மேலும் அறிய

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, பலசரக்கு, காய்கறி, தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கம்மிய குரலில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

பல மளிகை கடைகள் திறக்கும் நேரமே காலை 9 மணிதான் என்றும், அப்படி 6 மணி அளவில் திறந்தால் பொருட்களை வெளியே எடுத்து வைப்பதற்கும், பின்னர் 12 மணிக்கு முன்னதாக உள்ளே எடுத்து வைப்பதற்குமே பாதி நேரம் போய்விடும் என கலக்கத்துடன் பேசும் வியாபாரிகள், விற்பனை நேரத்தை குறைத்தால் வாடிக்கையாளர்களின் கூட்டம் கடைகளில் அதிகரிக்குமே தவிர குறையாது என தெரிவித்துள்ளனர். எனவே கடைகள் மூடும் நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே பல்வேறு சிரமங்களை தாங்கள் சந்தித்துவரும் நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது :-

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நிச்சயம் நீட்டிக்க வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என தெரியவில்லை. இப்படி நேரத்தை மிக குறைந்த அளவில் வைக்கும்போது அவசர அவசரமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பார்கள், இப்படி முண்டியடிக்க நேர்ந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான நோக்கமே சிதைந்துபோய்விடும்.

இந்த 6 மணிமுதல் 12 மட்டும் கடைகள் திறக்கவேண்டும் என்பது வியாபாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்; இதை ஏற்க இயலாது. காலை 6 மணிக்கெல்லாம் பெருவாரியான மக்கள் யாரும் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்குவதில்லை. அதேபோல் இந்த நேரம் என்பது கடைகளை திறந்து பொருட்களை எடுத்து வைப்பதற்கும், மீண்டும் மூடுவதற்குமே சரியாக போய்விடும். அதேபோல் எந்தெந்த கடைகள் எல்லாம் திறக்கலாம் என்பதை தமிழக அரசு மீண்டும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும். பூ வியாபாரிகள் எல்லாம் கடைகளை திறக்கலாமா ? உரம் போன்ற விவசாய இடுபொருட்களை விற்பவர்கள் கடைகளை திறக்கலாமா என்பதையெல்லாம் சொல்லவேண்டும். விவசாய இடுபொருட்களும், உற்பத்தி பொருட்களும் கிடைக்கவில்லையென்றால் விவசாயமே பாதிக்கப்பட்டுவிடும். இங்கெல்லாம் கூட்டங்கள் கூடாது என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். பொத்தாம்பொதுவாக எல்லா கடைகளையும் மூடியாகவேண்டும் என்று அவர்கள் சொல்லிவிடமுடியாது. பொதுவாக ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் எல்லாம் கூட்டம் இருக்காது இப்படியான கடைகளை எல்லாம் திறக்க அனுமதிக்கலாம்.

நடுத்தர வியாபாரிகள் எல்லாம் நாளடைவில் இருப்பார்களா அல்லது இருக்க மாட்டார்களா என்பதே பெரிய கேள்விகுறியாக இப்போது இருக்கிறது. எனவே கடைகளை பிற்பகல் 2 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்ககுறைண்ட்வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகள் அனுபவம். கள செய்தியாளர், கண்டண்ட் ரைட்டர், அசைன்மெண்ட் பொறுப்பாளர், டிக்கர் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் வெற்றிகரமாக பணியாற்றியவர் / பணியாற்றி வருபவர். கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதியும், அரசியல், நிர்வாக, கலை ஆளுமைகளின் நேர்காணல் எடுத்தும் வருபவர். தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு விடைதாள் முறைகேடு, மத்திய அரசுகளின் தேர்வுகளில் தமிழ் புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான செய்திகளை பிரத்யேகமாக வழங்கியவர்.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget