முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்; தமிழிசை எச்சரிக்கை
புதுச்சேரியில் நாளை முதல் கொரோனா தடுப்பு விதிகள் அமலுககு வரும் என்றும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதபை் போல, அண்டை மாநிலமான பாண்டிச்சேரியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த மாநில சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்து, தேர்தல் முடிவுக்காக காத்திருப்பதால் சுகாதாரத்துறையினரின் தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கண்காணித்து வருகிறார்.

இந்தநிலையில், தமிழிசை சவுந்திரராஜன் புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை இன்று தொடங்கிவைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ கொரோனா தொற்று புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. நூறு சதவீதம் கொரோனாவை கட்டுப்படுத்த நூறு இடங்களில் பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்படவுள்ளது.
இப்பணி வரும் 11 முதல் 14 வரை புதுச்சேரியில் நடக்கும். புதுச்சேரியில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 100 அபராதம் நாளை முதல் விதிக்கப்படும். இதைபோல் நாளை முதல் செயல்படுத்த உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளோம். அதன்படி, முககவசம் அணியாவிட்டால் கடைகளில், மால்களில் அனுமதிக்கக்கூடாது.

திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். அனைத்து நிகழ்வுகளிலும் இருக்கைகளில் 50 சதவீதத்தினரை மட்டும் அனுமதிக்கவேண்டும். திருக்கோயில்கள் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இரவு 12 முதல் காலை 5 வரை கொரோனா கட்டுப்பாடுகள் புதுச்சேரியில் அமலில் இருக்கும். பஸ்களில் நின்றபடி பயணிக்க அனுமதி இல்லை. ஆட்டோவில் இருவர் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும்.
மதுவிலை ஏற்கெனவே இருந்தவிலைதான் நடைமுறைக்குவந்துள்ளது. புதிதாக மதுவிலையை குறைக்கவில்லை. கரோனா அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு நிலை இல்லை. கட்டுப்பாட்டுடன் இருந்து கொரோனாவை வெல்வோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.
Before You Go
Tirupathur Women | ஆபாசமாக பேசிய நபர்! தர்மஅடி கொடுத்த பெண்கள்! பெட்ரோல் ஊற்றிய பகீர் சம்பவம்
ட்ரெண்டிங் செய்திகள்






















