Sankaraiah Tribute LIVE: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தியாகி சங்கரய்யா, அஞ்சலி நிகழ்வுகள்.. செய்திகளுக்கு இணைந்திருங்கள்..
மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான சங்கரய்யா வயது மூப்பு காரணமாக இன்று (நவ. 15) சென்னையில் காலமானார்.

Background
தோழர் சங்கரய்யாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
சுதந்திரப் போராட்ட வீரரும் தியாகியுமான சங்கரய்யாவின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக மதிமுக தலைவர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சீதாராம் யெச்சூரி சங்ரய்யா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி
சீதாராம் யெச்சூரி சங்ரய்யா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்..
தோழர் சங்கரய்யாவின் இறுதி ஊர்வலம் எப்போது?
சங்கரய்யா இறுதி ஊர்வலம் நாளை (நவ.16) காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது. பெசன்ட் நகர் இடுகாட்டில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரர்: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
''நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் 15 ஆவது மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமான செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். தன்வாழ்நாளின் பெரும் பகுதியை மக்கள் சேவையிலும், பாட்டாளிகளின் மேம்பாட்டிற்காகவும் அர்ப்பணித்த வீரத்தியாகி’’ என்று முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் அறிவிப்பு
தியாகி சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

