு மோசடியில் ஈடுபட்டு வரும் நிகழ்வு இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயக்க மருந்து கூல்ட்ரிங்ஸ்... இளம்பெண்ணுக்கு 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை: கவுன்சிலர் மகன் கைது!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget