மேலும் அறிய

Heroin, Wheat : ஹெராயினா, கோதுமையா? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டார்: உயர்நீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய வழக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தான் கொண்டு சென்ற பொருள் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது. அது கோதுமை அல்லது புளி என்றே தான் நினைத்து எடுத்துச் சென்றதாகக் கூறினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு தீர்ப்பு கவனம் பெற்றது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தான் கொண்டு சென்ற பொருள் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது அது கோதுமை அல்லது புளி என்றேதான் நினைத்து எடுத்துச்சென்றதாகக் கூறினார். இதனையடுத்து நீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது.

முன்னதாக விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நபர் சென்னையில் இருந்து குவைத்துக்கு ரூ.1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் செப்டம்பர் 2014ல் நடந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் தான் உயர்நீதிமன்றம் இப்போது அந்த நபரை விடுவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அந்த நபர் கூறிய வார்த்தைகள். அவர் தனது நண்பர் கொடுத்த பார்சலை எடுத்துச் செல்லவே அஞ்சியதாகக் கூறினார். ஏனெனில் அதுதான் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். வெங்கடேஸ்வர ராவ் பார்சலை கொடுத்தபோது அதில் கோதுமையும், புளியும் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அந்தப் பார்சலைக் கொடுத்த நபருக்கும் வெங்கடேஸ்வர ராவுக்கும் நடந்த உரையாடல் அனைத்துமே வெங்கடேஸ்வர ராவின் அறியாமையை நிரூபிக்கும் வண்ணமே இருந்துள்ளது. முன்னதாக என்சிபி (  Narcotic Control Bureau ), போதை தடுப்புக் குழுவானது, அனதம் குண்ட்லுரு, தெரிந்தே ஒன்றரை கிலோ ஹெராயினை கொண்டு சென்றார். அதனை சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது அது அனைத்துமே தடை செய்யப்பட்ட சைக்கோட்ராபிக் சப்ஸ்டன்ஸ் என்பது நிரூபணமானது என்று தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்திருந்தது.

செப்டம்பர் 2014ல் குண்ட்லுருவை சென்னை விமான நிலையத்தில் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை என்சிபி அலுவலகத்திற்கு ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் சென்னை விமான நிலையம் வழியாக குவைத்துக்கு ஒன்றரை கிலோ போதைப் பொருள் கடத்துவதாகவும் அதில் ஒரு பாக்கெட் மெட்டாம்ஃபெடமைன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வெங்கடேஸ்வர ராவின் ஃபோன் காலை போலீஸார் ட்ரேஸ் செய்தபோது அவர் குண்ட்லூருவிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது. அதனை வைத்தே போலீஸா விமான நிலையத்தில் அவரை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த குண்ட்லுரு, எனக்கு மட்டும் அது போதைப் பொருள் என்று தெரிந்திருந்தால் நான் போலீஸார் சோதனை போடும்போது எல்லா பைகளையும் நானாகவே எடுத்துக் காட்டியிருப்பேனா என்று வினவினார். மேலும் வெங்கடேஸ்வர ராவ் ஆரம்பித்தில் இருந்தே ஹெராயினை கோதுமை மாவு, புளி என்றே கூறியுள்ளார். குண்ட்லுருவும் கோதுமை மாவு, புளி என்றே நினைத்துப் பேசியுள்ளார். ஆனால், சதி அவருக்கு தெரிந்திருக்கவில்லை. நீதிமன்றம் குண்ட்லுருவின் அறியாமையை உணர்ந்து அவரை விடுவித்துள்ளது.

ஆனால், 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தண்டனையை குண்ட்லுரு அனுபவித்துவிட்டார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் ஒரு நிரபராதி 8 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.