மேலும் அறிய

சீர்காழியில் ஆட்சியர் வருகையை அடுத்து அப்புறப்படுத்தப்பட்ட மழைநீர்!

மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் வருவதை அறிந்து அதன் பின்னர் தேங்கிய மழைநீரை வடிய நடவடிக்கை எடுத்த சீர்காழி நகராட்சி நிர்வாகத்தினர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு சற்று காலதாமதம் அக்டோபர் 29ம் தேதி தொடங்கியது. இருந்த போதும் அன்று முதல் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை ஆழ்ந்த காற்றமுக்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. 


சீர்காழியில் ஆட்சியர் வருகையை அடுத்து அப்புறப்படுத்தப்பட்ட மழைநீர்!

இதுஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழக, புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவாரூர், நீலகிரி, வேலூர், அரியலூர், சேலம், கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.


சீர்காழியில் ஆட்சியர் வருகையை அடுத்து அப்புறப்படுத்தப்பட்ட மழைநீர்!

இந்நிலையில், நேற்று இரவு தொடங்கிய மழையானது மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 மணி நேரத்தையும் கடந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளை இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா நேரில் சென்று ஆய்வு செய்து தண்ணீர் வடிவதற்கான பணிகளை துரிதப்படுத்தினார். இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. குறிப்பாக சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பழைய பேருந்து நிலையம் ஸ்டேட் பாங்க் வங்கி எதிரே தொடர் மழையால் குளம் போன்று தண்ணீர் தேங்கி நின்றது. இதன் அருகே நகராட்சி அலுவலகம் இருந்தும் தண்ணீர் வடிவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. 


சீர்காழியில் ஆட்சியர் வருகையை அடுத்து அப்புறப்படுத்தப்பட்ட மழைநீர்!

இந்நிலையில்  மாலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சீர்காழி பகுதிக்கு ஆய்வுக்கு வருவதாக தகவல்கள் வெளியாகின. அந்த தகவலை அடுத்து ஆட்சியர் வருவதற்குள் அவசரக் கதியில் காலையிலிருந்து தேங்கி இருந்த தண்ணீரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காலையிலிருந்து தேங்கி இருந்த தண்ணீரில் மிகுந்த சிரமத்தை சந்தித்ததாகவும், ஆட்சியர் வருவதை அறிந்து தண்ணீரை அப்புறப்படுத்த முடிந்த நகராட்சி நிர்வாகம் இதை முன்னதாக செய்யாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஆய்வுக்கு வந்த ஆட்சியர் தண்ணீர் இல்லாத சாலையை ஆய்வு செய்துவிட்டு இதுபோன்று சீர்காழி நகருக்குள் தண்ணீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி சென்றார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget