மேலும் அறிய

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் - பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆவின் பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் 26 ஆம் தேதிக்குள் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 28 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் -  பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை

இது தொடர்பாக சேலத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும் பால் மற்றும் எருமை பால் 10 ரூபாய் உயர்த்த வேண்டும் அல்லது கர்நாடகா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு அமைப்பாளர் நந்தினிக்கு வாழ் வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் அடிப்படையில் கர்நாடகா அரசு நிதியிலிருந்து மானியமாக ஊக்கத்தொகையாக அளிப்பதை போல தமிழகத்திலும் வழங்க வேண்டும். ஆவினுக்கு பால் வழங்கும் கூட்டுறவாளர்களின் அனைத்து கறவை இனங்களுக்கும் மத்திய, மாநில அரசு நிதி உதவி மற்றும் மூன்றடுக்கு முறையிலான ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் கூடிய குறைந்தபட்ச உறுப்பினர் கட்டணத்தில் 100% ஆவின் கறவை என காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி அதற்கு முதல்வரின் பெயரை அறிவிக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கிராமப்பால் கூட்டுறவு சங்கங்களின் பணிபுரியும் சுமார் 25 ஆயிரம் பணியாளர்களை பணிவரன் முறைப்படுத்த, இதுவரை கடைபிடிக்க முடியாத தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதியின் படி பணியாளர்கள் பணி நியமன முறைக்கு விதிவிலக்களித்து பணி வரன்முறை படுத்தியும் காலம் முறை ஊதியம் நிர்ணயத்தும் வழக்க வேண்டும் என்றனர்.

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் -  பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ”பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வரும் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லிட்டர் பசும்பால் 32 ரூபாயிலிருந்து 42 ரூபாயாகவும் எருமை பால் ஒரு லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 51 ரூபாயாக கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோரிக்கையை தமிழக அரசு ஏற்காவிட்டால் இரண்டாம் கட்டமாக ஆவின் மற்றும் தனியாருக்கு பால் வழங்கும் அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஒன்றிணைந்து 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும்” எனக் கூறினார். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகும் என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆவினுக்கு பால் வழங்கும் கூட்டுறவாளர்களின் அனைத்து கரவை தினங்களுக்கும் மத்திய அரசு, மாநில அரசு நிதி உதவி மற்றும் உறுப்பினர்கள் கட்டணத்தில் நூறு சதவீதம் ஆவின் காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி அதற்கு மாண்புமிகு முதல்வர் பெயரில் வரையறை செய்து அறிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Karthik: நடிக்க செல்லாமல் இருந்தது ஏன்? உண்மையை உடைத்த நடிகர் கார்த்திக்
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Embed widget