மேலும் அறிய

நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநருமே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும் , மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள  உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி குத்தாலம் கணேசன் என்பவரின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். மணமக்கள் அருண் பிரசாத் மற்றும் திவ்யா ஆகியோருக்கு பெண்களை முன்னிலை படுத்தி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து நடைபெறும் திருமண என மணமக்களின் தாய்மார்கள்  மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு  வாழ்த்துக்களை தெரிவித்தார்.


நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநருமே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எழுதப்படாத மோசடி நடைபெறுகிறது. ஒரு மூட்டைக்கு ஐம்பது ரூபாய் வரை விவசாயிகளிடம் வசூல் செய்கின்றனர். டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஆயிரம் கோடி வரை கரும்பு நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு உள்ளது. அதனை அரசு பெற்று தர வேண்டும். சென்னை மதுரவாயில் பகுதியில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு பெற்றோரும் ஒரு காரணம். பெற்றோர்களுடைய அழுத்தம் தாளாமல் மாணவர்கள் இது போன்ற முடிவுகள் எடுக்கின்றனர். மாணவர்கள் தற்கொலை முடிவுகளை தயவு செய்து எடுக்க வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்தார். 


நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநருமே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

நீட் தேர்வில் பெரிய மாநிலங்களை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்ற தமிழ்நாடு மாணவர்களுக்கு  தமிழக ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக செய்தியாளரின் கேள்விக்கு, இதே தமிழ்நாட்டில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் நீட் தேர்வு தற்கொலை நடப்பதில்லை என்றும், மற்ற மாநிலங்களை விட இங்கு தற்கொலைகளும் அதிகரித்துள்ளது இதற்கு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன பதில் சொல்லப் போகிறார்? எனவும் கேள்வி எழுப்பினார். தற்கொலைகளுக்கு காரணம் நீட் தேர்வு தான் என்றும் அதை ரத்து செய்யாத மத்திய அரசுதான் என்றும், தமிழக மாணவர்களின் நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும்  ஆளுநருதான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.  


நீட் தற்கொலைகளுக்கு மத்திய அரசும், தமிழக ஆளுநருமே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மத்திய அரசு உடனடியாக தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தமிழக சட்டப்பேரவையில் இயற்றிய நீட் மசோதாவை மத்திய அரசு உடனடியாக சட்டமாக கொண்டுவர வேண்டும், இதுநாள்வரை தமிழ்நாட்டின் மனநிலையை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை, ஒரு மாநிலத்தின் ஐந்து ஆண்டுகளில் நீட் தேர்வால் 60 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு அசாதாரணமான சூழல் இது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நீட் விதிவிலக்கு மசோதாவில் ஜனாதிபதி உடனடியாக கையெழுத்திட வேண்டும். ஏன் என்றால் இது உயிர் போகும் பிரச்சினை. இதனை மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றார். டெல்டா பகுதிகளில் அதிகமான கொலை குற்றங்கள் நடைபெறுவதாகவும் முதலமைச்சரின்கீழ் காவல்துறை இயங்குவதால் இதற்கு சிறப்பு கவனம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். டெல்டா பகுதிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளை அழைத்து கலந்து ஆலோசித்து உரிய தீர்வு காண வேண்டும் எனவும் கூறினார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!Sivagangai Police: ”விசிகவினர் அடிச்சுட்டாங்க” நாடகம் ஆடிய பெண் SI! உண்மையை உடைத்த காவல்துறை!Delhi Next CM: டெல்லியின் அடுத்த முதல்வர்? முதலிடத்தில் பர்வேஷ் வர்மா! வெளியான லிஸ்ட்!Aravind kejriwal: ”டெல்லி மக்கள் கொடுத்த TWIST”தோல்விக்கு பின் உருக்கம் கெஜ்ரிவால் திடீர் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
IND vs ENG: ஷாக்! பாதியிலே நிறுத்தப்பட்ட இந்தியா - இங்கிலாந்து போட்டி - என்ன காரணம்?
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
சோகம்! மறுவீட்டிற்குச் சென்ற மாப்பிள்ளை! கல்யாணம் முடிந்த 5 நாளில் பறிபோன உயிர்!
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Delhi Election: கெஜ்ரிவாலுக்கு முன்பே ஜெயலலிதா - தேர்தல் தோல்வி, இது தெரியாமா போச்சே, நீளும் CM லிஸ்ட்
Embed widget