மேலும் அறிய

குறைவான வாய்ப்பு கொண்டவர்களின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

’’ஏபிஜே அப்துல் கலாம், இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதற்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது’’

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின், 6 ஆவது பட்டமளிப்பு விழா இணைய வழியில் நடைபெற்றது. விழாவில் காணொலி காட்சி வாயிலாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது,  மாணவர்கள் தற்போது பெறும் பட்டம், உங்களுக்கு புதிய பயணத்தை அளிக்கும். தொழில்முறையில் உங்கள் கனவுகளுக்கு வடிவம் அளிக்கக் கூடியதாக இருக்கும். ஆனால், நீங்கள் கனவுகள் குறைவான வாய்ப்பு கொண்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவ வேண்டும். அதாவது, பொருளாதார நிலையில் குறைந்து, தங்கள் கனவுகளை நிறைவேற்றி கொள்ள இயலாதவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதி ஏற்க வேண்டும். ஏவுகணை நாயகன் என அழைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம், இந்தியா முன்னேற்றமடைந்த நாடாக மாறுவதற்கு மாணவர்களின் பங்கு இன்றியமையாதது என்றார். அவரின் எண்ணத்தை மாணவர்கள் செயல்படுத்தினால், பிரதமர் மோடியின் புதிய இந்தியா உருவாகும்.

குறைவான வாய்ப்பு கொண்டவர்களின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
 
கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் வரும் ஆண்டுகளில் நமது கல்வி முறையில் நாடு மிகப்பெரிய மாற்றத்தை காண போகிறது. நேர்மையான பாதையில், உங்கள் கனவுகளை செயல்படுத்தினால் சமூகத்தில் சிறப்பான நிலையை அடைய முடியும். இதையே திருவள்ளுவர், கற்க கசடற கற்பவை கற்றபின் அதற்குத் தக என அறிவுறுத்துகிறார். எனவே, மாணவர்கள் அனைவரும், நேர்மையான வழியில் தாங்கள் கற்ற கல்வியின் படி சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்றார்.
 
நிகழ்ச்சியில், மத்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளரும் இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைத் தலைவருமான சதீஸ்ரெட்டி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது... கல்வி நிறுவனங்களில் முக்கிய ஆராய்ச்சி செய்வதன் மூலம் முதல் வகையான தொழில்நுட்பங்களை உருவாக்கவும், புதுமையான யோசனைகளைக் கொண்டு வரவும், அவற்றை நிறுவனங்களில் பயன்பாட்டு ஆராய்ச்சியாக மாற்றவும் மாணவர்கள் முன் வர வேண்டும். இதன்மூலமாக, நிலைத்து நிற்கக் கூடிய புதுமையான உற்பத்திகள் அதிக அளவிலும் குறைந்த விலையிலும் கிடைக்கும் போது நமது நாட்டிற்கு பெருமையை தேடித்தர முடியும் என்றார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பேசியதாவது..

குறைவான வாய்ப்பு கொண்டவர்களின் நிலையை உயர்த்த பாடுபடுங்கள் - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
 
உள்ளூர் விவசாயிகளின் தேவைகளுக்கு பயன்படும் வகையில் விவசாய தொழில்நுட்பம் சார்ந்து ஆராய்ச்சியின் மூலம் உதவுவது, ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மூலம் தேசிய மற்றும் உலகளாவிய அங்கீகாரத்தை பெற சிறந்தக் கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடுவது என இருபெரும் சவால்களை பல்கலைக்கழகம் சந்திக்கிறது. கொரோனா தொற்று பேரிடர் காலங்களில், பல்கலைக்கழகம் உள்ளூர் மக்களுக்காகச் செய்த சிறந்த நலத்திட்டங்கள் சிறப்பானது. இதுபோன்ற நலத்திட்டங்களில் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்ற வேண்டும் என்றார். முன்னதாக மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் துணைவேந்தர் கிருஷ்ணன் வரவேற்புரை நிகழ்த்தி அறிக்கை அளித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan
அதிகாரி நெஞ்சுவலி நாடகம் “சார் இப்படி நடிக்காதீங்க” தவெகவினர் ஆர்ப்பாட்டம் | Officer Fake Heart Attack
Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
Mallai Sathya New Party: தவெகவுக்கு போட்டியாக திவெக? மதிமுக மாஜி மல்லை சத்யா புதுக்கட்சி பெயர் தெரியுமா?
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
‘தூத்துக்குடி மாவட்ட மக்களே - வருகிறது விமான பயிற்சி பள்ளி’ எங்கு தெரியுமா..?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
SUV: காம்பேக்ட் எஸ்யுவி மீது வெறி பிடித்து திரியும் இந்தியர்கள்.. என்ன காரணம்? நகரங்களில் செய்யும் மேஜிக்?
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
Embed widget