Tamilnadu Roundup: இன்றும் தொடரும் மழை! திருவள்ளூரில் மு.க.ஸ்டாலின் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே விரிவாக காணலாம்.

நாடு முழுவதும் விரைவில் புதிய 100 ரூபாய், 200 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்
மொபைல் செயலி உதவியால் கடந்த 6 மாதத்தில் 550 ரவுடிகளை கைது செய்தது தமிழக காவல்துறை
எது எங்களுக்குத் தேவையோ அதனை ஏற்றுக்கொள்வோம் என்றோ தமிழக அரசு கடிதத்தில் தெரிவித்திருந்தது - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கனிமொழி பதில்
தொகுதி மறுசீரமைப்பு மூலம் தமிழ்நாட்டிற்கும் கூடுதல் இடங்கள் கிடைக்கும் - ராஜ்நாத் சிங்
கள்ளக்குறிச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீட்டர் மழை பதிவு
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
கனமழை எச்சரிக்கை; தூத்துக்குடியில் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை
சேலம் ஆவினில் இருந்து இந்திய கடற்படைக்கு அனுப்பப்படுகிறது 8 ஆயிரம் லிட்டர் ஆவின் பால்
மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று பா.ஜ.க. பொதுக்கூட்டம் - திருவள்ளூரில் முதலமைச்சர் பங்கேற்கிறார்
திமுக மாணவரணி செயலாளராக ராஜீவ்காந்தி நியமனம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
திராவிட கட்சிகளை வலிமையுடன் எதிர்க்குமாறு சீமானுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்
கன்னியாகுமரி அருகே மதுபோதையில் யானை மேல் படுத்து உறங்கிய பாகன் - சாலையிலே யானை நின்றதால் மக்கள் அச்சம்
பாளையங்கோட்டையில் தாமிரபரணி குடிநீரில் புழுக்கள் - குழாய்களை சுத்தம் செய்ய மக்கள் வேண்டுகோள்
புதுச்சேரியில் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல்





















