மேலும் அறிய

500 சவரன் நகைகளை திருடிய பலே கொள்ளையன் கும்பகோணத்தில் கைது

கூத்தாநல்லுாரில் 150 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர் அதிராம்பட்டிணத்தில் 350 பவுன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர் . 15 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி விற்பனை செய்ததுள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதுார் தாலுக்கா, ஆடுதுறை பிஸ்மி நகரை சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ஜெயசங்கர் மற்றும் கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால், தனலெட்சுமி நகரை சேர்ந்தவர் சின்னதம்பி மகன் மணிவேல் ஆகிய இருவரது வீடுகளிலுள்ள கதவுகளை உடைத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம்  தேதி சுமார் 16 பவுன் நகைகளை திருட்டு போனது. இதே போல் நவம்பர் மாதம் 5 ந்தேதி திருவிடைமருதுாரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாரை உடைக்க முயற்சி நடந்தது. இது குறித்து திருவிடைமருதுார் போலீசார் வழக்கு பதிந்து, எஸ்பி ரவளிப்பிரியாகாந்தபுனேனி உத்தரவின் பேரில் டிஎஸ்பி வெற்றிவேந்தன் தலைமையில், தனிப்படை எஸ்ஐ காமராஜ், போலீசார்கள் கலியரசன், விக்னேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தமிழகம் முழுவதும் தேடி வந்தனர்.


500 சவரன் நகைகளை திருடிய பலே கொள்ளையன் கும்பகோணத்தில் கைது

 இந்நிலையில், திருவிடைமருதுார் கடைத்தெருவிலுள்ள நகைகடை அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் நின்று கொண்டிப்பதாக, திருவிடைமருதுார் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார், சென்று அவரை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். பின்னர் போலீசார் சந்தேகத்தின் பேரில், காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்ததில், தஞ்சை மாவட்டம், திருவையாறு, புதுஅக்ரஹாரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் செல்வகார்த்தி (35) என்பதும், திருவிடைமருதுாரில் இரண்டு வீடுகளில் திருட்டியதையும், திருவிடைமருதுாரை அடுத்த வேப்பத்துார்-கல்யாணபுரம் சாலையிலுள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து செல்வகார்த்தியை மேலும் இந்த கொள்ளையில் தொடர்பில் உள்ளார்களா என்றும், தமிழகம் முழுவதும் வேறு பகுதியில் கொள்ளையடித்துள்ளார்கள், ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.


500 சவரன் நகைகளை திருடிய பலே கொள்ளையன் கும்பகோணத்தில் கைது

இது குறித்து போலீசார் கூறுகையில், திருவிடைமருதுார் தாலுக்காவில் நடந்த சம்பவத்தை வைத்து, தனிப்படை அமைத்து தேடி வந்தோம். திருடிய நகைகளை விற்பனை செய்ய வந்த போது, போலீசாரிடம் சிக்கி கொண்டார். செல்வகார்த்தி, கடந்த 2015 ஆம் ஆண்டு கூத்தாநல்லுாரில் நடந்த 150 பவுன் நகைகள் கொள்ளையிலும், அதிராம்பட்டிணத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வங்கியில் நடந்த 350 பவுன் நகை கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 15 க்கும் மேற்பட்ட சொகுசு கார்களை திருடி விற்பனை செய்ததுள்ளார்.

இவர் மீது தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் திருட்டு, வழிபறி, கொள்ளை போன்ற சம்பங்களில் ஈடுபட்டள்ளார். செல்வகார்த்தியை திருவிடைமருதுார் தனிப்படை போலீசார்  கைது செய்துள்ளதையடுத்து, புதுக்கோட்டை, கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட போலீசார், செல்வகார்த்தி விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். தமிழகத்தை கலக்கிய பலே கொள்ளையன் போலீசாரிடம் சிக்கியதால், அவர்களது கூட்டாளிகள் சிலர் தலைமறைவாகி உள்ளனர்.  விரைவில் அவர்களை பிடித்து, கொள்ளையடித்த பொருட்களை மீட்க்கப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
நீங்கள் நினைத்தது நடக்க வேண்டுமா..?   கார்த்திகை மாதத்தில் இதை செய்யுங்கள்..!!!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
தமிழகத்தில் இன்று ( 16 -11 - 24 ) எங்கெல்லாம் மின் தடை? மொத்த லிஸ்ட் இதோ! உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
Doctors Careless: தொடரும் மருத்துவர்களின் அலட்சியம்..! ரத்தப்போக்குடன் 4 மருத்துவமனைகளுக்கு அலைகழிப்பு- தாயும், சேயும் பலி
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
எந்த நாளில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன்? வார நாட்களில் இப்படி இருந்து பாருங்க!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
Ind vs SA T20: தீயாய் வந்த திலக்.. சாத்தியெடுத்த சஞ்சு.. இத்தனை சாதனைகளா!
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
கஞ்சா விக்கிறவங்கள விட்டுடுங்க; புகையிலை விக்கிறவங்கள மட்டும் புடிங்க - கொதித்தெழும் வியாபாரிகள்
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
Rohit Sharma: வந்தாச்சு குட்டி ஹிட்-மேன் - ரோகித் சர்மாவிற்கு ஆண் குழந்தை, குவியும் வாழ்த்து மழை
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
அரசு வேலை கன்ஃபார்ம் - ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த ஆயுதப்படை காவலர் - சிக்கியது எப்படி?
Embed widget