மேலும் அறிய

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, பலசரக்கு, காய்கறி, தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கம்மிய குரலில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

பல மளிகை கடைகள் திறக்கும் நேரமே காலை 9 மணிதான் என்றும், அப்படி 6 மணி அளவில் திறந்தால் பொருட்களை வெளியே எடுத்து வைப்பதற்கும், பின்னர் 12 மணிக்கு முன்னதாக உள்ளே எடுத்து வைப்பதற்குமே பாதி நேரம் போய்விடும் என கலக்கத்துடன் பேசும் வியாபாரிகள், விற்பனை நேரத்தை குறைத்தால் வாடிக்கையாளர்களின் கூட்டம் கடைகளில் அதிகரிக்குமே தவிர குறையாது என தெரிவித்துள்ளனர். எனவே கடைகள் மூடும் நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே பல்வேறு சிரமங்களை தாங்கள் சந்தித்துவரும் நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது :-

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நிச்சயம் நீட்டிக்க வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என தெரியவில்லை. இப்படி நேரத்தை மிக குறைந்த அளவில் வைக்கும்போது அவசர அவசரமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பார்கள், இப்படி முண்டியடிக்க நேர்ந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான நோக்கமே சிதைந்துபோய்விடும்.

இந்த 6 மணிமுதல் 12 மட்டும் கடைகள் திறக்கவேண்டும் என்பது வியாபாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்; இதை ஏற்க இயலாது. காலை 6 மணிக்கெல்லாம் பெருவாரியான மக்கள் யாரும் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்குவதில்லை. அதேபோல் இந்த நேரம் என்பது கடைகளை திறந்து பொருட்களை எடுத்து வைப்பதற்கும், மீண்டும் மூடுவதற்குமே சரியாக போய்விடும். அதேபோல் எந்தெந்த கடைகள் எல்லாம் திறக்கலாம் என்பதை தமிழக அரசு மீண்டும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும். பூ வியாபாரிகள் எல்லாம் கடைகளை திறக்கலாமா ? உரம் போன்ற விவசாய இடுபொருட்களை விற்பவர்கள் கடைகளை திறக்கலாமா என்பதையெல்லாம் சொல்லவேண்டும். விவசாய இடுபொருட்களும், உற்பத்தி பொருட்களும் கிடைக்கவில்லையென்றால் விவசாயமே பாதிக்கப்பட்டுவிடும். இங்கெல்லாம் கூட்டங்கள் கூடாது என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். பொத்தாம்பொதுவாக எல்லா கடைகளையும் மூடியாகவேண்டும் என்று அவர்கள் சொல்லிவிடமுடியாது. பொதுவாக ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் எல்லாம் கூட்டம் இருக்காது இப்படியான கடைகளை எல்லாம் திறக்க அனுமதிக்கலாம்.

நடுத்தர வியாபாரிகள் எல்லாம் நாளடைவில் இருப்பார்களா அல்லது இருக்க மாட்டார்களா என்பதே பெரிய கேள்விகுறியாக இப்போது இருக்கிறது. எனவே கடைகளை பிற்பகல் 2 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்ககுறைண்ட்வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Jana Nayagan Issue: காலையில் சான்றிதழ், மாலையில் தடை- பொங்கலுக்குப் பிறகே ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
DMK CONGRESS Alliance: Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
Shut UP..! கூட்டணி பற்றி யாரும் பேசாதீங்க... காங். நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட செல்வப்பெருந்தகை
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
மாணவர்களே.. பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு! விடுமுறை இல்லை- வெளியான பரபரப்பு தகவல்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
திமுக தேர்தல் வாக்குறுதி 2021: முதலமைச்சர் ஸ்டாலின் VS அன்புமணி ராமதாஸ் - முழு விவரம்!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
வங்கக் கடலில் புயல் சின்னம்: அடுத்த 7 நாட்களுக்கு மழை எச்சரிக்கை! மீனவர்கள் கவனத்திற்கு!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
TN Rain Alert: ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை! சென்னை, கடலூர் உட்பட 4 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை - உஷார் மக்களே!
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
இன்னும் 30 நாள் தான்.! தமிழகத்திற்கான கனவு திட்டம் வரப்போகுது- முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
New Cars Launch: டாடா முதல் மாருதி வரை... இந்தியாவிற்கு வரப்போகும் 7 புதிய கார்கள் இதுதான் - ரெடியா இருங்க!
Embed widget