மேலும் அறிய

Vinayagar Chaturthi 2024: எத்தனை சிலைகளுக்கு அனுமதி? - தஞ்சை மாவட்ட போலீசார் கூறியது என்ன?

தஞ்சாவூர் மாவட்டத்தில் 875 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 875 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தஞ்சை மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் தஞ்சை மாநகரில் 80 விநாயகர் சிலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டில் இந்த விழா வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

எத்தனை சிலைகளுக்கு அனுமதி

இதையடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் 875 விநாயகர் சிலையும், தஞ்சாவூர் மாநகரில் 80 விநாயகர் சிலைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையொட்டி பொதுமக்கள் தங்களது வீடுகளில் களி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளை சொந்தமாக செய்தும், விலை கொடுத்து வாங்கியும் பின்னர் அதற்கு திரவிய பொடி, மஞ்சள் பொடி, சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்து பின்னர் அதற்கு சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். மேலும் விநாயகருக்கே உரிய சிறப்பு பிரசாதமான கொழுக்கட்டை மற்றும் சுண்டல் செய்து படையலிட்டும் வழிப்படுவர்.

ஒரு அடி முதல் 16 அடி உயரம் வரை சிலைகள் தயாரிப்பு

கடந்த காலங்களில் வீடுகளில் மட்டுமே விநாயகரை வைத்து வழிப்பட்டு வந்த நிலையில் தமிழகத்தில் தற்போது வடமாநிலங்களைப் போன்று இந்த விநாயகர் சதுர்த்தி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்தும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு அடி உயரம் முதல் 16 அடி உயரம் வரையில் பல்வேறு உயரங்களில், பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்காக தயாரிக்கப்படுகிறது. இதுபோன்று தயாரிக்கப்படும் சிலைகள் விலை கொடுத்து வாங்கப்பட்டு பின்னர் விநாயகர் சதுர்த்திக்கு 3 நாட்களுக்கு முன்னதாகவும், விநாயகர் சதுர்த்தி அன்றும் பக்தர்கள் மூலம் அந்த சிலையானது பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடை பெற்று பின்னர் நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் சிலைகளின் விலை உயர்வாக உள்ளது. காரணம் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்று சிலை உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர். ரூ. ஆயிரம் முதல் 15 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் தயாரிக்கப்படுகிறது.

ரசாயனம் கலந்த சிலைகள் பறிமுதல் செய்யப்படும்

அதன்படி தஞ்சாவூர் வெண்ணாட்டங்கரை ஆனந்தவல்லி வடக்கு தெருவில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கான சிலைகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் ரசாயனம் கலந்த சிலைகளை கரைப்பதற்கு அனுமதி மறுக்கப்படும் என்பதுடன் அந்த சிலைகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த விநாயகர் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெறமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஊர்வலத்தை முடிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை விநாயகர் சதுர்த்தி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Silver Rate Feb.16th: வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Silver Rate Feb.16th: வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
வாரம் முதல் நாள்ல குட் நியூஸ்.! தங்கம் விலை கணிசமாக குறைவு; இன்றைய விலை என்ன தெரியுமா.?
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜயை தாக்கிய உதயநிதி, கீழடிக்கு கட்டணம், 25 மீனவர்கள் கைது - தமிழகத்தில் இதுவரை
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
TN Election 2026: அதிமுகவின் ஆதிக்கம்.. துடைக்க முடியாமல் தவிக்கும் திமுக - தமிழ்நாட்டில் முதல்முறை, கருணாநிதிக்கே?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
IND Vs Pak: இன்னும் முடியல..! அடுத்து ரவுண்டுக்கு ரெடி ஆகும் இந்தியா..! எட்டிப்பிடிக்குமா பாக்.,? எப்போது? எப்படி?
வெளிநாட்டில் கணவன்.. காதலன் வீட்டில் மனைவி - ஆதரவு இன்றி தவித்த குழந்தைகள் - நடுரோட்டில் பயங்கரம்
வெளிநாட்டில் கணவன்.. காதலன் வீட்டில் மனைவி - ஆதரவு இன்றி தவித்த குழந்தைகள் - நடுரோட்டில் பயங்கரம்
Taapsee Pannu: “யப்பா சாமி.. நான் வாழ ஆசைப்படுறேன்” - மோடியை பிடிக்குமா என்ற கேள்விக்கு டாப்ஸி பதில்!
Taapsee Pannu: “யப்பா சாமி.. நான் வாழ ஆசைப்படுறேன்” - மோடியை பிடிக்குமா என்ற கேள்விக்கு டாப்ஸி பதில்!
Kia FIFA: செல்டோஸ், சோனெட் காரை புக் பண்ணுங்க..! ருபாய் செலவு இல்லாம USA போங்க - கியா அதிரடி சலுகை
Kia FIFA: செல்டோஸ், சோனெட் காரை புக் பண்ணுங்க..! ருபாய் செலவு இல்லாம USA போங்க - கியா அதிரடி சலுகை
மயான கொள்ளை: அங்காளம்மன் அருள் புரியும் ரகசியம்! சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய கதை!
மயான கொள்ளை: அங்காளம்மன் அருள் புரியும் ரகசியம்! சிவபெருமான் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய கதை!
Embed widget