மேலும் அறிய

பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை: அண்ணாமலை வியப்பு

பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தமிழகம் வரும் தகவல் எங்கிருந்து பரவியதென்றே தெரியவில்லை என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிரதமரின் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்படும் அப்படியிருக்க வரும் 30ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் எங்கிருந்து பரவியதென்று தனக்குத் தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று பிரகடனப்படுத்தி, தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்ந்த உத்தமத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் தலைசிறந்த பேச்சாளராகவும், ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர் என்று நூல்கள் கூறுகின்றன. இது போன்று மேலும் பல்வேறு சிறப்புகளுக்குரிய அவரின் 115-வது ஜெயந்தி விழா வரும் அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தேவர் ஜெயந்திக்காக பிரதமர் நரேந்திர் மோடி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனைக் குறிப்பிட்டே பிரதமரின் பயணம் இரண்டு மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்படும் அப்படியிருக்க வரும் 30ஆம் தேதி தேவர் குரு பூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருவதாக தகவல் எங்கிருந்து பரவியதென்று தனக்குத் தெரியவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதுபோல் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை தேவர் ஜெயந்தியில் வைத்து பிரதமர் மோடி அறிவிப்பதாக வெளியான தகவலும் பொய் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தேவர் ஜெயந்தியின்போது பிரதமர் மோடி, முத்துராமலிங்கத் தேவரை நினைவுகூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், ‘மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்டவர்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

2 மாதங்களுக்கு 144 தடை:
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நாளை மறுநாள் (செப். 11) கடைபிடிக்கப்படுகிறது. பசும்பொன்னில் தேவர் குரு பூஜை விழா அக். 28 முதல் அக். 30 வரை நடைபெறுகிறது.

இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை எஸ்பி தங்கதுரை பரிந்துரையின்படி, கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பிறப்பித்துள்ளார். இத்தடை உத்தரவு அக்டோபர் 31 வரை அமலில் இருக்கும். இக்கால கட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதியின்றி நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் குரு பூஜைக்கு அஞ்சலி செலுத்த வர விரும்புகின்றவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்ற பிறகுதான் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget