8 தொகுதிகள், 23 சுற்றுகள்: தஞ்சை வாக்கு எண்ணிக்கை அப்டேட்
தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விளக்கம் அளித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த ஏப். 23, 2026 தேர்தல் நடந்தது. முன்னதாக மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6, 2026 வேட்புமனுதாக்கல் நிறைவு நாள்.தொடர்ந்து மறுநாள் ஏப்.7ம் தேதி வேட்புமனுப் பரிசீலனை நடந்தது. பின்னர் வேட்புமனுக்களை ஏப்.9ம் தேதி திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் அனல் பறந்த பிரச்சாரங்கள் கடந்த ஏப்.21ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் ஏப்.23ம் தேதி வாக்குகள் பதிவு நடந்தது. இதையடுத்து வரும் மே 4ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி மூன்று மையங்களில் எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.
இதில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதில் திருவிடைமருதூர் தொகுதியில் 14 பேர் போட்டியிட்ட நிலையில், 326 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 301 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 315 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படவுள்ளது. நடைபெறவுள்ளது.
திருவையாறு தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில், 340 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 25 சுற்றுகளாகவும், தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 9 பேர் போட்டியிட்ட நிலையில் 314 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளது.
பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 310 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில் 284 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள்,21 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















