மேலும் அறிய

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!

’’மழைக்காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஆண்டு 4.30 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மீதமுள்ள குறுவை நெல் பயிர்கள் தற்போது அறுவடைப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல் பயிர்கள் மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதம் இருந்தால் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மணிகளை கொள்முதல் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிக அளவில் இருந்து வருகிறது. ஆகவே நெல்லின் ஈரப்பதம் சதவிகிதத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் செய்ய நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது என கொள்முதல் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் தற்போது பெய்து வரும் திடீர் மழையால் உளர்த்துவதற்காக வைக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து விவசாயிகளுக்கு வேலை பளுவை, இரட்டிப்பு செலவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் மழையில் நனைந்து நெல் வீணாவதை தடுக்கவும், நெல் உளர்த்துவதில் விவசாயிகளுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் தமிழகத்திலேயே முதல் முறையாக மன்னார்குடி அருகே செருமங்களம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் தானியங்கி நவீன நெல் உலத்தும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட்ட தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம்...!
 
இந்த இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 2 டன் அளவிலான நெல்லை உலர்த்த முடியும். மழை காலங்களில் நெல்லின் ஈரப்பதத்தை குறைத்து, அதிக அளவு நெல்லை கொள்முதல் செய்ய இத்தகைய தானியங்கி நெல் உலர்த்தும் இயந்திரம் பேருதவியாக இருக்கும். தமிழ்நாடு முதல்வர் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த இயந்திரத்தை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்த பொழுது விவசாயிகள் அவரிடம் இந்த கோரிக்கையை வைத்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் முதன்முறையாக நெல் உலர்த்தும் இயந்திரம் மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் கொண்டுவரப்பட்டதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 
டிராக்டருடன் இணைந்தபடி பஞ்சாப்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் மதிப்பு 25 லட்சம் ஆகும். ஒரு மணி நேரத்தில் 1.5 டன் நெல்லை உலர்த்த முடியும். இதன் மூலம் 22% ஈரப்பதம் உள்ள நெல்லை 11% ஈரப்பதத்திற்கு மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget