மேலும் அறிய

Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!

Jayalalitha Vedha Illam: வேதா இல்லத்தின் பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து ஜெயலலிதா இரட்டை விரலை அசைப்பார். ஜெயலலிதா பால்கனி பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற விமர்சனம் வந்ததும் இந்த வேதா இல்லத்தால்தான்.

தமிழ்நாடு அரசியலில் கோபாலபுரம், ராமாவர தோட்டம்,  போயஸ் கார்டன் வேதா இல்லம் ஆகிய இடங்கள்  முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ்நாட்டின் மூன்று முகங்களாக வாழ்ந்த கருணாநிதி,  எம்ஜிஆர்,ஜெயலலிதா ஆகியோர் வாழ்ந்த அந்த இடங்களில் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிப்போட்ட பல திட்டங்கள் பிறந்தன.

குறிப்பாக போயஸ் கார்டன் பல்வேறு காலகட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதும் சரி, உயிரிழந்த பிறகும் சரி போயஸில் இருக்கும் பரபரப்புக்கும், செய்திகளுக்கு பஞ்சமில்லை. அப்படி இன்று மீண்டும் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது வேதா இல்லம். கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அரசு சார்பில் கையகப்படுத்தப்பட்டது. 


Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!

இதற்கு ஜெ வாரிசுகளான தீபாவும், தீபக்கும் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்றார்கள். அவர்கள் தாக்கல் செய்த வழக்கில், “வேதா இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டது செல்லாது. தீபாவிடமும், தீபக்கிடமும் வேதா இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்” என தீர்ப்பளித்துள்ளது.இந்தச் சூழலில் வேதா இல்லத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவரது தாயார் சந்தியாவும் இணைந்து தற்போது வேதா இல்லம்  அமைந்திருக்கும் 24,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தை 1967ஆம் ஆண்டு ரூ.1.32 லட்சத்திற்கு  இடத்தை வாங்கினர். 24,000 சதுர அடியில் மொத்தம் 21,662 சதுர அடிக்கு வேதா இல்லம் கட்டப்பட்டுள்ளது. இந்த இல்லத்தின் கிரகப்பிரவேசம் 1972ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படுகிறது.  


Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!

இதற்கிடையே துரதிர்ஷ்டவசமாக வேதா இல்லம் முழுமை அடையும் முன்னரே ஜெயலலிதாவின் தாயார் சந்தியா உயிரிழந்துவிட்டார். அதன் பின்பு தனிமையே துணை என்று இருந்த ஜெயலலிதா அரசியலுக்குள் வருவதற்கு காலம் கட்டளையிட்டது. அந்தக் காலகட்டத்தில் பல முக்கிய முடிவுகளை வேதா இல்லத்தில் வைத்தே ஜெயலலிதா எடுத்தார்.

அதேபோல், போயஸில் தொண்டர்களை சந்தித்தால் வேதா இல்லத்தின் பால்கனியிலிருந்து அவர்களைப் பார்த்து ஜெயலலிதா இரட்டை விரலை அசைப்பார். ஜெயலலிதா பால்கனி பாலிடிக்ஸ் செய்கிறார் என்ற விமர்சனம் வந்ததும் இந்த வேதா இல்லத்தால்தான்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் வலதுபுற கட்டடத்தின் கீழ்  பகுதியில் தனி பாதுகாவலருக்கான அறையும், இரண்டாவது தளத்தில் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றனுக்கென்று தனி அறையும்  இருக்கும். மூன்றாவது தளத்தில் முதலமைச்சரின் தனி செயலாளருக்கான அறையும், முக்கிய கட்டடத்தின் மேல் தளத்தில் ஜெயலலிதாவுக்கான தனி அறையும் அமைந்திருக்கும்.  ஜெயலலிதாவின் அறைக்குள் வெளி நபர்கள் யாருக்கும் அனுமதி இல்லை சசிகலாவைத் தவிர. 


Vedha Illam: அதிகாரம் ஒருங்கிணைந்த ஒரே இடம்... சாதா இல்லம் இல்லை இது... வேதா இல்லம்!

ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி சசிகலாவுக்கு வேதா இல்லத்தில் இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.  அதுமட்டுமின்றி பார்வையாளர்களுக்கென தனி அறையும் அமைக்கப்பட்டிருந்தது. இப்படி பிரமாண்டமான வேதா இல்லம் இனி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபாவிடமும், தீபக்கிடமும் செல்லவிருக்கிறது.

பல நல்ல முடிவுகளும், சர்ச்சையான முடிவுகளும், அதிமுகவினர் பல பேரின் தலையெழுத்தும் எழுதப்பட்ட வீடான வேதா இல்லத்தை இருவரும் பத்திரமாக பாதுகாத்து நல்லமுறையில் பராமரிக்க வேண்டுமென்பதே ரத்தத்தின் ரத்தங்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Embed widget