மேலும் அறிய

கரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு  ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10- ந் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு  ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தொடங்கி வைத்தார். சமரச நாள் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில்  சமரச நாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி ஐந்து ரோடு பகுதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ஊர்வலமானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அண்ணா வளைவு, நால்ரோடு, ஜவகர்ப ஜார், மாரியம்மன் கோவில் மற்றும் அரச மரத்து ரோடு வழியாக வந்து மீண்டும் பழைய நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இது தவிர ஆட்டோ மூலமாக சமரச மையத்தின் பணிகள் மற்றும் சமரசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.   கலந்து கொண்டவர்கள் ஊர்வலத்தில் கரூர் மகிலா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி நசீமா பானு,


கரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

 

தலைமை குற்றவியல் நடுவர் ராஜலிங்கம். முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, மாவட்ட சமரச மைய செயலாளர் பாக்கியம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரா வர்மா, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி உமா மகேஸ்வரி, நீதித்துறை நடுவர் எண் 1 அம்பிகா, விரைவு நீதிமன்றம் நீதித்துறை நடுவர் நித்தியா மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 13-ந் தேவிவரை கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்யவும், பிறப்பு, இறப்பு சான்று பெறவும், புதிய குடிநீர் இணைப்பு பெறவும், குடிநீர் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சம்மந்தமான புகார்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணுதல் தொடர்பாக சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 

 


கரூர் நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு ஊர்வலம்

 

மேயர் கவிதா கணேசன் தலைமையில், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களை நேரடியாக மாநகராட்சி மேயர் இடம் வழங்கினர் பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்படும் மாநகராட்சி தொடர்பான கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணும் வகையிலும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
ABP Premium

வீடியோ

ESCAPE ஆன விழா குழுவினர்
Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
கூட்டணியை உறுதி செய்த அமமுக.? 13 நாட்களுக்கு பிறகு வாய் திறந்த டிடிவி - சொன்னது என்ன.?
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Alanganallur Jallikattu 2026 LIVE: சீறும் காளைகள்.. அடக்க துடிக்கும் வீரர்கள்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேரலை!
Volvo EX60 with Gemini AI: இப்போ காரோட பேசிட்டே போகலாம்! கூகுள் ஜெமினி ஏஐ உடன் வால்வோ EV SUV; யம்மா.! இவ்வளவு ரேஞ்சா.?
இப்போ காரோட பேசிட்டே போகலாம்! கூகுள் ஜெமினி ஏஐ உடன் வால்வோ EV SUV; யம்மா.! இவ்வளவு ரேஞ்சா.?
Embed widget