மேலும் அறிய

கரூர்: குளித்தலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் மனு

குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில்  இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி சிந்தலவாடி ஊராட்சி பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம்  மனு கொடுக்கும் இயக்கம்.

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சிந்தலவாடி ஊராட்சி பொதுமக்கள் மனு.

குளித்தலை ஆர்டிஓ அலுவலகத்தில்  இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி சிந்தலவாடி ஊராட்சி பொதுமக்கள், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம்  மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.


கரூர்: குளித்தலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் மனு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இது சுமார் 195 பேருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டு மனை  பட்டா இடத்தினை அளந்து பட்டா தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


கரூர்: குளித்தலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் மனு

 

 பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாதால் சிந்தலவாடி ஊராட்சிக்குட்பட்ட அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி, சிந்தலவாடி, கீழ சிந்தலவாடி, மத்தி பட்டி பாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் இயக்கம்  என்ற பெயரில் இன்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்ட 195 பயனாளிகளுக்கு பட்டாவினை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவும் சிந்தலவாடி ஊராட்சியில் வீட்டுமனை இல்லாத பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தும் கண்டன கோஷங்களையும் முழக்கமிட்டனர்


கரூர்: குளித்தலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க பொதுமக்கள் மனு

அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சென்ற சிந்தலவாடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 195 பேருக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இடத்தினை அளந்து பட்டா வழங்க கோரியும், 130 பேர் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கக் கோரி புதிய கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முரளிதரனிடம் அளித்தனர்.


விரைவில் குடிநீர் வினியோகம் சீராகும்.

கரூர் மாவட்டம் கட்டளையில் காவிரி குடிநீர் நீரூற்றும் நிலையத்தில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டதால் கரூர் மாநகராட்சி பகுதிகளில் விரைவில் குடிநீர் விநியோகம் சீராகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கரூர் மாநகராட்சியில் புதிதாக விரிவாக்கப்பட்ட பகுதிகளான தான்தோன்றி மலை, சனபரட்டி பகுதிகளை சேர்த்து 48 வார்டுகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் 290.74 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதில் காவிரி ஆற்றில் வாங்கல், கட்டளை ஆகிய பகுதிகளில் நீர் ஊற்று நிலையத்திலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு இருக்கிறது. 

 இந்த நிலையில், கட்டளை நீரூற்று நிலையத்தில் சமீபத்தில் வெள்ளம் சூழ்ந்து குடிநீர் குழாய் அடித்து செல்லப்பட்டது. இதனால் தான்தோன்றி மலை ஜனபிரட்டி பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தற்போது நீரூற்று நிலையத்தில் சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளது. இது குறித்து கரூர் மாநகராட்சி பொறியாளர் நக்கீரனிடம் கேட்டபோது, கட்டளை நீரூற்று நிலையத்தில் இரண்டு மின் மோட்டார்களும் சரி செய்யப்பட்டு விட்டதால் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்கும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

CM Vijay: மெட்ரோவில் சென்ற விஜய்... முத்தம் கொடுத்து தோளில் சாய்ந்து கொண்ட பெண் - நெகிழ்ச்சி வீடியோவை பாருங்க
CM Vijay: மெட்ரோவில் சென்ற விஜய்... முத்தம் கொடுத்து தோளில் சாய்ந்து கொண்ட பெண் - நெகிழ்ச்சி வீடியோவை பாருங்க
WRD Department : ’திமுக ஆட்சியில் நீர்வளத்துறையிலும் Party Fund?’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
’நீர்வளத்துறையிலும் Party Fund’ தீவிர விசாரணை ; சிக்கும் அதிகாரிகள்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மை? முன்னோர்களின் பழக்கத்தில் மறைந்திருக்கும் அறிவியல்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget