மேலும் அறிய

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை.

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் சிவகங்கை மாவட்ட பொருளாளர் முகமது மீரா தலைமையில் நடைபெற்றது. இதில் அரிசி ஆலை உரிமையாளர்கள் முகமது இப்ராஹிம், முகமது அலி ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் பொறுப்பாளர் முகமது மீரான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், ஒரிசா மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் பொதுமக்கள் தங்களது உணவு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் புழுங்கல் அரிசியினை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த புழுங்கல் அரிசியின் விலை என்பது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் அரிசி கிலோவிற்கு ரூ.10 முதல் 15 வரையில் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
 
இதற்கு முழு காரணம் மத்திய அரசு தான் ஆகும். பொதுவாக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்து விட்டு பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளனர். ஆனால் புழுங்கல் அரிசிக்கு தடை விதிக்காததன் காரணமாக ஏற்றுமதியாளர்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விளைவு உயர்வானது அடுத்து வரும் மாதங்களில் கிலோவிற்கு ரூ30 வரையில் உயர்வதற்கு வாய்ப்பு உள்ள நிலையில் தமிழகத்தில் இயற்கை சீற்றம் காரணமாக நெல் உற்பத்தி பாதிக்கப்படும் பட்சத்தில் அரிசி தட்டுப்பாடு மேலும் அதிகரித்து விலை உயர்வு அதிகரிப்பதற்கு இந்த மத்திய அரசின் செயல்பாடு வழிவகை செய்துள்ளது. மேலும் தமிழகம் உட்பட மேற்கண்ட 5 மாநிலங்களும் புழுங்கல் அரிசி மட்டுமே அதிக அளவில் உபயோகப்படுத்துவதை அறிந்து கொண்டு இந்த மாநிலங்களை பழிவாங்கும் நோக்கில் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்காமல் பச்சரிசிக்கு மட்டும் தடை விதித்துள்ளதன் காரணமாக பிஜேபி ஆளும் மாநிலங்களில் அவர்கள் அதிக அளவில் பச்சரிசி பயன்படுத்துவதன் காரணமாக அங்கு பச்சைஅரிசியின் விலையானது குறைந்துள்ளது. 

தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் - அரிசி உற்பத்தியாளர் குற்றச்சாட்டு
 
இதன் காரணமாக அந்த மாநில அரசுக்கும் மக்களுக்கும் சலுகைகளை மத்திய அரசு செய்துள்ளது. எனவே புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதித்தால் மட்டுமே வரும் காலங்களில் இந்த விலை உயர்வு என்பது குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த விளை உயர்வு காரணமாக விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. அவர்கள் அரசு நிர்ணயத்துள்ள விலையில் மட்டுமே நெல்லை விற்க முடியும். ஆனால் இடைப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதால் உடனடியாக மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான தடையினை விதித்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு முகமது மீரான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai DMK vs ADMK Fight | 200 கோடி வரி முறைகேடு? அதிமுக - திமுக தள்ளுமுள்ளு! மதுரையில் பரபரப்பு
Dog Bite School Children |Dog Bite School Children |பள்ளிக்கு சென்ற சிறுவன் கடித்து குதறிய தெருநாய் வெளியான பகீர் CCTVகாட்சி
Ponmudi : விக்கிரவாண்டியில் பொன்முடி? அன்னியூர் சிவா போர்க்கொடி! பற்றி எரியும் விழுப்புரம் திமுக
EPS Modi Secret Call : மோடியுடன் ரகசிய PHONECALLரேடாரில் மூர்த்தி, சக்கரபாணி!ஆட்டத்தை தொடங்கிய EPS
Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand : ‘கீழயே நில்லுங்க – முகத்தை பார்க்க மாட்டேன்’ புஸ்ஸி ஆனந்த் மீது கடும் கோபத்தில் விஜய்..!
'புஸ்ஸி முகத்தை கூட திரும்பி பார்க்காத விஜய்’ காரணம் என்ன?
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TVK Vijay: இனி மக்களோடு தான் எல்லாமே.. மதுரை மாநாடு டூ பயணம் - தவெக தலைவர் விஜயின் ஃபயரான பேச்சு
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
TN Election 2025: ”தமிழ்நாடு” எனும் ப்ராண்ட்..! தத்தளிக்கும் தேசிய கட்சிகள் - பற்றி எரியும் தேர்தல் களம், ஸ்டாலின் டூ விஜய்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று துவக்கம்! 72,000+ பேர் விண்ணப்பம்: உங்களுக்கான வாய்ப்பு?
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
Durai Vaiko : ’பாஜகவுடன் சேரத் துடிக்கும் துரை வைகோ?’ யாரை விட்டது மத்திய அமைச்சர் ஆசை..!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
PM Modi TN Visit: நெருங்கும் தேர்தல்; மீண்டும் ஆக.26-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி- செப்டம்பரிலும் பயணத் திட்டம்!
Volvo EX30: ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
ஒரே சார்ஜ், 474 கிலோ மீட்டர் பயணம்; ஸ்டைலிஷாக வரும் வோல்வோ EX30 இவி கார்
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
10th Supplementary Exam Result: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் எப்போது? காண்பது எப்படி?
Embed widget