மேலும் அறிய

வழிபாட்டுத்தலங்கள் மூடல் - நாகப்பட்டினம் வழிப்பாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு

’’கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது’’

கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  அதன்படி 6 தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களை மூடவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத்தலங்கள் மூடல் - நாகப்பட்டினம் வழிப்பாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு
 
இதனையடுத்து நாகை மாவட்டத்தில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்களான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம் மற்றும் புகழ்பெற்ற நாகூர் தர்கா சிங்காரவேலன் ஆலயம் உட்பட  வழிபாட்டுத்தலங்கள் இன்று இரவு 9 முதல் பக்தர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. 10 மணிக்கு முன்பாகவே வாயில் கதவுகள் மூடப்பட்டது.  நாகூர் ஆண்டவர் தர்காவில் 465 வது கந்தூரி விழா கடந்த 4 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இன்று இரவு 10 மணியுடன் தர்கா  வாயில் கதவு மூடப்பட்டது. இதனால் தர்காவின் உள்ளிருந்த பக்தர்கள் போலீஸார் மற்றும் தர்கா ஊழியர்களால் வெளியேற்றப்பட்டனர். பக்தர்கள் தாமாக வெளியேறுமாறு ஒலிபெருக்கி வழியாக அறிவிப்பும் செய்யப்பட்டது. 

வழிபாட்டுத்தலங்கள் மூடல் - நாகப்பட்டினம் வழிப்பாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு
 
பொதுவாக நாகூரில் கந்தூரி நடைபெறும் நாட்களில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், மலேசியா, சிங்கப்பூர், செளதி அரேபியா, ஈரான், ஈராக் உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கூடி வழிபாடு நடத்துவது வழக்கம். ஏராளமானோர் இரவு முழுவதும் தர்காவில் தங்கியிருப்பார்கள்.இந்தாண்டு உலகம் முழுவதையும் அச்சுறுத்தும்  கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று காரணமாகவும், நாடுகளுக்கிடையான நடைமுறைகளின் காரணமாக வெளிநாட்டு பக்தர்கள் பெரும்பாலானோர் வராத நிலையில் ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் வெளியேற்றப்பட்டதால் திருவிழா காலத்தில் நாள்தோறும் இரவு பகலாக பக்தர் கூட்டம் நிரம்பிவழியும் தர்காவின் உட்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் வருகிற 13 ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.

வழிபாட்டுத்தலங்கள் மூடல் - நாகப்பட்டினம் வழிப்பாட்டுத் தலங்களில் தீவிர கண்காணிப்பு
 
அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை நாகூர் தர்கா ஷெரீப்க்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இரவு ஊரடங்கு அமலில் உள்ளதால் நாகூர் ஆண்டவர் தர்கா மற்றும் வேளாங்கண்ணி பேராலயம், சிக்கல் சிங்காரவேலர் ஆலயம், நாகை நீலாயதாட்சி அம்மன் ஆலயம், நாகை நெல்லுக்கடை மாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களில் பக்தர்களை 9 மணி முதலே வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது பெரும்பாலான கடைகள் 8 மணி முதலே அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரும் முகக்கவசம் அணிய நேரடியாகவும் ஒலிபெருக்கி மூலமாக வலியுறுத்தி வருகின்றனர் இதேபோல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளதையும் அறிவுறுத்தி அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என பொது மக்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget