மேலும் அறிய

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் சிவகங்கை மாவட்ட பொருளாளர் முகமது மீரா தலைமையில் நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகமது இப்ராஹிம், முகமது அலி ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பொறுப்பாளர் முகமது மீரான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் பொதுமக்கள் தங்களது உணவு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் புழுங்கல் அரிசியினை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த புழுங்கல் அரிசியின் விலை என்பது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அரிசி கிலோவிற்கு ரூ.10 முதல் 15 வரையில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
 
இதற்கு முழு காரணம் மத்திய அரசு தான் ஆகும். பொதுவாக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்து விட்டு பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளனர். ஆனால் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காததன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விளைவு உயர்வானது அடுத்து வரும் மாதங்களில் கிலோவிற்கு ரூ30 வரையில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் இயற்கை சீற்றம் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கப்படும் பட்சத்தில் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரித்து விலை உயர்வு அதிகரிப்பதற்கு இந்த மத்திய அரசின் செயல்பாடு வழிவகை செய்துள்ளது. மேலும் தமிழகம் உட்பட மேற்கண்ட 5 மாநிலங்களும் புழுங்கல் அரிசி மட்டுமே அதிக அளவில் உபயோகப்படுத்துவதை அறிந்து கொண்டு இந்த மாநிலங்களை பழிவாங்கும் நோக்கில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்காமல் பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளதன் காரணமாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவர்கள் அதிக அளவில் பச்சரிசி பயன்படுத்துவதன் காரணமாக அங்கு பச்சைஅரிசியின் விலையானது குறைந்துள்ளது. 

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
 
இதன் காரணமாக அந்த மாநில அரசுக்கும் மக்களுக்கும் சலுகைகளை மத்திய அரசு செய்துள்ளது. எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயத்துள்ள விலையில் மட்டுமே நெல்லை விற்க முடியும். ஆனால் இடைப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால் உடனடியாக மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முகமது மீரான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
ABP Premium

வீடியோ

ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி
MP Jothimani Issue | ’’எதுக்கு வந்தீங்க ஜோதிமணி?’’வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்அடித்து விரட்டிய காங்கிரஸார்’’ஏய்..போடா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
EPS ADMK: அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
அதிமுகவில் ஓபிஎஸ்க்கு நோ... டிடிவிக்கு..? அமித்ஷாவுடன் சந்திப்பில் நடந்தது என்ன.? இபிஎஸ் பரபரப்பு தகவல்
New Renault Duster Testing: யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
யப்பா, இத்தனை லட்சம் கிலோ மீட்டர் டெஸ்டிங்கா.?! அசால்டாக அடித்துத் தூக்கிய புதிய ரெனால்ட் டஸ்டர்
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Tata Punch Facelift: பீஸ்ட் மோடில் பஞ்ச்.. ஃபேஸ்லிஃப்ட்டின் வேரியண்ட்களும், அம்சங்களும்.. மொத்த லிஸ்டை கொடுத்த டாடா
Trump Vs Petro: அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
அமெரிக்காவிடமிருந்து தப்புமா கொலம்பியா.? ட்ரம்ப்பை அழைத்துப் பேசிய பெட்ரோ; விரைவில் சந்திப்பு
Embed widget