மேலும் அறிய

AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் 1 நிகழ்ச்சிக்கு ரூ.1,600 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டது. மாதத்துக்கு அதிகபட்சம் 6 நிகழ்ச்சிகள் (ஆண்டுக்கு 72 நிகழ்ச்சிகள்) மட்டுமே அளிக்கப்படும். 

அரசு வானொலிகளில் முக்கியமான சென்னை ரெயின்போ எஃப்எம்மில் நீண்ட காலமாக ஒலித்து வரும் குரல்களின் குரல் நசுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகின் முதல் வானொலி 1920-ல் அமெரிக்காவிலும், இரண்டாவது வானொலி 1922-ல்  இங்கிலாந்திலும் தொடங்கப்பட்டன. சென்னை வானொலி ‘மெட்ராஸ் பிரெசிடென்சி ரேடியோ கிளப்’ என்ற பெயரில் 1924-ல் தொடங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு 1938-ல் அகில இந்திய வானொலியின் சென்னை வானொலி நிலையமாக மாற்றப்பட்டது.

சென்னை வானொலியில் தற்போது சென்னை ‘ஏ’, சென்னை ‘பி’, விவித்பாரதி, ரெயின்போ, கோல்டு, யூத் உள்ளிட்ட பல அலைவரிசைகள் ஒலிபரப்பாகி வருகின்றன. 

பிரசார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர் செயலி, அகில இந்திய வானொலியின் 240-க்கும் மேற்பட்ட வானொலி அலைவரிசைகளை நேரலையாக ஒலிபரப்பி வருகிறது. இந்த ஒலிபரப்பு 85-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நேயர்களால் கேட்கப்படுகிறது. இதில் விவித் பாரதியின் தேசிய ஒலிபரப்பு அகில இந்திய வானொலி சேவைகளில் உலகளவில் அதிகம் பேரால் கேட்கப்படும் வானொலி சேவையாக உள்ளது.  அகில இந்திய வானொலியின் சென்னை ரெயின்போ அலைவரிசை இந்த பட்டியலில் 8ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வானொலி அலைவரிசைகள் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஒளிபரப்பாகின்றன.  சிங்கப்பூரில் சென்னை ரெயின்போ 2 ஆவது இடத்திலும், ஏஐஆர் கொடைக்கானல் 3 ஆவது இடத்திலும், சென்னை பி அலைவரிசை 5 ஆம் இடத்திலும், சென்னை எப்எம் கோல்டு 6 ஆவது இடத்திலும், ஏஐஆர் காரைக்கால் 7 ஆவது இடத்திலும், கோவை எப்எம் ரெயின்போ 8 ஆவது இடத்திலும், ஏஐஆர் மதுரை 9 ஆவது இடத்திலும், ஏஐஆர் திருச்சி எப்எம் 10 ஆவது இடத்திலும் உள்ளன.


AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

உலகம் முழுக்கத் தன் சேவையை விரிவுபடுத்திய அகில இந்திய வானொலியில் பல்வேறு அலைவரிசைகள் மூடல், ஒப்பந்த ஊழியர்கள், சம்பளக் குறைப்பு, நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவுவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய வானொலியின் அங்கமான சென்னை வானொலி ரெயின்போ எஃப்எம்மில், பணியாற்றும் ரேடியோ ஜாக்கிகள் பலர் விரிவாகப் பேசினர். 

ஒவ்வோர் ஆண்டும் தகுதித் தேர்வு

''ரெயின்போ பண்பலையில் ஆர்ஜேக்கள் (ரேடியோ ஜாக்கிகள்)  யாருமே நிரந்தர ஊழியர்கள் இல்லை என்பதால், ஒவ்வோர் ஆண்டும் நாங்கள் தகுதித் தேர்வு எழுதித்தான் அங்கு வேலையைப் பெற முடியும். அப்படித் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்ற பிறகு, ஒவ்வொருவரும் 4 மணி நேரம் பணியாற்றுவது வழக்கம். 

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுதான் 1 நிகழ்ச்சிக்கு ரூ.1,600 என்ற தொகை நிர்ணயிக்கப்பட்டது. மாதத்துக்கு அதிகபட்சம் 6 நிகழ்ச்சிகள் (ஆண்டுக்கு 72 நிகழ்ச்சிகள்) மட்டுமே அளிக்கப்படும். 

பல ஆண்டுகளுக்கு முன்பு கிரேடு 1, 2 மற்றும் 3 என்பது ஆர்ஜேக்களைத் தரம் பிரிப்பதாகவும் அவர்களுக்கு முறையே ரூ.3,900,  ரூ.2,600 மற்றும் ரூ.1,300 என்று அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து, தென்னிந்திய ஏடிஜிக்குக் (assistant director general) கடிதம் எழுதினோம். அதைத் தொடர்ந்து கிரேடு பிரித்தது, ரத்து செய்யப்பட்டது. 


AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

ஒரு ஆர்ஜேவுக்கு 4 மணி நேரப் பணி என்ற கணக்கில், ஆர்ஜேக்கள் நேரடி நிகழ்ச்சியில் இருப்போம். அதாவது காலை 6- 10 என்ற நேரத்தில் ஒருவர் பணியில் இருந்தால், 10- 2 என்ற நேரத்தில் இன்னொருவர் லைவ் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொள்வார். இவ்வாறு சுமார் 50 ஆர்ஜேக்கள் பணியில் இருந்தனர். 

கழிப்பறைகூடப் போக முடியாத நிலை

ஆனால் பிப்ரவரி முதல் மாற்றம் கொண்டுவரப்படும் என்று ரெயின்போ வாட்ஸப் குழுவில் செய்தி வந்தது. அதன்படி, ஆர்ஜேக்களின் பணிநேரம் 7.20 மணி நேரம் என்று நிர்வாகம் (PEX- Programming Executive) தெரிவித்தது. உதாரணத்துக்கு 1 மணிக்கு ஒருவர் பணியைத் தொடங்கினால் 8.20 வரை பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் கழிப்பறைகூடப் போக முடியாத நிலை ஏற்படும் என்று 30-க்கும் மேற்பட்ட ஆர்ஜேக்கள் எதிர்த்தோம். 

இதனால் பின்வாங்கிய நிர்வாகம், ஆர்ஜேக்கள் அனைவரும் 3 மணி நேரம் லைவ் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி ஊதியமும் குறைக்கப்படும் என்று தெரிவித்தது. அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தோம். படைப்பாக்கப் பணி என்பதால், 4 மணி நேரத்துக்கு மேல் தொடர்ச்சியாகப் பணியாற்ற முடியாது என்று வானொலி நிலையத் தலைவரிடம் பேசினோம், கடிதம் கொடுத்தோம். 

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 4 மணி நேரப் பணி கொடுக்கப்பட்டது. ஆனால் அதிலும் செக் வைத்தனர். உதாரணத்துக்கு ஒரு ஆர்ஜேவுக்கு 6 - 7 நிகழ்ச்சி என்றால் மீண்டும் 8 - 9, 10-11, 12-1 மணி வரை நிகழ்ச்சி என்று பிரித்துப் பிரித்துப் பட்டியலிடப்பட்டனர். இதன்மூலம் ஒருவர் 7 மணி நேரம் பணியில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்று வாட்ஸப் குழுவில் தெரிவித்தோம். (ஏனெனில் எங்களுக்கான வாராந்திர சந்திப்புக் கூட்டங்கள் எதுவும் பல ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை.) ஆனால் அதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.  

ஆர்ஜேக்களில் பெரும்பாலானோர் இந்த ஊதியத்தை நம்பி வாழ்வதால், எதிர்த்துப் பேசினால் நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று பயப்படுகின்றனர். ஆனால் சில ஆர்ஜேக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தோம். மீண்டும் ஏடிஜிக்கும் கடிதம் எழுதப்பட்டது.


AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

சில நாட்கள் கழித்து திடீரென ஒருநாள், மதியம் 2 மணிக்கு ஏடிஜியுடன் சந்திப்பு என்று 11.30 மணிக்கு வாட்ஸப் குழுவில் பதிவிட்டனர். பெரும்பாலானோர் உடனடியாகக் கிளம்பிவந்து, சந்திக்க முடியாது. வெளியூரில் இருந்து வந்து, நிகழ்ச்சி செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இதனால் முன்கூட்டியே அறிவித்து, முறையாகச் சந்திப்பை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தோம். அதனால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பிறகு, வழக்கமாகக் குழுவில் அனுப்பப்படும் பணிநேர அட்டவணை (Duty Chart) எதுவும் பகிரப்படவில்லை. எந்தச் சூழலிலும் பணிக்கு வரத் தயாராக இருந்தவர்கள் சிலரிடம் பேசி, அவர்களை மட்டுமே வேலைக்கு வரவைத்தனர். 

இதுதொடர்ந்து நடைபெறுவதால், எதிர்த்துக் குரல் கொடுத்தவர்களை மட்டும் அழைக்கவில்லை. இதனால் பலருக்குப் பணியே கிடைக்கவில்லை. மாணவர்கள், தேர்வுக்குத் தயாராவோர் உள்ளிட்டோரும் ஆர்ஜேக்களாக இருக்கின்றனர். அவர்கள் மனம் தளர்ந்தனர்.

இரவு ஷிஃப்டுகளில் அழுத்தம்

மிகப் பெரிய ஹிட்டடித்த இரவு நேர ஷிஃப்டுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தனர். ஊதியத்தைக் குறைப்பதற்காக ஆர்ஜேக்களின் எண்ணிக்கையைக் குறைத்தனர். இதனால் ஆர்ஜேக்களின் உடல், மன நலமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட முக்கியமாக உணவு உட்கொள்ள இடவசதி, நல்ல கழிப்பறை வசதி ஆகியவை இல்லாமல்தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 


AIR: அரசு வானொலியில் ஆர்ஜேக்களுக்கு சம்பளக் குறைப்பு; நேரக் கட்டுப்பாடு... மூடுவிழாவுக்கு முன்னோட்டமா?

இந்தியாவில் பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட பல வானொலி நிலையங்களில் நிர்வாக ரீதியில் பல்வேறு மாற்றங்கள் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. அதேபோல பல்வேறு அலைவரிசைகளை ஒரே அலைவரிசையாக மாற்றவும் அரசு முயற்சிகள் மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருங்காலத்தில் வானொலி நிலையத்தையே மூடி, அந்த நிலத்தைத் தனியாருக்கு விற்கவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு பெயர் கூற விரும்பாத ஆர்ஜேக்கள் சிலர் தங்களின் மனக்குமுறலைக் கொட்டினர். 

வானொலிப் பாடல்கள் என்பது பெரும்பாலும் உழைக்கும் சாமானியர்களுக்கான வடிகால், உற்சாகம். அதை படைப்பாக்கத்துடன் அளிக்கும் ஆர்ஜேக்களுக்கு அழுத்தம் கொடுப்பதும், அந்தக் குரல்களின் குரலை ஒடுக்க நினைப்பதும், அலைவரிசைகளைக் குறைத்து வானொலி நிலையத்தையே மொத்தமாக மூட நினைப்பதும் சரியல்ல என்பதை ஆள்வோர் உணர வேண்டியது அவசியம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
ABP Premium

வீடியோ

Annamalai 2026 election | அரவக்குறிச்சிக்கு NO! தொகுதி மாறும் அண்ணாமலை? பாஜகவின் கொங்கு கணக்கு
Mamata banerjee on Amitshah | ”சீண்டிப் பார்த்தா அவ்ளோதான்! என்கிட்ட PEN DRIVE இருக்கு” அமித்ஷாவை மிரட்டும் மம்தா
Owaisi vs BJP | ’’முஸ்லிம் பெண் பிரதமாராவார்’’பற்ற வைத்த ஓவைசிகொதிக்கும் பாஜகவினர்
Vijay CBI Enquiry | ‘WITNESS’ to ‘SUSPECT’ !CBI விசாரணையில் TWIST?சிக்கலில் விஜய்?
Pongal Celebration |''பொங்கலோ பொங்கல்’’சமத்துவ பொங்கல் விழா களைகட்டிய தர்மபுரி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
Vande Bharat Sleeper: RAC, வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் கிடையாது.. வந்தே பாரத் ரயிலில் சூப்பர் வசதி!
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
PM Modi Campaign: மதுரை இல்லையாம்..! தலைநகருக்கு மாறிய பொதுக்கூட்டம் - மோடியின் ப்ளான் என்ன? கூட்டணி சாதிக்குமா?
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
கனமழை எச்சரிக்கை: 13 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Trump Tariff: மீண்டும் இந்தியாவிற்கு ஆப்பு..! 25 சதவிகித கூடுதல் வரியை அறிவித்த ட்ரம்ப் - ஈரான் வர்த்தக நாடுகள் ஷாக்
Parasakthi Box Office: 3 நாட்களுக்கே நாக்-அவுட் ஆன பராசக்தி.. ஃபயர் இல்லாத கலெக்‌ஷன், காத்து வாங்கும் தியேட்டர்கள்
Parasakthi Box Office: 3 நாட்களுக்கே நாக்-அவுட் ஆன பராசக்தி.. ஃபயர் இல்லாத கலெக்‌ஷன், காத்து வாங்கும் தியேட்டர்கள்
Pongal incentives: போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! யார் யாருக்கு எவ்வளவு ஊக்கத்தொகை தெரியுமா.?
போக்குவரத்து தொழிலாளர்கள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! யார் யாருக்கு எவ்வளவு ஊக்கத்தொகை தெரியுமா.?
Suzuki E-Access: எங்கள தாண்டி போய்ருவியா..! சுசூகியை கதறவிடும் போட்டியாளர்கள் - மின்சார அக்செஸ் செல்லுபடியாகுமா?
Suzuki E-Access: எங்கள தாண்டி போய்ருவியா..! சுசூகியை கதறவிடும் போட்டியாளர்கள் - மின்சார அக்செஸ் செல்லுபடியாகுமா?
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Pongal Holidays: மாணவர்களுக்கு குஷியான அறிவிப்பு! இத்தனை நாள் விடுமுறையா?சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..
Embed widget