மேலும் அறிய

திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரையில் உள்ள பாரம்பரிய சின்னமான திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டிற்கும் உலகளவில் பெருமை சேர்த்துள்ளது. கடந்த ஆட்சியில் கீழடியில் அகழாய்வு பணிகளை உலகிற்கு காட்டும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கீழடியில் இன்று தொழில்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு கிடைத்த பழங்கால பொருட்களையும் நேரில் கண்டறிந்தார்.

இதையடுத்து, மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் திருமலை நாயக்கர் மஹாலில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது, “தென்தமிழகத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னமாகவும், மதுரை நகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும் திருமலை நாயக்கர் அரண்மனை திகழ்ந்து வருகிறது. இந்த அரண்மனை வளாகத்தை தமிழக அரசு புதுப்பித்து பொலிவு பெறச்செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள இத்தகைய மரபு, பண்பாட்டுச் சின்னங்களை அவற்றின் பழமை மாறாமல் புதுப்பித்து தமிழர் நாகரீகம், பண்பாட்டை உலகறியச் செய்யும் வகையிலும் சரியான முறையில் பராமரிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, தமிழக அரசின் தொல்லியில் துறையால் இந்த அரண்மனை வளாகம் ரூபாய் 8 கோடி செலவில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.


திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

பல்வேறு காலகட்டங்களில் இந்த அரண்மனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது ரூபாய் 11 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது அரண்மனையில் உள்ள நாடக சாலை, பள்ளியறை போன்ற பகுதிகள் புதுப்பிக்கப்பட உள்ளன.  இந்த அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்தில் பல்வேறு கால கல்வெட்டுக்கள் பராமரிக்கப்படுகின்றன. தொன்மையான வட்டெழுத்து, கல்வெட்டுகள் சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்தி சோழர், பாண்டியர் கால கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை முறைப்படுத்தி அவற்றின் சிறப்புகளை எளிதில் உணரும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். இந்த பணிகள் அனைத்தும் 3 கட்டங்களாக நடைபெறும். இதில் முதற்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்படும். மேலும், அரண்மனைக்கு வெளியே கற்சிற்பங்களுடன் கூடிய பூங்கா, பழமையை வெளிப்படுத்தும் நூலகம் ஆகியனவும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.


திருமலை நாயக்கர் அரண்மனை ரூபாய் 8 கோடியில் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தொன்மையான நகரின் வரலாற்றுச் சுவடாக இருக்கக்கூடிய திருமலை நாயக்கர் அரண்மனையானது புதுப்பிக்கும் பணிகளைின் வாயிலாக மேலும் பொலிவுபெறும்.  தமிழை எந்த காலத்திலும் யாராலும் புறக்கணிக்க முடியாது. தமிழின் தொன்மையான எழுத்து வடிவிலேயே 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை கீழடி ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.  இத்தகைய பெருமைகளின் காரணமாகவே தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தமிழைப் புறக்கணிக்கும் முயற்சிகளில் யாரேனும் ஈடுபட்டால் நமது மொழிக்கான முக்கியத்துவத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து வழிமுறைகளும் தமிழக அரசு மேற்கொள்ளும். தொழில் வளர்ச்சியில் தென்மாவட்டங்கள் பின் தங்கியிருக்கின்றன. இதை கருத்தில் கொண்டு முந்தைய தி.மு.க. ஆட்சியில் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட்டபோது தென்மாவட்டங்கள் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன் அடிப்படையில், மதுரை – தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டத்துக்கு வடிவம் கொடுக்கப்பட்டது.

இதன் செயலாக்கத்துக்கான ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டாலும் கடந்த 10 ஆண்டுகளில் எந்தவிதமான செயல்வடிவமும் பெறாமல் இருக்கிறது. இதனால், மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச்சாலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், புதிய தொழிற்சாலைகளை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Embed widget