மேலும் அறிய

Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 

ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மின் உபகரணங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று 8 மணி நேரம் தற்காலிகமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று ஜூலை 23 (வியாழக்கிழமை) ஆடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.

கும்பகோணம் வடக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மின் உபகரணங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் தற்காலிகமாக மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 

மின்விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஆடுதுறை
கோவிந்தபுரம்
வண்ணக்குடி
நரசிங்கன்பேட்டை
மணலூர்
திருமங்கலக்குடி
பருத்திக்குடி
கஞ்சனூர்
கோட்டூர்
திருக்கோடிக்காவல்
திருலோகி
சாத்தனூர்
சூரியனார்கோவில்
திருவிடைமருதூர்
மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும்.
மின்தடைக்கு முன் பொதுமக்கள் செய்ய வேண்டியவை

மின்தடை காரணமாக அன்றாட பணிகளில் இடையூறு ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வீடுகளில் குடிநீர் தேவையை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். மின்மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பவர்கள், மின்தடை தொடங்கும் முன்பே மேல்நிலைத் தொட்டிகளை நிரப்பி வைத்துக் கொள்வது நல்லது.

செல்போன், லேப்டாப், இன்வெர்ட்டர், பவர் பேங்க் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை முன்கூட்டியே முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்காக டார்ச் லைட், அவசர விளக்கு மற்றும் கூடுதல் பேட்டரிகளையும் தயாராக வைத்திருப்பது பயனளிக்கும். குளிர்சாதனப் பெட்டியை அடிக்கடி திறக்காமல் இருப்பதன் மூலம் அதில் உள்ள உணவுப் பொருட்கள் நீண்ட நேரம் குளிர்ச்சியுடன் பாதுகாக்கப்படும். மருந்துகள் அல்லது குளிர்சாதனத்தில் வைக்க வேண்டிய பொருட்கள் இருப்பின், அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும்.

வணிக நிறுவனங்கள், சிறு தொழிற்சாலைகள் மற்றும் விவசாயிகள் தங்களது பணிகளை மின்தடைக்கு ஏற்ப முன்கூட்டியே திட்டமிட வேண்டும். குறிப்பாக மின்மோட்டார் மூலம் பாசனம் செய்யும் விவசாயிகள், மின்தடைக்கு முன்போ அல்லது மின்விநியோகம் மீண்டும் தொடங்கிய பின்னரோ பாசனப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்விநியோகம் திரும்பும் போது கவனம் அவசியம்

மின்விநியோகம் மீண்டும் தொடங்கும்போது மின்னழுத்த ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், மின்சாதனங்களை ஒரே நேரத்தில் இயக்காமல் சிறிது நேரம் கழித்து பயன்படுத்துவது நல்லது. மின்சார கசிவு அல்லது பழுதடைந்த கம்பிகள் இருந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பராமரிப்பு பணிகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பாக நிறைவடைந்தால், மின்விநியோகம் முன்கூட்டியே வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 8 மணி நேரத்தை "கரண்ட் இல்லை" என்று புலம்புவதற்குப் பதிலாக, கொஞ்சம் திட்டமிட்டு பயன்படுத்திக்கொள்ளலாம். மொபைல், லேப்டாப், பவர் பேங்க் ஆகியவற்றை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளுங்கள். குடிநீரை சேமித்து வையுங்கள். வீட்டில் வயதானவர்கள், குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள். காலை 9 மணிக்கு பிறகு சுவிட்சை பத்து தடவை ஆன்-ஆஃப் பண்ணி "கரண்ட் வந்தாச்சா?"ன்னு சோதனை பண்ணாதீங்க! பராமரிப்பு பணி நடக்கும் நேரம் அது. கொஞ்சம் பொறுமையாக இருந்தால், மாலைக்குள் மின்சாரம் வழக்கம்போல் திரும்பிவிடும்.

Advertisement

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தில் குவியும் புதிய ஆலைகள்! புதிதாக வருகிறது 2,400+ வேலைவாய்ப்புகள் - முழு விவரம்!
கோயம்புத்தூர், காஞ்சிபுரத்தில் குவியும் புதிய ஆலைகள்! புதிதாக வருகிறது 2,400+ வேலைவாய்ப்புகள் - முழு விவரம்!
TN EB Bill: மின் கட்டணம் அதிகமா வந்துருக்கா?.. ஒரு யூனிட் எவ்வளவு? என்ன பிரச்னை.. யார் மேல் தப்பு?
மின் கட்டணம் அதிகமா வந்துருக்கா?.. ஒரு யூனிட் எவ்வளவு? என்ன பிரச்னை.. யார் மேல் தப்பு?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget