மேலும் அறிய

TN RSS Rally: ஆர்.எஸ்.எஸ். பேரணி..! தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களா? அதிர்ச்சியில் உறைந்த அரசு தரப்பு வழக்கறிஞர்..!

தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் ஆர். எஸ். எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டதையடுத்து, தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் உள்ளதா என அரசு தரப்பு வழக்கறிஞர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தமிழ்நாட்டில் 50 மாவட்டங்களில் ஆர். எஸ். எஸ் அமைப்பு பேரணி நடத்த அனுமதி தரவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டதையடுத்து தமிழ்நாட்டில் 50 மாவட்டங்கள் உள்ளதா என அரசு தரப்பு வழக்கறிஞர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். 

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதிக்க வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விவாதத்தின்போது, ஆர்.எஸ். எஸ் தரப்பு வழக்கறிஞர் ,"50 மாவட்டங்களில் பேரணி தடுத்து நிறுத்தம் என கூற, உடனே அரசு தரப்பு வழக்கறிஞர் தமிழ்நாட்டில் ஏது 50 மாவட்டங்கள் என அதிர்ச்சியில் பதில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,  வழக்கு மார்ச் மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் அரசு தரப்பில், கோவை வெடிகுண்டு சம்பவம் உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம் மேற்கொண்டது. அதேபோல்,  உளவுத்துறை அறிக்கை சமர்ப்பித்தபோதும் அதை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், எங்கெல்லாம் பேரணி நடத்த அனுமதி, என்னென்ன விதிமுறைகள் என்பதை தெரிவிக்க கால அவகாசம் தேவை என தமிழ்நாடு அரசின் வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

அதேபோல், ஆர். எஸ். எஸ் தரப்பில், “பேரணி நடைபெற்றால் சட்டம் -  ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற தமிழ்நாடு அரசின் வாதத்தில் உண்மையில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது” என வாதத்தின்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர், தமிழ்நாட்டில் உள்ள 50 இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும்,  44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக்காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழ்நாடுஅரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஆர். எஸ். எஸ் தரப்பில் தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி நிபந்தனையுடன் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்திகொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து இருந்தது. மேலும், தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதர 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. இந்த 6 இடங்களில் பேரணி நடத்த  2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், நிபந்தனையுடன் கூடிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தகது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget