மேலும் அறிய

Virudhachalam Student Death: தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு துயரம்! 'சரியா படிக்க வரல..' : மன உளைச்சலில் இருந்த +2 மாணவி தற்கொலை..!

விருத்தாசலம் அருகே சரியாகப் படிக்கமுடியவில்லை என்று மன உளைச்சலில் இருந்த +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் அருகே சரியாகப் படிக்கமுடியவில்லை என்று மன உளைச்சலில் இருந்த +2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் கடந்த சில நாட்களாக மாணவி மன உளைச்சலில் இருந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த மாணவி தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி, மாதாந்திர தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிவிட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த சூழலில் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மாணவியின் அறைக்கு சென்று பெற்றோர் பார்த்த போது தூக்கிட்டு தற்கொலை செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Virudhachalam Student Death: தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு துயரம்! 'சரியா படிக்க வரல..' : மன உளைச்சலில் இருந்த +2 மாணவி தற்கொலை..!

இதையடுத்து உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர்கள் மற்றும் அவரது உறவினர்கள், இறுதி சடங்கு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் இது குறித்து தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர், இறுதி சடங்குகாக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, உடற் கூராய்வு பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மாணவி முன்பு சிறப்பாக படித்ததாகவும், தற்போது சரியாக படிக்கவில்லை என்று மாணவியின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளனர். மேலும் மகளை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு மாணவியின் பெற்றோருக்கு இருந்துள்ளது. அதனால் மாணவியின் படிப்பு விஷயத்தில் தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டதால் சமீபத்தில் நடந்த தேர்வில் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்று அருகே உள்ளவர்களிடம் கூறி கவலையுடன் இருந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

மேற்கொண்டு மாணவி தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக அவர் படித்த பள்ளி தரப்பில் எந்த தொடர் இல்லை என்று காவல் துறை முதற் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
கடன் சுமை வேண்டாம் !! 10-ம் வகுப்பு மகனுக்காக தம்பதி எடுத்த அதிர்ச்சி முடிவு
ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
ரெயில் பயணிகள் கவனத்திற்கு !! பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!
பழனி கோயில் பத்திரப்பதிவு முறைகேடு: நிர்மல்குமார் மீது மூர்த்தி கடும் குற்றச்சாட்டு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Magalir Urimai Thogai : மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மகளிர்களுக்கு ஜாக்பாட்.! மாதம் ரூ.2500 வங்கி கணக்குக்கு வரப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
Embed widget