மேலும் அறிய

நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

தமிழகத்தில் வாடகையில் செயல்படும் 6900 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் - கரூரில் கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு.

தமிழகத்தில் வாடகையில் செயல்படும் 6900 நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் இருப்பதாக கரூரில் கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

 

69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயம், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். மேலும், மகளிர் சுய உதவிக்குழுக்கான கடன் தொகைகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ”துறை அமைச்சராக பொறுப்பேற்ற முதல் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்க உத்தரவிட்டேன். கரூர் மாவட்டத்தில் 84 சங்கங்கள் தான் இருக்கிறது. அனைவருக்குமான ஒரு அரசு உண்டு என்றால் அது நம் அரசு தான். அனைவரின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப 3,50 லட்சம் பேருக்கு உறுப்பினராக சேர்த்து 1,200 கோடி வழங்கப்பட்டது. 


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

இப்போது 7 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, 2000 கோடியை தாண்ட வேண்டும் என்று அடிப்படையிலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய உறுப்பினர்கள் சேர்க்க விதிகளை மாற்றம் செய்யப்பட்டு அனைத்து கட்சியினரையும் சேர்க்க உத்தரவிட்டேன். நிலமற்றவர்களும் கால்நடை வளர்ப்பு கடன் பெறலாம் என திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது.

தமிழகத்திலேயே அதிகமாக 1,18,000 பேர் சேலத்தில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்கள் இருந்தன. கடந்த காலத்தில 9200 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது 10,222 கோடி ரூபாய், கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள சங்கங்களுக்கு தலா 75 லட்சம்  கால்நடை பராமரிப்பு திட்டத்திற்கு கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.


நியாயவிலை கடைகளுக்கு புதிதாக சொந்த கட்டிடம் - கூட்டுறவுதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் 59 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் 100 கோடியை தாண்டும். அந்த திட்டம் சிறப்பான திட்டம். இந்த கடன் திட்டத்தில் கரூர் முதலிடத்தில் வரும். மாற்றுத் திறனாளிகள் கடன் வட்டி இல்லாமல் வழங்கி ஒளி ஏற்ற நம் அரசு தயாராக இருக்கிறோம். மாணவர்களும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேரலாம், அவர்களுக்கும் கடன் வழங்கப்படும். சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் கலைஞர் உருவாக்கிய திட்டமான மகளிர் சுய உதவிக்குழு திட்டம் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்ற நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டது.

 ரேசன் கடைகள் என்றால் தனி அடையாளமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்கிறார்
தமிழகத்தில் உள்ள 6900 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகிறது. இவற்றை
புதிதாக சொந்த கட்டிடம் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். அதனால் டெபாசிட் செய்து வருகிறார்கள். ஊதிய உயர்வை நிச்சயம் நிறைவேற்றி தரப்படும், தொடக்க வேளாண்மை சங்கங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் லாபம் ஈட்டி கார்பஸ் பண்ட் உருவாக்கி ஓய்வூதியம் வழங்கப்படும். பொதுமக்களின் நகைககள் மற்றும் டெபாசிட்களை மீட்ட அரசு இந்த அரசு” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget