மேலும் அறிய

குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

ஒரு மாதத்திற்கு முன் தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய போலீஸாரால் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்டு சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த 17 வயது  ஆதரவற்ற சிறுவன் தனது படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக அம்மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டு மார்ச் 5 ஆம் தேதி தஞ்சாவூர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சேர்ந்து இரண்டு தினங்களே ஆன நிலையில், அவர் மார்ச் 7 ஆம் தேதி அங்கிருந்து யாரிடமும் தகவல் எதுவும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றுவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து அச்சிறுவனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அச்சிறுவன் சுமார் ஒரு மாதத்திற்கு முன் தேனி மாவட்டம் வருசநாடு காவல் நிலைய போலீஸாரால் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக பிடிக்கப்பட்டு சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

தான் ஏற்கெனவே தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து வந்ததாகவும், தற்போது மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க விருப்புவதாகவும் அச்சிறுவன் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை மீண்டும் தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் சேர்த்து, பள்ளியில் படிக்க வைக்க சம்பந்தப்பட்ட துறையினருக்கு சிறார் நீதிக் குழும நீதிபதி உத்தரவிட்டார். அதுவரையில் அச்சிறுவனை மதுரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். அதன்படி, இதைத் தொடர்ந்து அச்சிறுவன் குழந்தைகள் நலக்குழு முன்பு ஆஜர்படுத்தப்பட்டு மதுரையில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.


குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

இந்நிலையில், சிறார் நீதிக் குழும உத்தரவின்பேரில், தஞ்சாவூர் அரசினர் இல்லத்தைச் சேர்ந்த ஊழியர்கள் திருவேங்கடம், மதியழகன் ஆகிய இருவரும் மதுரைக்குச் சென்று அச்சிறுவனை பேருந்தில் தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். அம்மூவரும் இரவு 7 மணியளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்களது மோட்டார் சைக்கிளை சிறுவர்கள் இல்ல ஊழியர்கள் எடுத்துக் கொண்டிருந்த போது அச்சிறுவன் திடீரென  மாயமானார்.


குற்றவழக்குகளில் தொடர்புடைய 17 வயது சிறுவன் தஞ்சையில் எஸ்கேப்

சிறுவனை காணாமல் போனதால், ஊழியர்கள் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தேடி பார்த்தனர். அச்சிறுவன் இல்லாததா், இரண்டு ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவ்விருவரும் தொடர்ந்து உடனடியாக புதிய பேருந்து நிலையம் வெளி பகுதிகளில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தேடியும் அச்சிறுவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி அரசினர் குழந்தைகள் இல்ல ஊழியர் திருவேங்கடம் அளித்த புகாரின்பேரில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாயகிப்போன அச்சிறுவனைத் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
Embed widget