மேலும் அறிய
Advertisement
தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது ஏன் ? - நீதிபதி புதிய விளக்கம்
தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது விஜயேந்திரர் தியான நிலையில் அமர்ந்து கண்களை மூடி உள்ளார்; தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவர் அந்த வகையில் கூட மரியாதையை செலுத்தியிருக்கலாம் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்
கடந்த 2018 ஜனவரியில், சென்னையில் நடைபெற்ற தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் அவர் எழுந்து நின்று மரியாதை செய்தார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது அவர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கண். இளங்கோ 12 பேருடன் ராமேஸ்வரம் காஞ்சி மடத்திற்கு சென்று விஜயேந்திரருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி உள்ளார். இது தொடர்பாக ராமேஸ்வரம் காஞ்சி மடத்தின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமேஸ்வரம் கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கண். இளங்கோ சார்பில் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " தமிழ் தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல். அது தேசிய கீதம் இல்லை. தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்கவேண்டும் என விதிகள் எதுவும் இல்லை. ஆனால் தமிழ் பால் கொண்ட அதீத பற்று மற்றும் மரியாதையின் காரணமாகவே எழுந்து நிற்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது விஜயேந்திரர் தியான நிலையில் அமர்ந்து கண்களை மூடி உள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு அவர் அந்த வகையில் கூட மரியாதையை செலுத்தியிருக்கலாம். எனக்கூறி கண் இளங்கோ மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி - குற்றவாளியை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குரும்பபட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி, கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறுமியின் வீட்டின் அருகே இருந்த கிருபானந்தன் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணயில் சாட்சியங்கள் சரிவர நிரூபிக்கப்படாததால் கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டான். இது தமிழகத்தில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யபட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு, "சிறுமியை கடைசியாக பார்த்த நபர் விசாரிக்கப்படவில்லை. அதோடு ரத்தம் படிந்த உள்ளாடை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், விசாரணையில், டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட உள்ளாடை சிறுமியினுடையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. கிருபானந்தனின் வீட்டிலிருந்து சிவப்பு நிற உள்ளாடை, கைக்குட்டை ஆகியவை எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை குறிப்பிட்டு கூறவில்லை. கிருபானந்தன் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட சிவப்பு நிற உள்ளாடை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதா? என சந்தேகம் எழுகிறது. ஆகவே, சந்தேகத்தின் பலனை கிருபானந்தனுக்கு சாதகமாக்கி, கிருபானந்தனை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
உலகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion