கடவுளரை பற்றி யாரும் தவறாக பேசவில்லை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தெய்வத்தை பற்றியோ மதத்தைப் பற்றியோ யாரும் தவறாக பேசவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
தெய்வத்தை பற்றியோ மதத்தைப் பற்றியோ யாரும் தவறாக பேசவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கமளித்துள்ளார்.
சேது சமுத்திர திட்டம் பற்றி இன்றைய சட்டப்பேரவையில் விவாதம் நடந்தது. இதில் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தனர். சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அவையில் ராமரை பற்றி கருத்து தெரிவித்தார். இது பெரும் விவாதமாக மாறியது.
சட்டப்பேரவையில் நாகை மாலி, ” சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டு மக்களின் கனவுத்திட்டம். இந்த திட்டத்தை ராமர் பாலம் என சொல்லி கிடப்பில் போட்டுவிட்டது மத்திய அரசு. ராமாயணம் கம்பரின் கற்பனை காவியமாகும். இதனை மகாத்மா காந்தியே கூறியுள்ளார். பலரும் ராமாயணத்தை கற்பனை காவியம் என குறிப்பிட்டுள்ளனர். இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்” என கூறினார்.
பின்னர் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் இதை ஆதரிக்க வேண்டுமா? எதிர்க்க வேண்டுமா என்பது குறித்து தான். அதை விட்டு ராமாயணம் கற்பனை கதைகள் என்றான் பேசுவது. ஏற்புடையதல்ல என குறிப்பிட்டார். இது தெய்வ நம்பிக்கை, இதனை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “தெய்வத்தை பற்றியோ மதத்தைப் பற்றியோ யாரும் குறை சொல்லவில்லை, அதை பயன்படுத்தி தடுத்துவிட்டார்கள் என கூறினார்கள். அப்படி கூறியிருந்தால் நயினார் நாகேந்திரன் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், சேது சமுத்திர திட்டம் வந்தால் எங்களைவிட மகிழ்ச்சியடைபவர்கள் யாரும் இருக்க முடியாது. தெய்வமாக வழிபடும் ராமர் காலத்திலிருந்து இந்த பாலம் இருப்பதாக கூறப்படுகிறது என குறிப்பிட்டு தீர்மானத்தை ஆதிரித்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் இதைப் பற்றி பேசும் போது, இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பலரும் கருத்து கூறி வருகின்றனர். ராமர் என்பவர் கற்பனை கதாப்பாத்திரம் என இந்த அவையில் பதிவானது எங்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. ஒரு நாளுக்கு 1000 முறை ராமா ராமா என கூறுகிறோம். ராமர் ஒரு அவதார புருஷன். கற்பனை கதாப்பாத்திரம் என்ற சொல் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என கூறிப்பிட்டார்.
சேது சமுத்திர திட்டத்தை பற்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். மீனவ சங்கங்களை அழைத்து திட்டம் தொடர்பாக கருத்துக்களை கேட்க வேண்டும் என்றார். மக்களுக்கு பயனுள்ள எந்த திட்டத்தையும் அதிமுக ஆதரிக்கும் என கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் “ இந்த திட்டம் நன்கு அராய்ந்து, ஆய்வு மேற்கொண்டு, மீனவர்கள் மற்றும் அனைவரின் கருத்துக் கேட்டு கொண்ட பின் தான் அடிக்கல் நாட்டப்பட்டது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets