மேலும் அறிய

கரும்பை போல் பனங்கிழங்கையும் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை

’’கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக வெளியூர் வியாபாரிகள் பனங்கிழங்கு கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருவதாக பனைத்தொழிலாளர்கள் வேதனை’’

தைப்பொங்கலுக்கு தயாராகும் பனங்கிழங்கு : தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெள்ளை மற்றும் வர்ணம் பூசி சுத்தம் செய்து பயன்படாமல் உள்ள பழைய பொருட்களை அப்புறப்படுத்தி புதிய பொருட்களை வீடுகளில் வைத்து அலங்கரிப்பார்கள். விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் கதிர்களுக்கு தைப்பொங்கலன்று  பொங்கலிட்டு வழிபட்டு அறுவடை பணியை துவக்குவார்கள். தவிர மக்கள் வீடுகளுக்கு முன்பு பொங்கலிட்டு, மஞ்சள் குலை , பனங்கிழங்கு ஆகியவற்றை வைத்து சூரியனை வழிபட்டு நோய் நொடியின்றி அனைவரும் நலத்துடனும் செல்வத்துடனும் வாழ இயற்கை அன்னை துணைபுரிய வேன்டியும் வழிபாடு செய்வார்கள். பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவகுணமுள்ள பொருளாகும். பனை மரம் அடி முதல் நுனி வரை அனைத்தும் பயன் தரக்கூடியது என்பதால் பனை விதையில் முளைக்கும் பனங்கிழங்கு தைப்பொங்கலன்று முக்கியத்துவம் பெறுகிறது. 


கரும்பை போல் பனங்கிழங்கையும் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் பனங்கிழங்கு அறுவடை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நல்ல விளைச்சல் இருந்தும் ஓமிக்காரன், கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக பனங்கிழங்கினை வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருவதாக பனைத்தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்


கரும்பை போல் பனங்கிழங்கையும் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை
 
பனை மரத்தில் கொத்து கொத்தாக காய்க்கும் நுங்கை வெட்டாமல் விட்டுவிட்டால் நன்றாக பழுத்து பனம் பழமாகிவிடும். மரத்தில் இருந்து பனம்பழத்தை வெட்டி குழியில் போட்டு புதைத்து, பனங்கிழங்கு சாகுபடி செய்கிறார்கள். 3 மாதத்தில் பனங்கிழங்கு விளைந்து அறுவடைக்கு தயராகி விடுவது வழக்கம். செம்மண், களிமண் மற்றும் மணற்பாங்கான இடங்களில் அதிகளவில் பனங்கிழங்கு பயிரிடப்படுகிறது. மணற்பாங்கான இடங்களில் விளையும் பனங்கிழங்கு நல்ல திரட்சி மற்றும் ரூசியாக இருப்பது அவ்வகை பனங்கிழங்குகளை மக்கள் அதிகமாக விரும்பவது இயற்கை. அந்த வகையில் கோவில்பட்டி அருகே வைப்பாற்று கரையோரம் உள்ள மணற்பாங்கான இடத்தில் விளையும் பனங்கிழங்கிற்கு நல்ல மவுசு உண்டு.

கரும்பை போல் பனங்கிழங்கையும் பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் - அரசுக்கு பனைத்தொழிலாளர்கள் கோரிக்கை
 
தூத்துக்குடி மாவட்டம் வைப்பாற்று பகுதியில் கரையோரங்களில் உள்ள பகுதியில் சுமார் ஒரு லட்சம் பனை மரங்கள் உள்ளன. இதில் அயன்வடமலாபுரம், முத்தலாபுரம், தாப்பாத்தி, கீழ்நாட்டுக்குறிச்சி, நம்பிபுரம், ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதியில் ஆண்டுதோறும் பனை தொழிலாளர்கள், விவசாயிகள் சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பனங்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு சாகுபடி செய்யப்படும் பனங்கிழங்குகள் கோவில்பட்டி, சாத்தூர், ராஜபாளையம், மதுரை நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் பனங்கிழங்குகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வது வழக்கம். இந்தாண்டும் வழக்கம் போல பனங்கிழங்கு சாகுபடி செய்து இருந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பனங்கிழங்கு விற்பனை பாதிக்கப்பட்டு இருந்தது.
 
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக இருந்த காரணத்தினால் பனைத்தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். பொங்கல் பண்டிகைக்கு சில தினங்கள் உள்ள நிலையில் தற்பொழுது விறுவிறுப்பாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு போல இந்தாண்டும்  25 கிழங்கு கொண்ட கட்டு 100 ரூபாய்க்கும், 50 கிழங்கு கொண்ட கட்டு 200 ரூபாய்க்கும், 100 கிழங்கு கொண்ட கட்டு 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக டிசம்பர் கடைசி முதல் ஜனவரி முதல் வாரத்திற்குள் அறுவடை முடிவடைந்து விற்பனை நடைபெற்று விடும். ஆனால் தற்பொழுது கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக வெளியூர் வியாபாரிகள் பனங்கிழங்கு கொள்முதல் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். உள்ளுர் வியாபாரிகள் மட்டும் தற்பொழுது கொள்முதல் செய்து வருகின்றனர். பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால் வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் பனைத்தொழிலாளர்கள் உள்ளனர். தமிழக அரசு பொங்கல் பரிசுவுடன் கரும்பு வழங்குவது போல பனங்கிழங்கினையும் பனைத்தொழிலாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வழங்கினால் தங்களுடைய வாழ்வாதரம் செழிக்கும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை
Nagpur Couple Viral Video : விபத்தில் இறந்த மனைவிஉதவிக்கு வராத மக்கள் பைக்கில் எடுத்து சென்ற கணவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
ரிப்பன் மாளிகை போராட்ட களமல்ல; தூய்மைப் பணியாளர்களுக்கு ஆக.31 வரை கெடு - மேயர் பிரியா கூறியது என்ன.?
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
கட்சியில் பெயர் வாங்க கல்வி நிலையங்களை பயன்படுத்துவதா? ஆளுநரை புறக்கணித்த மாணவி- கொந்தளித்த அண்ணாமலை
Chennai Traffic Changes: சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
சுதந்திர தின கொண்டாட்டம்; சென்னைல முக்கிய சாலைகள்ல போக்குவரத்து மாற்றம் - முழு விவரம்
BJP Vs CONG.: குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
குடியுரிமை இல்லாத சமயத்தில் சோனியாவுக்கு ஓட்டுரிமை வந்தது எப்படி.?; ஆதாரத்துடன் பாஜக கேள்வி
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
’’தமிழ்நாட்டுக்கு எதிரானவர்’’ ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்த மாணவி: நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்!
Pakistan PM: ‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
‘அந்நியன்‘ போல் பேசும் பாகிஸ்தான்; தண்ணீருக்காக கெஞ்சவும் செய்யுறாங்க, மிரட்டவும் செய்யுறாங்க
Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 14-ம் தேதி எங்கெங்க மின் தடை செய்யப் போறாங்கன்னு தெரிஞ்சுக்கோங்க
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
எட்றா வண்டிய அமெரிக்காவுக்கு.. அடுத்த மாதம் செல்லும் பிரதமர் மோடி..! இரக்கம் காட்டுவாரா ட்ரம்ப்?
Embed widget