மேலும் அறிய

”அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா

அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா  மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு, காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

”அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறும்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 1250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 730 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி அரசினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 350 பேரில் 40 பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 150 பேர் கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 400 படுக்கைளில் சிகிச்சை அளிக்க கோரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் லிக்யூடு ஆக்சிஜன் டேங்க் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

”அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

இது செயல்பாட்டுக்கு வந்தால் 150 ஆக்சிஜன் படுக்கை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக இதுவரை 35 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க  காவல்துறை, வருவாய்துறையினர் அடங்கிய பறக்கும்படை  அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இன்றிலிருந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், காவல்நிலைய எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Jayakumar Press Meet | ’’நெல்லை ’கதாநாயகன்’ வாக்குப்பதிவு மோசடிகள்’’ ஜெயக்குமார் பகீர் புகார்Lok sabha Election 2024 | டிராக்டரில் வாக்கு எந்திரம் வாக்குறுதியை நிறைவேற்றிய அரசுSajeevan Sajana | இந்திய அணியில் கனா திரைப்பட நடிகை..யார் இந்த சஜீவன் சஜனா?BJP Cadre cut finger | அண்ணாமலைக்காக விரலை வெட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி! கோவையில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
IPL 2024 PBKS vs MI Match Innings: பயம் காட்டிய பஞ்சாப்; கடைசி ஓவர் வரை போராடி வெற்றியை ருசித்த மும்பை!
Kejriwal: அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா? நடந்தது என்ன?
அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல சதி.. இன்சுலின் கொடுக்க அதிகாரிகள் மறுப்பா?
PBKS vs MI Innings Highlights:  ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
PBKS vs MI Innings Highlights: ஹர்ஷல் பட்டேல் பிரமாதம்.. இறுதியில் கெத்து காட்டிய பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
Lok Sabha Election 2024: மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாதா? தேர்தல் ஆணையம் சொன்னது என்ன?
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Lok Sabha Elections 2024: பூத் ஸ்லிப்பை ஆன்லைனில் பெறுவது எப்படி? உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிவது?- வழிகாட்டல் இதோ!
Tata Motors: தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
தமிழ்நாட்டில் ரூ. 9,000 கோடி முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்; தயாராகும் ஜாகுவார் கார்
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
கொடைக்கானல்: குதிரைகள் மூலம் மலை கிராம வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
WhatsApp: விரைவில் அறிமுகமாகும் ரீசன்ட் ஆன்லைன், நோட்ஸ் வசதிகள் - வாட்ஸ் அப் அப்டேட்!
Embed widget