மேலும் அறிய

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, பலசரக்கு, காய்கறி, தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கம்மிய குரலில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

பல மளிகை கடைகள் திறக்கும் நேரமே காலை 9 மணிதான் என்றும், அப்படி 6 மணி அளவில் திறந்தால் பொருட்களை வெளியே எடுத்து வைப்பதற்கும், பின்னர் 12 மணிக்கு முன்னதாக உள்ளே எடுத்து வைப்பதற்குமே பாதி நேரம் போய்விடும் என கலக்கத்துடன் பேசும் வியாபாரிகள், விற்பனை நேரத்தை குறைத்தால் வாடிக்கையாளர்களின் கூட்டம் கடைகளில் அதிகரிக்குமே தவிர குறையாது என தெரிவித்துள்ளனர். எனவே கடைகள் மூடும் நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே பல்வேறு சிரமங்களை தாங்கள் சந்தித்துவரும் நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது :-

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நிச்சயம் நீட்டிக்க வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என தெரியவில்லை. இப்படி நேரத்தை மிக குறைந்த அளவில் வைக்கும்போது அவசர அவசரமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பார்கள், இப்படி முண்டியடிக்க நேர்ந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான நோக்கமே சிதைந்துபோய்விடும்.

இந்த 6 மணிமுதல் 12 மட்டும் கடைகள் திறக்கவேண்டும் என்பது வியாபாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்; இதை ஏற்க இயலாது. காலை 6 மணிக்கெல்லாம் பெருவாரியான மக்கள் யாரும் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்குவதில்லை. அதேபோல் இந்த நேரம் என்பது கடைகளை திறந்து பொருட்களை எடுத்து வைப்பதற்கும், மீண்டும் மூடுவதற்குமே சரியாக போய்விடும். அதேபோல் எந்தெந்த கடைகள் எல்லாம் திறக்கலாம் என்பதை தமிழக அரசு மீண்டும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும். பூ வியாபாரிகள் எல்லாம் கடைகளை திறக்கலாமா ? உரம் போன்ற விவசாய இடுபொருட்களை விற்பவர்கள் கடைகளை திறக்கலாமா என்பதையெல்லாம் சொல்லவேண்டும். விவசாய இடுபொருட்களும், உற்பத்தி பொருட்களும் கிடைக்கவில்லையென்றால் விவசாயமே பாதிக்கப்பட்டுவிடும். இங்கெல்லாம் கூட்டங்கள் கூடாது என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். பொத்தாம்பொதுவாக எல்லா கடைகளையும் மூடியாகவேண்டும் என்று அவர்கள் சொல்லிவிடமுடியாது. பொதுவாக ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் எல்லாம் கூட்டம் இருக்காது இப்படியான கடைகளை எல்லாம் திறக்க அனுமதிக்கலாம்.

நடுத்தர வியாபாரிகள் எல்லாம் நாளடைவில் இருப்பார்களா அல்லது இருக்க மாட்டார்களா என்பதே பெரிய கேள்விகுறியாக இப்போது இருக்கிறது. எனவே கடைகளை பிற்பகல் 2 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்ககுறைண்ட்வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி
Kaliyammal TVK | தவெகவில் காளியம்மாள்? விஜய்யின் MASTERPLAN! ஆட்டத்தை ஆரம்பித்த தவெக
ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 1: குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
குரூப் 1 தேர்வர்களே.. முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி- உடனே பெறுவது எப்படி?
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாதா? மீண்டும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு துரோகமா? அன்புமணி கேள்வி!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
யார் இந்த பவாரியா கும்பல். ? அதிமுக MLA கொடூர கொலை வழக்கில் இன்று தீர்ப்பு .!!
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
UK Citizenship: குடும்பங்களுக்கு ஆப்படித்த இங்கிலாந்து.. கடுமையாகும் குடியுரிமை விதிகள் - சிக்கலில் இந்தியர்கள்
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: முதலமைச்சர் சூளுரை, காலநிலை மாநாட்டில் தீ விபத்து, இங்கி., திணறல் - 11 மணி வரை இன்று
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் மழை, 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..தமிழக வானிலை அறிக்கை
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Chief Justics Of India: இன்றே கடைசி, ஓய்வு பெறுகிறார் கவாய்..! நாட்டின் 53வது தலைமை நீதிபதி யார்? பின்புலம், பணி அனுபவம்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Gambhir Gill: கடைசியில் கில்லுக்கே ஆப்படித்த கம்பீர்.. ரெஸ்ட் வேணும்னு நெனச்சா, நீ ஒதுங்கிடு - காட்டமான அட்வைஸ்
Embed widget