மேலும் அறிய

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தமிழகத்தில் ஆட்சியர் அலுவலகங்களில் குவிந்த பெண்கள்..! ஏமாற்றத்துடன் திரும்பியது ஏன்?

”மகளிர் உரிமைத்தொகை குறித்து வாட்ஸ் அப்பில் வரும் தகவல் வதந்தி. பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம். இது போன்று தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர்கள் எச்சரிக்கை”

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமை தொகையானது சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களின் வங்கிக்கணக்கில் மாதந்தோறும் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பித்த சிலரது விண்ணப்பங்கள் பல்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் இத்திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில் ஆட்சியர் அலுவலகங்களில் இன்று முதல் 3  நாட்களுக்கு மனுக்களை அளிக்கலாம் என்றும், உடனே அந்த தொகை கிடைக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  இந்த தகவல் பெண்கள் மத்தியில் வேகமாக  பரவ நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் வந்து குவிந்தனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்த பெண்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விசாரித்து உள்ளே அனுப்பியுள்ளனர். ஆனால் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இருந்த அதிகாரிகள் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லை, அதுபோன்ற தகவல் வரவில்லை என்று கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் அங்குள்ள அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அப்போது அவர்கள் கூறும் பொழுது, வசதி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கூட அந்த தொகை கிடைக்கிறது. ஆனால் எங்களை போன்ற ஏழைகள் பலருக்கு இந்த தொகை கிடைக்கவில்லை, இன்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்தவுடன் அனைத்து வேலைகளையும் விட்டு விட்டு வந்தால் இங்கு அப்படி ஒரு தகவலே எங்களுக்கு வரவில்லை, பொய்யான தகவலை நம்பி வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இது எங்களை மேலும் மன வருத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்று புலம்பியபடி சென்றனர்.

நெல்லை மட்டுமின்றி விழுப்புரம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் இத்தகவலை நம்பி நூற்றுக்கணக்கான பெண்கள் குவிந்தனர். அவர்களிடமும் வாட்ஸ் அப்பில் வரும் தகவலை நம்பி யாரும் இங்கே வர வேண்டாம் என்று தெரிவித்து திரும்பி அனுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலங்களில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகங்களில் இருந்து மறுப்பு செய்திகளும் வெளியிடப்பட்டது.  மகளிர் உரிமைத்தொகை குறித்து வாட்ஸ் அப்பில் வரும் தகவல் வதந்தி. பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம். மேலும் இது போன்று தவறான தகவலை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்ற செய்தி அறிந்து அது  குவிந்த நிலையில் அது தவறான தகவல் என்று தெரிந்தவுடன் ஏமாற்றத்துடன் புலம்பியபடி திரும்பி சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Aarthi Issue | வீட்டுக்குள் விடாத ஆர்த்தி?ஜெயம் ரவி பரபரப்பு புகார்!”காரை மீட்டு கொடுங்க”Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Tirupati Laddu: சர்ச்சைக்கு பிறகு சக்கைப் போடு போடும் லட்டு விற்பனை! திருப்பதியில் அசத்தல்!
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
Breaking News LIVE, Sep 25: கைத்தறி நெசவாளர்களுக்கு விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
சுங்க கட்டணம் வசூல் ; இதுவரை கிடைத்த மொத்த தொகை எவ்வளவு? கேள்வி கேட்ட செல்வ பெருந்தகை
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
Quarterly Exam Holidays: வெளியான அறிவிப்பு; காலாண்டு விடுமுறை நீட்டிப்பு- பள்ளிகள் திறப்பு எப்போது?
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த  தஞ்சாவூர் மேயர்
ஆய்வின் போது செல்போன் பேசியபடியே வந்த பெண் பொறியாளர்: கடுப்பாகி பறித்த தஞ்சாவூர் மேயர்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Harsha Sai: இவரா? பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை புகார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
Drona Desai: ஒரே இன்னிங்சில் 498 ரன்கள்! யார் இந்த 18 வயது சிறுவன் த்ரோனா தேசாய்?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
லிப்ஸ்டிக் போட்டது ஒரு குத்தமா? மேயர் பிரியாவின் தபேதார் மாதவி அதிரடி இடமாற்றம்- பின்னணி என்ன?
Embed widget