அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
"அரசு கல்வி நிறுவனங்களில் செவிலியர், மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது."

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதன் சார்ந்த நிறுவனங்களில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு செவிலியர் (Nursing), மருந்தாளுநர் (Pharmacy) மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான (Allied & Healthcare) பட்டப்படிப்பு (Degree), பட்டயப் படிப்பு (Diploma) மற்றும் சான்றிதழ் (Certificate) படிப்புகளுக்குத் தகுதியான மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (Plus Two) பயின்று தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இச்சேர்க்கையின் கீழ் பி.எஸ்.சி. செவிலியர் (B.Sc. Nursing), பி.பார்ம் (B.Pharm), மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் (MLT), கதிரியக்கவியல் (Radiology), டயாலிசிஸ் தொழில்நுட்பம் (Dialysis) மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு தொழில்நுட்பம் (Operation Theatre Technology) போன்ற சிறந்த வேலைவாய்ப்புத் திறன்மிக்க படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர் சேர்க்கையானது, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தேர்வுக் குழுவின் (Selection Committee) மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் கலந்தாய்வு மூலம், முற்றிலும் மதிப்பெண் தகுதி மற்றும் இடஒதுக்கீடு விதிகளின்படி மட்டுமே நடைபெறும்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மேல்நிலைத் தேர்வில் (பிளஸ் டூ / +2) தகுதியான அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும். மேலும், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (Multi-Purpose Hospital Worker) படிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஒவ்வொரு படிப்பு வாரியான விரிவான தகுதி வரம்புகள், வயது வரம்பு மற்றும் இதர முக்கிய விபரங்கள் அனைத்தையும் அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல் தொகுப்பில் (Prospectus) விரிவாகக் கண்டறிந்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கியக் காலக்கெடு
தகுதியுடைய மாணவர்கள் இந்த மருத்துவப் படிப்புகளுக்கு www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியின் வாயிலாக மட்டுமே ஆன்லைன் (online) மூலமாகத் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பட்டப்படிப்புகளுக்கு (Degree Courses) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 21.06.2026 முதல் தொடங்கி 03.07.2026 அன்று மாலை 5.00 மணி வரை நீடிக்கிறது. அதேபோல, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு (Diploma & Certificate Courses) விண்ணப்பிக்க விரும்புவோர் 27.06.2026 முதல் 15.07.2026 அன்று மாலை 5.00 மணி வரை தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். அரசு நிறுவனங்களில் இப்படிப்புகளுக்கான கட்டணம் மிகவும் குறைவானதாகும். குறிப்பாக, பொது செவிலியர் மற்றும் தாதியர் பட்டயப் படிப்பிற்கு (DGNM) எவ்வித கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலவச உதவி மையம் (Help Desk)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகங்களோ அல்லது உதவியோ தேவைப்படும் மாணவர்களின் வசதிக்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிறப்பு உதவி மையம் (Facilitation Centre) அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்குத் தேவைப்படும் வழிகாட்டுதல்களைப் பெற இந்த உதவி மையத்தை 044-27426566 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது chemdeen006@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ தொடர்பு கொண்டு உரிய ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாணவர்களுக்கான வேண்டுகோள்
தகுதியுடைய மாணவர்கள், குறிப்பாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்துறை சார்ந்த சிறந்த வேலைவாய்ப்புத் திறன்களைப் பெற்றுப் பயனடையும் வகையில் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களுக்குரிய படிப்புகளுக்குக் குறிப்பிடப்பட்டுள்ள இறுதிக் காலக்கெடுவிற்குள் தவறாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Before You Go
RS Bharathi vs Minister Ramesh : "சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கு இல்ல" RS பாரதியை வெளுத்த அமைச்சர்
ட்ரெண்டிங் செய்திகள்






















