![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
PMK Anbumani Ramadoss: ஆன்லைன் சூதாட்டத்திற்கு 45-ஆவது உயிரிழப்பு : ஆளுனர் மனம் இரங்காதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழ்நாடு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
![PMK Anbumani Ramadoss: ஆன்லைன் சூதாட்டத்திற்கு 45-ஆவது உயிரிழப்பு : ஆளுனர் மனம் இரங்காதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி PMK leader Anbumani Ramadoss asks questions Governor on 45th death due to online gambling PMK Anbumani Ramadoss: ஆன்லைன் சூதாட்டத்திற்கு 45-ஆவது உயிரிழப்பு : ஆளுனர் மனம் இரங்காதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/19/26d93004a5e3f9b4111afba2bcd26b941676812518248571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஆன்லைன் சூதாட்டம் எந்த அளவுக்கு மனிதகுலத்தை வேட்டையாடுகிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நிகழ்ந்திருக்கும் 45 ஆவது தற்கொலை இதுவாகும்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மோகன்குமார் என்ற பட்டதாரி ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உடல்நல பாதிப்புகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4)#OnlineGamblingKills
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 19, 2023
ஆன்லைன் சூதாட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் கோரிக்கை ஆகும். அதற்காக திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 125 நாட்களாகியும் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் மறுப்பது ஏற்க முடியாதது ஆகும்.
ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது.
ஆன்லைன் சூதாட்டமும், அதற்கு அடிமையாகி இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வதும் தொடர்கதையாவது அனுமதிக்க முடியாது. எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.(4/4)@CMOTamilnadu @rajbhavan_tn
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) February 19, 2023
எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்; அதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் eன பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)