மேலும் அறிய

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை மட்டுமே மளிகை, பலசரக்கு, காய்கறி, தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், கடைகள் திறக்கப்பட்டிருக்கும் நேரத்தை நீட்டிக்கவேண்டும் என்று வியாபாரிகள் கம்மிய குரலில் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்

வரும் 6-ஆம் தேதி முதல் காலை 6 மணிமுதல் மதியம் 12 மணிவரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

பல மளிகை கடைகள் திறக்கும் நேரமே காலை 9 மணிதான் என்றும், அப்படி 6 மணி அளவில் திறந்தால் பொருட்களை வெளியே எடுத்து வைப்பதற்கும், பின்னர் 12 மணிக்கு முன்னதாக உள்ளே எடுத்து வைப்பதற்குமே பாதி நேரம் போய்விடும் என கலக்கத்துடன் பேசும் வியாபாரிகள், விற்பனை நேரத்தை குறைத்தால் வாடிக்கையாளர்களின் கூட்டம் கடைகளில் அதிகரிக்குமே தவிர குறையாது என தெரிவித்துள்ளனர். எனவே கடைகள் மூடும் நேரத்தை பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள வியாபாரிகள், ஏற்கனவே பல்வேறு சிரமங்களை தாங்கள் சந்தித்துவரும் நிலையில் இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவிடம் கேட்டபோது :-

Working Hours extension Request | நேரம் குறைய குறைய மக்கள் அலைமோதுவார்கள் - வணிக நேரத்தை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை..

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நிச்சயம் நீட்டிக்க வேண்டும். கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தால் பொதுமக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? எதன் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் என தெரியவில்லை. இப்படி நேரத்தை மிக குறைந்த அளவில் வைக்கும்போது அவசர அவசரமாக பொதுமக்கள் பொருட்களை வாங்க முண்டியடிப்பார்கள், இப்படி முண்டியடிக்க நேர்ந்தால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்கான நோக்கமே சிதைந்துபோய்விடும்.

இந்த 6 மணிமுதல் 12 மட்டும் கடைகள் திறக்கவேண்டும் என்பது வியாபாரிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும்; இதை ஏற்க இயலாது. காலை 6 மணிக்கெல்லாம் பெருவாரியான மக்கள் யாரும் கடைகளுக்கு வந்து பொருட்களை வாங்குவதில்லை. அதேபோல் இந்த நேரம் என்பது கடைகளை திறந்து பொருட்களை எடுத்து வைப்பதற்கும், மீண்டும் மூடுவதற்குமே சரியாக போய்விடும். அதேபோல் எந்தெந்த கடைகள் எல்லாம் திறக்கலாம் என்பதை தமிழக அரசு மீண்டும் சரியாக தெளிவுபடுத்த வேண்டும். பூ வியாபாரிகள் எல்லாம் கடைகளை திறக்கலாமா ? உரம் போன்ற விவசாய இடுபொருட்களை விற்பவர்கள் கடைகளை திறக்கலாமா என்பதையெல்லாம் சொல்லவேண்டும். விவசாய இடுபொருட்களும், உற்பத்தி பொருட்களும் கிடைக்கவில்லையென்றால் விவசாயமே பாதிக்கப்பட்டுவிடும். இங்கெல்லாம் கூட்டங்கள் கூடாது என்பதை அதிகாரிகள் உணரவேண்டும். பொத்தாம்பொதுவாக எல்லா கடைகளையும் மூடியாகவேண்டும் என்று அவர்கள் சொல்லிவிடமுடியாது. பொதுவாக ஃபர்னிச்சர் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்கும் கடைகளில் எல்லாம் கூட்டம் இருக்காது இப்படியான கடைகளை எல்லாம் திறக்க அனுமதிக்கலாம்.

நடுத்தர வியாபாரிகள் எல்லாம் நாளடைவில் இருப்பார்களா அல்லது இருக்க மாட்டார்களா என்பதே பெரிய கேள்விகுறியாக இப்போது இருக்கிறது. எனவே கடைகளை பிற்பகல் 2 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்ககுறைண்ட்வேண்டும். இது தொடர்பாக தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு சார்பில் வலியுறுத்தவுள்ளோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget