மேலும் அறிய

500 சவரன் நகைகளை திருடிய பலே கொள்ளையன் கும்பகோணத்தில் கைது

கூத்தாநல்லுாரில் 150 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர் அதிராம்பட்டிணத்தில் 350 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர் . 15 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி விற்பனை செய்ததுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுார் தாலுக்கா, ஆடுதுறை பிஸ்மி நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயசங்கர் மற்றும் கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால், தனலெட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் மணிவேல் ஆகிய இருவரது வீடுகளிலுள்ள கதவுகளை உடைத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம்  தேதி சுமார் 16 பவுன் நகைகளை திருட்டு போனது. இதே போல் நவம்பர் மாதம் 5 ந்தேதி திருவிடைமருதுாரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை உடைக்க முயற்சி நடந்தது. இது குறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிந்து, எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி உத்தரவின் பேரில் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில், தனிப்படை எஸ்ஐ காமராஜ், போலீசார்கள் கலியரசன், விக்னேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் தேடி வந்தனர்.


500 சவரன் நகைகளை திருடிய பலே கொள்ளையன் கும்பகோணத்தில் கைது

 இந்நிலையில், திருவிடைமருதுார் கடைத்தெருவிலுள்ள நகைகடை அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் நின்று கொண்டிப்பதாக, திருவிடைமருதுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார், சென்று அவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில், காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்ததில், தஞ்சை மாவட்டம், திருவையாறு, புதுஅக்ரஹாரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வகார்த்தி (35) என்பதும், திருவிடைமருதுாரில் இரண்டு வீடுகளில் திருட்டியதையும், திருவிடைமருதுாரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து செல்வகார்த்தியை மேலும் இந்த கொள்ளையில் தொடர்பில் உள்ளார்களா என்றும், தமிழகம் முழுவதும் வேறு பகுதியில் கொள்ளையடித்துள்ளார்கள், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


500 சவரன் நகைகளை திருடிய பலே கொள்ளையன் கும்பகோணத்தில் கைது

இது குறித்து போலீசார் கூறுகையில், திருவிடைமருதுார் தாலுக்காவில் நடந்த சம்பவத்தை வைத்து, தனிப்படை அமைத்து தேடி வந்தோம். திருடிய நகைகளை விற்பனை செய்ய வந்த போது, போலீசாரிடம் சிக்கி கொண்டார். செல்வகார்த்தி, கடந்த 2015 ஆம் ஆண்டு கூத்தாநல்லுாரில் நடந்த 150 பவுன் நகைகள் கொள்ளையிலும், அதிராம்பட்டிணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வங்கியில் நடந்த 350 பவுன் நகை கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி விற்பனை செய்ததுள்ளார்.

இவர் மீது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் திருட்டு, வழிபறி, கொள்ளை போன்ற சம்பங்களில் ஈடுபட்டள்ளார். செல்வகார்த்தியை திருவிடைமருதுார் தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளதையடுத்து, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசார், செல்வகார்த்தி விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தை கலக்கிய பலே கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியதால், அவர்களது கூட்டாளிகள் சிலர் தலைமறைவாகி உள்ளனர்.  விரைவில் அவர்களை பிடித்து, கொள்ளையடித்த பொருட்களை மீட்க்கப்படும் என்றார்.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Embed widget