மேலும் அறிய

கரூர் அருகே தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசு

பொய்யான ஆவணங்களை கொடுத்து விலையுயர்ந்த ரத்தின கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

கரூர் அருகே செயல்படும் தனியார் ஜெம்ஸ் பாலிஸ் செய்யும் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசுபடுவதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சிக்குட்பட்ட கல்லுமடை காலனி அருகே தனியார் ஜெம்ஸ் பாலிஸ் செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிறுவனத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்திற்கு பிளாஸ்ட் பைப் தரைக்கு மேலே அமைத்து கழிவு நீரை கொண்டு சென்று அய்யம்பாளையம் அருகே தண்ணீர் ஓடையில் வெளியேற்றி வருகின்றனர். காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றி வருகின்றனர். 

 

 


கரூர் அருகே தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசு

ரசாயனம் கலந்த அந்த தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் ஓடை முழுவதும் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. இந்த தண்ணீர் தொடர்ந்து தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் குடிநீர் கிணறுகளுக்குள் இறங்கி அவை மாசுபட்டு விட்டது. இதனால் இப்பகுதி விவசாய நிலங்கள், கிராம மக்கள், அரசுப் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மாவட்ட நிர்வாகத்திடமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

 

 


கரூர் அருகே தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசு

இந்த நிறுவனம் ஜெம்ஸ் பாலிஸ் செய்வதாக அரசுக்கு தெரிவித்து விட்டும், கிணறு வெட்டுவதாக உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று விலையுயர்ந்த ரத்தின கற்களை வெட்டி எடுத்து வெளி சந்தையில் விற்று கொள்ளை லாபம் சம்பாதிப்பதுடன், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

 


கரூர் அருகே தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசு

பொதுவாக அப்பகுதியில் இயற்கையாகவே விலையுயர்ந்த பல்வேறு வண்ண ரத்தின கற்கள் கிடைக்கும் பகுதி என்பதால், கிணறு வெட்ட 60 அடி ஆழம் மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கிணறு வெட்டுவதாகவும், அதில் வரும் தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் லட்ச கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வருவதாகவும், 4 பக்கமும் 9 அடி உயரத்திற்கு தகரத்தில் சுற்றுச் சுவர் அமைத்து கிணறு வெட்ட வேண்டிய அவசியம் என்ன, சட்டவிரோத செயல்கள் நடைபெறும் இந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

 

 


கரூர் அருகே தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நீர் ஆதாரங்கள் மாசு

இது தொடர்பாக அந்நிறுவன பணியாளர்கள் மூலம் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, அரசின் அனுமதியுடன் தான் தொழில் செய்து வருவதாகவும், வெளி மாநிலத்தில் இருப்பதால், வரும் புதன் கிழமை உங்களை அழைத்துச் சென்று நிறுவனத்தை காட்டுவதாக தெரிவித்தார். தனக்கு வேண்டாதவர்கள் இது போன்ற பொய்யான தகவல்களை ஆட்சியரிடம் மனுக்களாக கொடுப்பதாக தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Asia Cup 2025: ஆசிய கோப்பைக்கு கல்தா! இந்தியா எடுத்த அதிரடி முடிவு?
Asia Cup 2025: ஆசிய கோப்பைக்கு கல்தா! இந்தியா எடுத்த அதிரடி முடிவு?
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Joe Biden: ஜோ பைடனுக்கு புற்று நோய்! உடல் நிலை எப்படி இருக்கு? முழு விவரம்
Joe Biden: ஜோ பைடனுக்கு புற்று நோய்! உடல் நிலை எப்படி இருக்கு? முழு விவரம்
Tata Harrier EV: AWD தொழில்நுட்பம், 500 கிமீ ரேஞ்ச், விலை விவரம் - ஹாரியர் மின்சார கார் அறிமுகம் எப்போது?
Tata Harrier EV: AWD தொழில்நுட்பம், 500 கிமீ ரேஞ்ச், விலை விவரம் - ஹாரியர் மின்சார கார் அறிமுகம் எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bihar Student  | ”நான் முதல்வன் திட்டம்தான் காரணம்” தமிழில் 93 மதிப்பெண்! அசத்திய பீகார் மாணவி!YouTuber Jyoti Malhotra |பாகிஸ்தானுக்கு SPY! கையும் களவுமாய் சிக்கிய பெண்! யார் இந்த ஜோதி மல்ஹோத்ரா?Sujatha Vijayakumar vs Jayam Ravi |’’நான் பணப்பேயா ?பொய் சொல்லாதீங்க மாப்பிள்ளை’’கொந்தளித்த மாமியார்OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Asia Cup 2025: ஆசிய கோப்பைக்கு கல்தா! இந்தியா எடுத்த அதிரடி முடிவு?
Asia Cup 2025: ஆசிய கோப்பைக்கு கல்தா! இந்தியா எடுத்த அதிரடி முடிவு?
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Abu Saifullah Nizamani: ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது அட்டாக் - சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு சைஃபுல்லா - 3 சம்பவங்கள்
Joe Biden: ஜோ பைடனுக்கு புற்று நோய்! உடல் நிலை எப்படி இருக்கு? முழு விவரம்
Joe Biden: ஜோ பைடனுக்கு புற்று நோய்! உடல் நிலை எப்படி இருக்கு? முழு விவரம்
Tata Harrier EV: AWD தொழில்நுட்பம், 500 கிமீ ரேஞ்ச், விலை விவரம் - ஹாரியர் மின்சார கார் அறிமுகம் எப்போது?
Tata Harrier EV: AWD தொழில்நுட்பம், 500 கிமீ ரேஞ்ச், விலை விவரம் - ஹாரியர் மின்சார கார் அறிமுகம் எப்போது?
TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
TN Weather: சட்டென மாறிய வானிலை - சென்னையில் பரவலாக மழை, 27 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
GT Vs DC: டெல்லியை புரட்டி எடுத்த குஜராத் - பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மூன்று அணிகள் - லக்னோ பிழைக்குமா?
GT Vs DC: டெல்லியை புரட்டி எடுத்த குஜராத் - பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மூன்று அணிகள் - லக்னோ பிழைக்குமா?
IPL 2025 GT Win Over DC: சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
சதத்தை சதத்தால் அடித்த குஜராத்; டெல்லியை சிதறவிட்டு புள்ளிப்பட்டியலில் முதலிடம்
தவெகவை கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
கூட்டணியில் இணைக்க துடிக்கும் பாஜக.. தயங்குகிறாரா விஜய்? தமிழிசை நறுக்
Embed widget