மேலும் அறிய

திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளை மலர்த்தூவி வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் மாநகரின்மையப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், திருக்குறள் நெறி பரப்பும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கவும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை

தஞ்சாவூரில் 1330 திருக்குறளையும் படித்த மாணவ, மாணவிகளைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  மலர் துாவி வாழ்த்தினார். தஞ்சாவூர் மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 36 மாணவ, மாணவிகள் ஏற்கெனவே 1,330 திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பித்தனர். இவர்களும், திருக்குறள் மனப்பாடம் செய்து வரும் 10 மாணவ, மாணவிகளும், உலகத் திருக்குறள் பேரவையினரும் தஞ்சாவூருக்கு வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

அதில், திருக்குறள் முழுமையும் மனப்பாடம் செய்த மாணவ, மாணவிகளுக்குத் தமிழ்நாடு அரசின் பரிசுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையில் பதிவு செய்துள்ளோம். இவர்களில் 6 பேருக்கு மட்டும்  10,000 வீதம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. எஞ்சிய 30 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இவர்களுடைய எதிர்கால கல்வி வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் தமிழ்நாடு அரசின் பரிசுத்தொகையை விரைவாக வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிகளிலும் தினந்தோறும் திருக்குறளை அனைத்து மாணவர்களும் படித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும். அனைத்து பள்ளி கூட சுவர்களில், திருக்குறள் வாசகம் எழுதுவதோடு மட்டுமில்லாமல் அதன் தெளிவுரையையும் எழுத வேண்டும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் திருக்குறளை எழுதி வைக்க வேண்டும்.


திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளை மலர்த்தூவி வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர் மாநகரின்மையப்பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்கவும், திருக்குறள் நெறி பரப்பும் வகையில் விளம்பரப் பலகைகள் வைக்கவும் தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அப்போது, திருக்குறள் மனப்பாடம் செய்து ஒப்பித்த மாணவ, மாணவிகள் மீது அமைச்சர் மலர்கள் தூவி வாழ்த்து தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, உலகத் திருக்குறள் பேரவைச் செயலர் பழ. மாறவர்மன், மார்னிங் ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளித் தாளாளர் கே.பி. அறிவானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


திருக்குறள் ஒப்புவித்த மாணவிகளை மலர்த்தூவி வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்

இது குறித்து பேரவை நிர்வாகிகள் கூறுகையில், உலகப்பொதுமறையான  திருக்குறளை அனைத்து மாணவர்கள் இடத்திலும் கொண்டு செல்லும் வகையில், அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்பள்ளி மாணவர்கள் 1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பார்கள். இதே போல் தற்போது ஏராளமான மாணவர்கள், திருக்குறளை படித்து மனனம் செய்து வருகின்றனர். மாணவர்கள் அனைவரும் கட்டாயம் தினம் ஒரு குறளை அதன் பொழிப்புரையுடன் படித்து மனப்பாடம் செய்தால், அனைத்து திருக்குறளையும் முடித்து விட முடியும். திருக்குறள் படிப்பதினால், மாணவர்களிடத்தில் ஒற்றுமை, போட்டி, பொறுமை இல்லாமலும், கல்வி தரம் உயர்வதுடன், நல்ல எண்ணம் வளரும், பெரியோர் மற்றும் ஆசிரியர்களிடம் மரியாதையும் ஏற்படும். எனவே, அனைத்து மாணவர்களும் கட்டாயம் திருக்குறளை படித்து, மனப்பாடம் செய்தால், அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : தலைமை தாங்கும் செங்கோட்டையன்?தனித்து விடப்பட்ட எடப்பாடி!பின்னணியில் பாஜக?Rajiv Gandhi : தூக்கியடிக்கப்பட்ட எழிலன் ராஜிவ் காந்திக்கு ஜாக்பாட் சாட்டையை சுழற்றும் UdhayanidhiED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTR

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
AR Rahman: அச்சச்சோ..! இசைப்புயலுக்கு என்ன ஆச்சு? ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி, ரசிகர்கள் ஷாக்
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
US Strikes Houthis: அடுத்த போரை தொடங்கிய ட்ரம்ப்..! ஹவுதி மீது அமெரிக்கா தாக்குதல், 20 பேர் பலி
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை,  தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
Anganwadi Job: அடித்தது ஜாக்பாட்..! எழுத்து தேர்வே இல்லை, தமிழக அரசில் 7783 பணியிடங்கள் - முழு விவரம் உள்ளே
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Final: அடக்கொடுமையே..! ஃபைனலில் டெல்லி ஹாட்ரிக் தோல்வி.. 2வது முறையாக கோப்பையை வென்ற மும்பை
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
WPL 2025 Finale: கோப்பையை வென்ற மும்பை, WPL பரிசுத்தொகை எவ்வளவு? யார் யாருக்கு என்ன விருதுகள்?
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
Varun Chakravarthy: வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
வசூல் சக்கரவர்த்திக்காக காத்திருந்த வருண் சக்கரவர்த்தி.. லேட்டா வந்துட்டீங்களே பாஸ்.!
"யோவ்.. பிஸ்தா பருப்பு" துணை முதலமைச்சரையே வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்
Embed widget