மேலும் அறிய

திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளை மலர்த்தூவி வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் மாநகரின்மையப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், திருக்குறள் நெறி பரப்பும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கவும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை

தஞ்சாவூரில் 1330 திருக்குறளையும் படித்த மாணவ, மாணவிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மலர் துாவி வாழ்த்தினார். தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 36 மாணவ, மாணவிகள் ஏற்கெனவே 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தனர். இவர்களும், திருக்குறள் மனப்பாடம் செய்து வரும் 10 மாணவ, மாணவிகளும், உலகத் திருக்குறள் பேரவையினரும் தஞ்சாவூருக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், திருக்குறள் முழுமையும் மனப்பாடம் செய்த மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் பரிசுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையில் பதிவு செய்துள்ளோம். இவர்களில் 6 பேருக்கு மட்டும்  10,000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. எஞ்சிய 30 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களுடைய எதிர்கால கல்வி வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை விரைவாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் தினந்தோறும் திருக்குறளை அனைத்து மாணவர்களும் படித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அனைத்து பள்ளி கூட சுவர்களில், திருக்குறள் வாசகம் எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதன் தெளிவுரையையும் எழுத வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் திருக்குறளை எழுதி வைக்க வேண்டும்.


திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளை மலர்த்தூவி வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் மாநகரின்மையப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், திருக்குறள் நெறி பரப்பும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கவும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அப்போது, திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகள் மீது அமைச்சர் மலர்கள் தூவி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளர் கே.பி. அறிவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளை மலர்த்தூவி வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

இது குறித்து பேரவை நிர்வாகிகள் கூறுகையில், உலகப்பொதுமறையான  திருக்குறளை அனைத்து மாணவர்கள் இடத்திலும் கொண்டு செல்லும் வகையில், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்பள்ளி மாணவர்கள் 1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள். இதே போல் தற்போது ஏராளமான மாணவர்கள், திருக்குறளை படித்து மனனம் செய்து வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தினம் ஒரு குறளை அதன் பொழிப்புரையுடன் படித்து மனப்பாடம் செய்தால், அனைத்து திருக்குறளையும் முடித்து விட முடியும். திருக்குறள் படிப்பதினால், மாணவர்களிடத்தில் ஒற்றுமை, போட்டி, பொறுமை இல்லாமலும், கல்வி தரம் உயர்வதுடன், நல்ல எண்ணம் வளரும், பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதையும் ஏற்படும். எனவே, அனைத்து மாணவர்களும் கட்டாயம் திருக்குறளை படித்து, மனப்பாடம் செய்தால், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25): அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25): அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
தோனியை வாழ்த்திய மு.க.ஸ்டாலின்.. சுப்மன்கில்லை பாராட்டிய எடப்பாடி பழனிசாமி - இதுதாங்க காரணம்!
Embed widget