மேலும் அறிய

சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்காக உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
tamilnadu covid-19 live updates latest news updates corona சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்காக உதவி எண்கள் அறிவிப்பு
கொரோனா வைரஸ் லைவ் அப்டேட்ஸ்

Background

17:57 PM (IST)  •  25 May 2021

சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்கான உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரும் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்று கொரோனா பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்காக பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1098, 99442 90306, 044 2595 2450 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

16:42 PM (IST)  •  25 May 2021

சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக 35 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலையை மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்காக மாநிலம் முழுவதும் 10-ந் தேதி முதல் அமலில் இருந்து வரும் ஊரடங்கு, கடந்த 24-ந் தேதி முதல் எந்த தளர்வும் இல்லாத ஊரடங்காக அமலில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியில் சுற்றியதாக கடந்த 10 நாட்களில் 32 ஆயிரத்து 980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் ஊரடங்கை மீறியதாக 35 ஆயிரத்து 629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

15:54 PM (IST)  •  25 May 2021

கருப்பு பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய பல்துறை நிபுணர்கள் குழு - சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கட்டுக்குள் வராமல் இருந்த கொரோனா தொற்று, நேற்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

“ தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம்.

தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவில் குறைந்து உள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ரூபாய் 46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போடதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, தொழில்முறை, மின்சார வாரியத்துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்டவர்களை கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீராய்டு கொடுப்பதாலும், அசுத்தமான தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு இரண்டு நாட்களிலே ஆராய்ச்சியைத் தொடங்கும். கொரோனா வைரசின் உண்மையான உயிரிழப்பை சொன்னால்தான் மக்களுக்கு விழிப்புணர்வும், பயமும் வரும். எனவே, கொரோனா விழிப்புணர்வில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

15:53 PM (IST)  •  25 May 2021

கருப்பு ப

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கட்டுக்குள் வராமல் இருந்த கொரோனா தொற்று, நேற்று சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக குறையத் தொடங்கியது. கொரோனா தடுப்பு பணிகளை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

“ தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கொரோனா சிகிச்சைக்காக செய்யப்பட்டுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம்.

தமிழகத்தில் அரசு எடுத்த துரித நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு 36 ஆயிரத்தில் இருந்து தற்போது 34 ஆயிரத்து 800 என்ற அளவில் குறைந்து உள்ளது. தமிழகத்திற்கு தற்போது வரை 80 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 70 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

18 வயது முதல் 44 வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ரூபாய் 46 கோடி செலவில் 12 லட்சம் தடுப்பூசிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போடதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக 3.5 கோடி தடுப்பூசிகள் வாங்குவதற்கு உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மருத்துவ ஆக்சிஜனுக்கு இக்கட்டான சூழல் இருந்தது. ஆனால், தமிழக சுகாதாரத்துறை, தொழில்முறை, மின்சார வாரியத்துறைகளின் முயற்சியால் ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா போன்ற பகுதிகளில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டு தற்போது மருத்துவ ஆக்சிஜன் தேவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க கூடிய அளவிற்கு பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்டவர்களை கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீராய்டு கொடுப்பதாலும், அசுத்தமான தண்ணீரில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்து அதை மூச்சாக உள்ளிழுப்பதாலும் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து, ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வல்லுனர்கள் குழு இரண்டு நாட்களிலே ஆராய்ச்சியைத் தொடங்கும். கொரோனா வைரசின் உண்மையான உயிரிழப்பை சொன்னால்தான் மக்களுக்கு விழிப்புணர்வும், பயமும் வரும். எனவே, கொரோனா விழிப்புணர்வில் எந்த ஒளிவுமறைவும் இல்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

14:31 PM (IST)  •  25 May 2021

முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும் - தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது, மேலும், பொதுமக்களின் நலன் கருதி கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் மாநிலம் முழுவதும் 890 தனியார் மருத்துவமனைகளில் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இன்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கொரோனா சிகிச்சைக்காக யார் வந்தாலும் அவர்களுக்கு முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Irfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்Ponmudi | ”பட்டாவ வாங்க மாட்டோம்” பெண்கள் வாக்குவாதம் கடுப்பான பொன்முடி | Villupuram | DMKJose Charles Martin | Annamalai on Amit Shah |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Jana Nayagan: அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
மூதாட்டியின் மூஞ்சியில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
மூதாட்டியின் மூஞ்சியில் மிளகாய் பொடி தூவி தங்க நகை கொள்ளை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!
Embed widget