மேலும் அறிய

துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து தொழில் மறியல் செய்து மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என மீனவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இன்று  நடைபெற்ற மூன்று மாவட்ட மீனவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படை மற்றும் மத்திய அரசை கண்டித்து நவம்பர் 11ம் தேதி தொழில் மறியல் செய்து மிகப்பெரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்குச் சொந்தமான விசைப்படகில், மயிலாடுதுறை மாவட்டம் வாணகிரி கிராமத்தை சேர்ந்த வீரவேல், செல்வகுமார், செல்லத்துரை உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடந்த 20-ம் தேதி அதிகாலை, நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 30 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் பாக் ஜலசந்தி கடல் பகுதியான இந்திய, இலங்கை சர்வதேச கடல் பகுதி வழியாக கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தப் பகுதியில் ஐஎன்எஸ் பங்காரம் என்ற இந்திய கடற்படை கப்பலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர்கள் மீனவர்களின் விசைப்படகை நிறுத்தும்படி கூறியுள்ளனர். ஆனால், மீனவர்கள் படகை நிறுத்தாததால், படகின் மீது துப்பாக்கியால் சுட்டனர்.


துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

இதில் வீரவேல் என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து, கடற்படைக்குச் சொந்தமான விமானப்படை தளத்தில் இருந்து சென்ற ஹெலிகாப்டர் மூலம் வீரவேல் மீட்கப்பட்டு, மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், மற்ற 9 மீனவர்கள் மற்றும் விசைப்படகை, நாகைதுறைமுகத்தில், கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் கடற்படையினர்  ஒப்படைத்தனர். அதன்பின் 9 பேரும், நாகை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் மீனவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியும் அதிர்வலையும் ஏற்படுத்தியது.


துப்பாக்கிச்சூடு விவகாரம் : கடற்படையை கண்டித்து நவ.11-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - மீனவர்கள் தீர்மானம்..!

இந்நிலையில் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தனியார் திருமண திருமண மண்டபத்தில் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால் ஆகிய 3 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 3 மாவட்டங்களைச் சார்ந்த 21 கிராம மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மயிலாடுதுறை, காரைக்கால், நாகை மாவட்டம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும், கொலை வெறி தாக்குதல் நடத்திய இந்திய கடற்படையையும், மத்திய அரசையும் கண்டித்து கடலூர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாவட்ட மீனவர்கள் சார்பில் வருகின்ற  நவம்பர் மாதம் 11ம் தேதி  வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் எந்த இடத்தில் நடந்தாலும் மயிலாடுதுறை, நாகை, காரைக்கால்  ஆகிய 3 மாவட்டங்களும் இணைந்து நடத்திட வேண்டும் என்றும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் அன்று அனைத்து மாவட்ட மீனவர்களும் தொழில் மறியல் செய்திட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

T20 World cup 2022: ஜிம்பாவே டூ அயர்லாந்து டி20 உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணியை ஓட விட்ட கத்துக்குட்டிகள்...

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
All-New Tata Punch Turbo: வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
வந்துட்டேன்னு சொல்லு, பவரா வந்துட்டேன்னு சொல்லு; புதிய டாடா பஞ்ச் டர்போ - சக்திவாய்ந்த எஞ்சினுடன்
The AQI Illusion: காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
காற்று தரக் குறியீடு மாயை: தரவுகள் பற்றாக்குறையால் சரிந்துவரும் இந்தியாவின் மாசுபாடு போராட்டம்
Embed widget