மேலும் அறிய

இயற்கை வேளாண்மை சாகுபடி செய்ய வேண்டும்...தஞ்சாவூர் கலெக்டர் அறிவுறுத்தல்

அரசின் இயற்கை வேளாண்மை திட்டமான தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில்  பயன்பெற்ற அங்கக விவசாயிகளுக்கு அரசின் ஊக்க தொகையை கலெக்டர் வழங்கினர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இன்று மண்டல அளவிலான இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடந்தது. 

இயற்கை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பெங்களூரில் அமைந்துள்ள மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மையம், தமிழ்நாடு அரசு விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை, தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம் தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தால் மண்டல அளவிலான இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடைபெற்றது.

கருத்தரங்கில் தஞ்சாவூர் விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.  மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பேசுகையில்,  தஞ்சாவூர் மாவட்டத்தில் மிக குறைந்த பரப்பாக இருந்தாலும் அதிக விவசாயிகள் இயற்கை வேளாண்மை இடு பொருட்கள் பயன்படுத்தி இயற்கை வேளாண்மை சாகுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.  தொடர்ந்து அரசின் இயற்கை வேளாண்மை திட்டமான தேசிய உயிர்ம உற்பத்தி திட்டத்தில்  பயன்பெற்ற அங்கக விவசாயிகளுக்கு அரசின் ஊக்க தொகையை கலெக்டர் வழங்கினர்.


இயற்கை வேளாண்மை சாகுபடி செய்ய வேண்டும்...தஞ்சாவூர் கலெக்டர் அறிவுறுத்தல்

சிறப்பு விருந்தினராக பெங்களூர் மண்டல உயிர்ம மற்றும் இயற்கை வேளாண்மை மைய இயக்குனர் முனைவர் வர்மா கலந்து கொண்டார். தொடர்ந்து ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் முனைவர் சுப்ரமணியம், ஈச்சங்கோட்டை டாக்டர் எம் எஸ் சாமிநாதன் வேளாண்மை கல்லூரி  முதல்வர் முனைவர் ஜெகன்மோகன், சென்னை விதை சான்றளிப்பு இணை இயக்குனர் தபேந்திரன்,  தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் வித்யா, சென்னை உயிர்மச்சான்றளிப்பு துணை இயக்குனர் ஜோதிலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இயற்கை வேளாண்மையில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து சென்னை தலைமைச் செயலக சிறப்பு திட்ட செயலாக்கு துறை செயற்பொறியாளர் பிரிட்டோராஜ் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து உயிர்மச்சான்று பெற்ற பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்த தலைப்பில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலைய தலைமை நிர்வாக அதிகாரியும், உணவு இடைவேளைக்கு பிறகு தஞ்சாவூர் நிப்டம் நிறுவனத்தின் இணை பேராசிரியர் முனைவர் வின்சென்ட் ஹேமா காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்து கருத்தரங்கில் தொழில்நுட்ப உரையாற்றினர்.

தொடர்ந்து நிப்டமில் உள்ள உணவு பதப்படுத்தும் தொழில் காப்பு நிலையத்தினை கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகள் பார்வையிட்டனர். ,இதில் ஏராளமான விவசாயிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மை கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கண்காட்சி அரங்கில் பாரம்பரிய நெல் ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்களை குறிப்பிட்ட பதாகைகள், இயற்கை சாகுபடி செய்ய தேவையான இடுபொருள்கள் மற்றும் அறிவிக்க செய்யப்பட்ட உயர் விளைச்சல் தரக்கூடிய சன்னரக நெல் ரகங்கள்  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் ரகங்கள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட சாம்பிராணி, விபூதி, நாட்டு மாட்டு பாலில் தயாரான இனிப்பு போன்றவற்றை விவசாயிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். விவசாயிகளின் சந்தேகங்கள் குறித்து விதை சான்று மற்றும் விதை சான்றளிப்பு துறை அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். தஞ்சாவூர் விதைச்சான்று அலுவலர் சங்கவி  நன்றி கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை டீன் பதவி சிக்கல்: போலி நியமனம், தரமற்ற செயல்பாடு! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!
அண்ணா பல்கலை டீன் பதவி சிக்கல்: போலி நியமனம், தரமற்ற செயல்பாடு! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
Gambhir: யாருகிட்ட வேணும்னாலும் சொல்லு.. மைதானத்திலே கம்பீர் சண்டை - மல்லுகட்டும் வீடியோ வைரல்!
Gambhir: யாருகிட்ட வேணும்னாலும் சொல்லு.. மைதானத்திலே கம்பீர் சண்டை - மல்லுகட்டும் வீடியோ வைரல்!
Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை டீன் பதவி சிக்கல்: போலி நியமனம், தரமற்ற செயல்பாடு! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!
அண்ணா பல்கலை டீன் பதவி சிக்கல்: போலி நியமனம், தரமற்ற செயல்பாடு! ஆசிரியர்கள் சங்கம் அதிரடி கோரிக்கை!
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
Gambhir: யாருகிட்ட வேணும்னாலும் சொல்லு.. மைதானத்திலே கம்பீர் சண்டை - மல்லுகட்டும் வீடியோ வைரல்!
Gambhir: யாருகிட்ட வேணும்னாலும் சொல்லு.. மைதானத்திலே கம்பீர் சண்டை - மல்லுகட்டும் வீடியோ வைரல்!
Modi Vs EPS: காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
காத்துக் கிடந்த இபிஎஸ், கண்டுகொள்ளாத மோடி; அப்செட்டில் அதிமுக.!! அப்போ கூட்டணி அம்பேலா.?
IND VS ENG: கடைசி டெஸ்ட் நடக்கும் ஓவல்.. இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வரலாறு இதான் ப்ரோ
IND VS ENG: கடைசி டெஸ்ட் நடக்கும் ஓவல்.. இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வரலாறு இதான் ப்ரோ
Loan Forgery: போலி ஆவணங்கள் தயாரித்து , ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் ரூ.3 கோடி கடன் வாங்கி மோசடி
Loan Forgery: போலி ஆவணங்கள் தயாரித்து , ஆள் மாறாட்டம் செய்து வங்கியில் ரூ.3 கோடி கடன் வாங்கி மோசடி
சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்
சாதிய அருவருப்பின் அட்டூழியம்.. நெல்லை ஆணவக்கொலை சம்பவம்.. மாரி செல்வராஜ் ஆதங்கம்
Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Puducherry Power shutdown: புதுச்சேரியில் நாளை மின்தடை... இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது!
Embed widget