மேலும் அறிய

P Chidambaram: 'சம்பந்தம்.. சம்பந்தம் இல்லாத கேள்விகளை கேட்கிறீர்கள்..'நிருபர்களிடம் டென்ஷன் ஆன ப.சிதம்பரம்..!

செங்கோல் விவகாரத்தில் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு. மற்றவை எல்லாம் புனையப்படுவது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, "ஆலங்குடி, திருமயத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது தொடர்பான டெண்டருக்கு ஒப்புதல் வழங்கியுள்ளேன். எம்.பி.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருமயத்தில் புதிய நூலக கட்டிடம் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. கொத்தமங்கலத்தில் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் கட்டுவதற்க்கு 1.25 லட்சம் மதிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

"சம்மந்தமே இல்லாத கேள்விகள்”

பின்னர், நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் 450 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்களை எதிர்க்கட்சிகள் நிறுத்தினால் எளிதாக வெல்ல முடியும் நீங்கள் சொல்லி இருந்தீர்கள் என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு, ”திருமயத்தில் பதில் சொல்வதாகவும், இன்றைக்கு பேச வந்தது வேறு. ஆனால் நீங்கள் என்னமோ கேட்கிறீர்கள்" என்று பதிலளித்துள்ளார். 

மேலும் மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ”சம்மந்தமே  இல்லை...சம்மந்தமே இல்லாத கேள்விகள் கேட்கின்றனர்” என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.

”நிதியை கொடுப்பதும் ரத்து செய்வதும் மத்திய அரசு தான்"

இதனை தொடர்ந்து பேசிய அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏராளமான தேவைகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் நிதி  ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி அதிகரிக்க வேண்டும் என்பதோடு கொடுக்கின்ற நிதி குறைக்காமல் இருந்தாலே போதும்.  நிதியை கொடுப்பதும் அவர்கள் தான், நிதியை  ரத்து செய்வதும் மத்திய அரசு தான்" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

செங்கோல் விவகாரம் - புனைக் கதைகள்

”செங்கோல் விவகாரத்தில் வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது மட்டுமே உண்மையான வரலாறு, மற்றவை எல்லாம் புனையப்படுவது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்திருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் அங்கு நிறுவப்பட்டுள்ள செங்கோல் பற்றி புனை கதைகள் அதிகமாக வருகிறது. செங்கோல் பற்றி நேற்று வட ஆளுநர் ஒரு துணைக் கதையை கூறியுள்ளார். நேரு மற்றும் ராஜாஜியின் வரலாற்றை இரு வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்.

திருவாடுதுறை ஆதினம் 1947ல் விமானத்தில் செல்லவில்லை, ரயிலில் சென்றுதான் நேருவிடம் செங்கோல் வழங்கினார். திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் நேருவுக்கு செங்கோல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. நேருவுக்கு செங்கோல் உள்பட ஏராளமான பரிசுகள் வந்தன. அவை அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. தங்க செங்கோல் என்று தான் உள்ளது. வாக்கிங் ஸ்டிக் என்று அதில் குறிப்பிடவில்லை” என்றார் ப.சிதம்பரம்

”மணிப்பூர் மக்களுக்கு நீதி வேண்டும்"

தொடர்ந்து பேசிய அவர், ”இதுதான் நடந்தது. இந்த விவகாரத்தில் புனைக் கதைகளுக்கு முக்கியதுவம் தரத் தேவையில்லை. இதில் நடக்காததை எல்லாம் சொல்வது வேடிக்கையாக உள்ளது.  மணிப்பூர் கலவர களத்தில் இருந்து பிரதமர் ஒதுங்கி இருப்பது தான் வருத்தம் அளிக்கிறது. மல்யுத்த வீரர்கள் முப்பது நாட்களாக கோரிக்கை வலியுறுத்தி போராடுகிறார்கள் அவர்களை அழைத்து பேசாமல் கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது. ஜனநாயக நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு" என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Manipur CM Biren Singh: பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் ராஜினாமா.! திடீரென ஏன்?
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
Rohit Sharma: அடி.. அடி.. மரண அடி! ரோகித் சர்மா மிரட்டல் சதம்! வாயடைத்துப் போன ஹேட்டர்ஸ்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
வாட்ஸப்பில் ரீசார்ஜ், மின்சார கட்டணம் செலுத்தும் வசதி - மெட்டா தகவல்!
CM Fund: ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் மருத்துவ செலவை ஏற்கும் அரசு... நிதியுதவியும் அறிவித்த முதலமைச்சர்...
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
India vs England ODI: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 305 ரன்கள் இலக்கு!
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
Rohit Sharma: ஹிட்மேன் இஸ் பேக்! இடியாய் இடிக்கும் ரோகித் சர்மா - இடிந்து போன இங்கிலாந்து
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு அதிரடி அறிவிப்பு...
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
அஜித் இருக்கும்போது விடாமுயற்சியை இப்படி எடுத்தது ஏன்? மனம் திறந்த மகிழ் திருமேனி!
Embed widget