மேலும் அறிய

”அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா

அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஆட்சியர் அரசு மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். 

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா  மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு, காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

”அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறும்போது, மயிலாடுதுறை மாவட்டத்தில் 1250 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 730 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை, சீர்காழி அரசினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் 350 பேரில் 40 பேருக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 150 பேர் கொரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 400 படுக்கைளில் சிகிச்சை அளிக்க கோரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் லிக்யூடு ஆக்சிஜன் டேங்க் அமைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது.

”அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும்” - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்

இது செயல்பாட்டுக்கு வந்தால் 150 ஆக்சிஜன் படுக்கை நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதற்காக இதுவரை 35 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை கடுமையாக்க  காவல்துறை, வருவாய்துறையினர் அடங்கிய பறக்கும்படை  அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது என்றார். தொடர்ந்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா இன்றிலிருந்து ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், காவல்நிலைய எல்லைகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரே நாளில் 21 மாவட்டங்களில் ஆட்டம் காட்டப்போகும் கனமழை; வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
ஒரே நாளில் 21 மாவட்டங்களில் ஆட்டம் காட்டப்போகும் கனமழை; வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை - லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா?
சிங்கப்பெண் படை வெறும் பேப்பரில்தானா? - கோயம்பேடு பெண் கொலை விவகாரத்தில் முதல்வர் விஜய்யை சாடும் டிடிவி தினகரன்
சிங்கப்பெண் படை வெறும் பேப்பரில்தானா? - கோயம்பேடு பெண் கொலை விவகாரத்தில் முதல்வர் விஜய்யை சாடும் டிடிவி தினகரன்
தவெக அமைச்சர்கள் ஜோக்கர்கள்... முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடும் விமர்சனம்!
தவெக அமைச்சர்கள் ஜோக்கர்கள்... முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கடும் விமர்சனம்!
Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
JEE Advanced 2026 Results: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்க்‌ஷீட் பெறுவது எப்படி? கட் ஆஃப் எவ்ளோ?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
நாளை முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள்.! தாயுமானவர் திட்டம் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
ஷிவராஜ்குமார் நடிக்கும் படத்தில் மீண்டும் ஹீரோவாக அபிஷன் ஜீவிந்த்..புதிய பட ப்ரோமோ
Embed widget