மேலும் அறிய

10 நிமிடத்தில் பதற்றமான திண்டிவனம்.... அமைச்சர் மஸ்தானுக்கு திண்டிவனத்தில் கருப்பு கொடி...எதற்கு தெரியுமா ?

அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திண்டிவனத்தில் பாமகவினர் கருப்பு கொடி...100க்கும் மேற்பட்ட பாமகவினர் கைது

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பம் கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி விஷ சாராயம் குடித்து 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதில் 50 க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்களில் 45 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதனை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 107 பெண்கள் உட்பட 416 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டிவனத்தை சேர்ந்த பிரபல கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தானின் தீவிர ஆதரவாளர் எனக் கூறப்படும் மரூர் ராஜ தனது மனைவியை திமுகவில் கவுன்சிலராக வெற்றி பெற வைத்தார். பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் திண்டிவனம் வரும் போதேல்லாம் அவருடன் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் சாராயம் விற்கும் போது போலீசார் கைது செய்ய முற்பட்டால் நான் அமைச்சர் ஆதரவாளர் என கூறி மிரட்டி வந்தார். திண்டிவனத்தில் வெளிப்டையாக சாராயம் விற்பனையை தொடங்கி விற்பனை செய்தார். மேலும் இதனை கண்டித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பலமுறை இதுபோன்று நடைபெறுவதாக கூறியிருந்தார், போலீசார் கண்டும் காணாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மரக்காணம் எக்கியர் குப்பம் மீனவர் கிராமத்தில் விஷ சாராயம் அருந்தி 14 பேருர் உயிரிழந்த நிலையில் போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடியாக சாராயம் வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில்,  திண்டிவனம் பிரபல சாராய வியாபாரி மரூர் ராஜவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட மரூர் ராஜா அமைச்சர் மஸ்தானுக்கு நெருக்கமானவர், திமுகவின் தொண்டராகவும் உள்ளார் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். அதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மஸ்தான், அவர் பாட்டாளி மக்கள் கட்சி,  அண்ணா திமுக ஆகிய கட்சிகளில் இருந்தவர். டாக்டர் ராமதாஸ், சி.வி. சண்முகத்திற்கும் உறவினர் தான். அவர் எல்லாம் கட்சி மாறுவதோ, புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து எதையும் சொல்லக்கூடாது. மரூர் ராஜாமீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரின் தவறை நாம் ஆதரிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

கள்ளச்சாராய வியாபாரி மரூர்ராஜா பாமகவைச் சேர்ந்தவர், டாக்டர் ராமதாசுக்கு உறவினர் என்று அமைச்சர் மஸ்தான் கூறியதைக் கண்டித்து இன்று மாலை திண்டிவனம் தீர்த்தகுளம் அருகே நடைபெற இருந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தர இருந்த அமைச்சர் மஸ்தானுக்கு கருப்பு கொடி காட்டுவதற்காக  பாமகவினர் திட்டமிட்டு இருந்தனர். அதற்காக பாமக மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திண்டிவனம் நேரு வீதியில் கருப்பு கொடி உடன் ஊர்வலம் சென்றனர், அப்போது பாமகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் பாமகவினர் 150‌பேர் கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!Mohammed Shami controversy | ரமலான் நோன்பு.. அவமதித்தாரா முகமது ஷமி? இஸ்லாம் சொல்வது என்ன?Mayor Issue | “பொண்ணுனா கேவலமா போச்சா” கடலூர் மேயர் Vs அதிகாரிகள் மோதல் பின்ணனி என்ன? | Cuddalore

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
Chennai Suicide: சென்னையில் பயங்கரம்..! மருத்துவர் குடும்பத்தோடு தற்கொலை, சிறுவர்கள் உட்பட 4 பேர் பலி
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
TN Railway Projects: நிலுவையில் 17 ரயில்வே திட்டங்கள் - காத்துக்கிடக்கும் தமிழக மக்கள், ஈரோட்டிற்கு ஏமாற்றமே..!
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Chennai Bus Pass: சென்னை மக்களுக்கு ஜாக்பாட்.. AC பஸ்ஸிலும் வருகிறது பஸ் பாஸ் முறை.. 
Top 10 News Headlines: ரூ.65 ஆயிரத்தை நெருங்கும், 2027 உலகக் கோப்பையில் ரோகித், மாயமாகும் காயங்கள் - டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines: ரூ.65 ஆயிரத்தை நெருங்கும், 2027 உலகக் கோப்பையில் ரோகித், மாயமாகும் காயங்கள் - டாப் 10 செய்திகள்
Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி  தியேட்டர்!  சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?
Sri Brinda Theatre closed :மூடு விழா கண்ட ரஜினி தியேட்டர்! சோகத்தில் ரசிகர்கள்! அடுத்து என்னவாக போகுது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Sheikh Hasina: ரைட்ரா..! “மீண்டும் பிரதமராகும் ஷேக் ஹசீனா, உதவிய பிரதமர் மோடிக்கு நன்றி” - தவறு யாருடையது?
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன  உயிர்கள்
Pakistan Train: முடிவுக்கு வந்த ரயில் கடத்தல் - உயிர் தப்பிய 340 பயணிகள் - துப்பாக்கிகளால் பறிபோன உயிர்கள்
Embed widget