மேலும் அறிய

’திருவாரூரில் நெல்லுக்கு மாற்றாகும் பருத்தி...!’ - அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி...!

தொடக்கத்தில் 3000 ஏக்கரில் மட்டுமே பருத்தி சாகுபடி நடந்த நிலையில் இந்தாண்டு 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடந்துள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதான சாகுபடி ஆக உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணை இருந்து உரிய நேரத்தில் திறக்கப்படாத காரணத்தினால், மூன்று போக சாகுபடி என்பது ஒரு போக சாகுபடியாக குறைந்து, சம்பா சாகுபடியை மட்டும் விவசாயிகள் செய்து வந்தனர். இந்நிலையில் அரசின் அறிவுறுத்தலின்படி விவசாயிகள் பணப் பயிரான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட தொடங்கினர்.
 
குறிப்பாக குறைந்த அளவு தண்ணீரில் பருத்தி சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியும் எனவும், திருவாரூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் வறட்சியை தாங்கி வளரும் பருத்தி பயிரிடப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த செலவு செய்து அதிக லாபம் விவசாயிகள் பெறலாம் என வேளாண்துறை விவசாயிகளிடம் அறிவுறுத்தி வந்தது. அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 
முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் 3000 ஏக்கர் பரப்பளவில் மட்டும் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். அதனையடுத்து வந்த அடுத்தடுத்த ஆண்டுகளில் பருத்தி சாகுபடியின் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த ஆண்டு 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது பருத்தி அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் அறுவடை செய்த பருத்தியை விவசாயிகள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்த பருத்தியை வாங்குவதற்காக ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பருத்தி வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்று உள்ளனர்.

’திருவாரூரில் நெல்லுக்கு மாற்றாகும் பருத்தி...!’ - அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி...!
 
திருவாரூரில் பருத்தி கொள்முதல் நிலையத்தில் குவின்டால் 8300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் பருத்தியை விற்பனை செய்வதற்காக வாகனங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு தமிழகத்தில் ஏற்ப்பட்ட கொரோனா தாக்கத்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விவசாயம் உள்ளிட்ட அனைத்தும் தொழில்களும் பாதிக்கப்பட்டது. இதனால் விளைந்த பருத்தியை விற்பனை செய்ய முடியாமல் கடந்த ஆண்டு பருத்தி விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். தற்போது பருத்தி அறுவடை பணிகள்  நடைபெற்று வருகிறது. மேலும் திருவாரூரில் உள்ள அரசு பருத்தி கொள்முதல் நிலையத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரத்து 300 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பருத்தி 75 முதல் 83 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

’திருவாரூரில் நெல்லுக்கு மாற்றாகும் பருத்தி...!’ - அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி...!
 
இதனால் பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தியை அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். வாரத்திற்கு ஒரு நாள் விவசாயிகளின் பருத்தியை அரசு ஊழியர்கள் கொள்முதல் செய்துவரும் நிலையில், விவசாயிகள் தங்களது பருத்தியை விற்பனை செய்வதற்காக இரண்டு நாட்களுக்கு முன்னரே பதிவு செய்துவிட்டு வாகனத்தின் மூலம் பருத்தியை கொண்டு வந்து வரிசையில் காத்திருந்து தங்களது பருத்தியை விற்பனை செய்து செல்கின்றனர். இன்று திருவாரூரில் உள்ள அரசு நேரடி பருத்தி விற்பனை நிலையத்தில் அறுவடை செய்த பருத்தியை விற்பனை செய்வதற்காக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பருத்தி மூட்டைகளுடன் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சாலைகளில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினை; ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
Embed widget