மேலும் அறிய

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் சிவகங்கை மாவட்ட பொருளாளர் முகமது மீரா தலைமையில் நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகமது இப்ராஹிம், முகமது அலி ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பொறுப்பாளர் முகமது மீரான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் பொதுமக்கள் தங்களது உணவு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் புழுங்கல் அரிசியினை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த புழுங்கல் அரிசியின் விலை என்பது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அரிசி கிலோவிற்கு ரூ.10 முதல் 15 வரையில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
 
இதற்கு முழு காரணம் மத்திய அரசு தான் ஆகும். பொதுவாக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்து விட்டு பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளனர். ஆனால் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காததன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விளைவு உயர்வானது அடுத்து வரும் மாதங்களில் கிலோவிற்கு ரூ30 வரையில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் இயற்கை சீற்றம் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கப்படும் பட்சத்தில் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரித்து விலை உயர்வு அதிகரிப்பதற்கு இந்த மத்திய அரசின் செயல்பாடு வழிவகை செய்துள்ளது. மேலும் தமிழகம் உட்பட மேற்கண்ட 5 மாநிலங்களும் புழுங்கல் அரிசி மட்டுமே அதிக அளவில் உபயோகப்படுத்துவதை அறிந்து கொண்டு இந்த மாநிலங்களை பழிவாங்கும் நோக்கில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்காமல் பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளதன் காரணமாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவர்கள் அதிக அளவில் பச்சரிசி பயன்படுத்துவதன் காரணமாக அங்கு பச்சைஅரிசியின் விலையானது குறைந்துள்ளது. 

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
 
இதன் காரணமாக அந்த மாநில அரசுக்கும் மக்களுக்கும் சலுகைகளை மத்திய அரசு செய்துள்ளது. எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயத்துள்ள விலையில் மட்டுமே நெல்லை விற்க முடியும். ஆனால் இடைப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால் உடனடியாக மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முகமது மீரான் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget