மேலும் அறிய

''மொத்தம் 4500 குடும்பங்கள்.. அதில் 4000 குடும்பம் மிலிட்டரி'' - இது ராணுவப்பேட்டையின் கதை!

வேலூரில் ஒரு கிராமம் கடந்த 90  வருடத்திற்கும் மேலாக தங்களது கிராமத்தை ராணுவ பணிக்காக  தத்துக்கொடுத்துள்ளனர் .

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து நம் நாட்டின் விடுதலைக்காக தங்களது இன்னுயிர் நீத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் , தியாகிகளையும் நினைவுகூரும் வகையில் இன்று  75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம் . இந்தியக் குடிமக்களாகிய நாம், நமது தேசப்பற்றை , வெவ்வேறு விதமாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் , இரண்டாம் உலக போர் காலம் தொட்டே  வேலூரில் ஒரு கிராமம் கடந்த 90  வருடத்திற்கும் மேலாக தங்களது கிராமத்தை ராணுவ பணிக்காக  தத்துக்கொடுத்துள்ளனர் .
 
கம்மவான்பேட்டை என்னும் இந்த கிராமத்தின் பெயரை, ராணுவப்பேட்டை என்று செல்லமாகப் பெயர் மாற்றிச் சென்றிருக்கிறார் அப்போதைய ஆளுநர் கே கே ஷா  . 
 

'மொத்தம் 4500 குடும்பங்கள்.. அதில் 4000 குடும்பம் மிலிட்டரி'' - இது ராணுவப்பேட்டையின் கதை!
 
வேலூர் மாவட்ட தலைநகரிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கம்மவான்பேட்டை என்கிற ராணுவப்பேட்டை கிராமம் .இந்த கிராமத்தில் தற்சமயம் சுமார் 4500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . இதில் கிட்டதட்ட 4000 குடும்பத்தினர் தங்களை முழுமையாக ராணுவத்தில் ஈடுபடுத்திக் கொண்டவர்களே  . மீதம் இருக்கும் 500 குடும்பத்தினர் மட்டுமே விவசாயம் உள்ளிட்ட பிற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் .
 
ஒவ்வொரு குடும்பத்திலும் , குறைந்தது பட்சம் 2 இல் இருந்து 5 ராணுவ வீரர்கள் வரை உள்ளனர் . ராணுவம் மட்டும் இல்லாமல் , கப்பல் மற்றும் விமானப்படையிலும் இந்த தேசபற்றுமிக்க கிராமத்தின் இளைஞர்கள் சேவை செய்து வருகின்றனர் .  இன்றைய தேதியில் கம்மவான்பேட்டை கிராமத்திலிருந்து சுமார் 3000 பேர் , ராணுவம் உட்பட முப்படையிலும் பணிபுரிந்து வருகின்றனர் .
 

'மொத்தம் 4500 குடும்பங்கள்.. அதில் 4000 குடும்பம் மிலிட்டரி'' - இது ராணுவப்பேட்டையின் கதை!
 
 
மேலும் இந்த கிராமத்தில் , ராணுவ குடும்பத்தினற்குள்ளே தான்  பெண்  கொடுப்பது மற்றும்  எடுப்பது என்ற வாய்மொழி ஒப்பந்தம் போட்டுகொண்டு  கடந்த 4 தலைமுறைகளாக , ராணுவப்பணியில் இல்லாத குடும்பத்தில் சம்மதம் செய்வதில்லை என்ற கொள்கையை பின்பற்றிவருகின்றனர் . 
 
இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர் எல் ஏழுமலை வயது 37  என்பவர் ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய போது , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 25 ,000 பேர்  தற்சமயம்  ராணுவத்தில் உள்ளனர் . இதில் 3000  பேர் கம்மாணவன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள்  .
 
மேலும் 1972 ஆம் ஆண்டு ஒரு அரசு விழாவிற்குப் பங்கேற்க வந்த  ,முன்னாள் தமிழக ஆளுநர் கே கே ஷா வருகை தந்தபொழுது , அவரை வரவேற்பதற்காக , எங்கள் கம்மவான்பேட்டை கிராமத்தைசேர்ந்த முன்னாள் இன்னல் ராணுவவீரர்களென 1000 திற்கும் மேற்பட்டவர்கள்  ராணுவ சீருடையில் , எங்கள் கிராமத்தில் வரவேற்பு கொடுத்தனர் , "இந்த சிறிய கிராமத்தில் இவ்வளவு ராணுவ வீரர்களா என்று ஆச்சர்யம் அடைந்த முன்னாள் ஆளுநர் ஷா , எங்கள் கம்மவான்பேட்டை கிராமத்தை , இனிமேல் செல்லமாக ராணுவப்பேட்டை என்றுதான் அழைக்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றார் . அன்றிலிருந்து  , எங்களது ஊரைச் , சுற்றுவட்டார கிராமத்தில் இருப்பவர்கள்  ராணுவப்பேட்டை என்றே அழைக்கின்றனர் .
 

'மொத்தம் 4500 குடும்பங்கள்.. அதில் 4000 குடும்பம் மிலிட்டரி'' - இது ராணுவப்பேட்டையின் கதை!
 
இந்த வீரமிக்க மண்ணில் அடுத்த தலைமுறையினர் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில்  6 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை  ராணுவத்தில் சேர விருப்பம் உள்ளவர்களுக்கு , ஓட்டப்பந்தயம் , கயிறு ஏறுதல் , உயரம் தாண்டுதல் , நீளம் தாண்டுதல் உள்ளிட்ட அணைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது . என்று பெருமிதத்தோடு  தெரிவித்தார் .
 
100 அடி கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வீரவணக்கம் 
 
75 ஆவது சுதந்திர தினமான இன்று , சுதந்திரப் போராட்டம் , மற்றும் தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்த , சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் , ராணுவ வீரர்களைப் போற்றும் வகையில் , கம்மவான்பேட்டை கிராமத்தில் சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.   
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget