மேலும் அறிய

தனக்கு தானே பிரசவம், பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த நர்சிங் கல்லூரி மாணவி

வினோதா இன்று தனது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. குழந்தையை உடனே தன் வீட்டுக்கு அருகிலேயே புதைத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே திருமணமாகாத நர்சிங் கல்லூரி மாணவி தனக்குத் தானே பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் பிறந்த பெண் குழந்தையை உயிருடன் வீட்டு அருகே புதைத்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் வினோதா (22). திருமணம் ஆகாதவர். இவர் இலுப்பூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். வினோதா ஊருக்கு வந்து செல்வது கடினம் என்பதால் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் வினோதாவுக்கும் வாலிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோதாவும், அவரது காதலருடன் நெருங்கி பழகி உள்ளனர். இதனால் வினோதா கர்ப்பமாகி உள்ளார். இந்நிலையில் வினோதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. 

நிறைமாத கர்ப்பமாக இருந்த வினோதா இன்று தனது வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறப்படுகிறது. தனக்கு திருமணமாகாத நிலையில் கர்ப்பமாகி பெண் குழந்தையினை பெற்றெடுத்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார். பின்னர் பிறந்த பெண் குழந்தையை உடனே தனது வீட்டு வாசலிலேயே குழந்தையை உயிருடன் குழி தோண்டி புதைத்துள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த பகுதிக்கு பார்த்தபோது குழந்தையின் கை மட்டும் வெளியே தெரிந்துள்ளது. இதனால்  அதிர்ச்சியடைந்த அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். உடன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் புதைக்கப்பட்ட குழந்தையை தோண்டி எடுத்த போது குழந்தை உயிருடன் இருந்ததுள்ளது. உடன் அந்த குழந்தையை பனையப்பட்டி அரசு சுகாதார நிலையத்திற்கு பொதுமக்கள் கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பனையப்பட்டி போலீசார் குழந்தையை பெற்றெடுத்த தாய் வினோதாவிடமும் அவரது காதலனிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வினோதா வீட்டிலேயே தனக்குத்தானே எப்படி பிரசவம் பார்த்தார். குழந்தையை அவர் மட்டுமே புதைத்தாரா அவருக்கு உடந்தையாக அவரது காதலன் இருந்தாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Trump's Next Target: ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
ட்ரம்ப்பின் அடுத்த டார்கெட்; இரண்டு நாடுகளுக்கு குறி; பீதியில் ஐரோப்பா; அமைதி காக்கும் உலக நாடுகள்
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
சபரிமலை: மகரஜோதி நாளில் 900 பேருந்துகள் இயக்கம்! பக்தர்களுக்கு குட் நியூஸ் அறிவித்த அமைச்சர்!
Embed widget